கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - பூக்களின் கதை
- வசந்த் என் பிள்ளைப் பிராயத்தின் ஞாபக மிச்சங்கள் வேற விதம். ரோஜாக்களின் மீதிருக்கும் வண்ணத்துப் பூச்சிகளை நாங்கள் பிடிக்க முயலும்போதுதான் சாப்பிடத் தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வருவாள் அம்மா. தப்பிக்க முயன்று ஓடி மல்லிகைச் செடியருகே மாட்டிக் கொள்வோம் வீடுகள் பெருகிவிட்டன இன்று. யந்திரங்களின் பிடியில் சிக்கிச் சுழல்கிற என் மகனுக்குப் பூக்களைப் பற்றிய அக்கறையில்லை. எனக்கோநிரம்ப ஆசை. வரப்போகிற பேரனுக்காய் என் சின்னவயதுக் கதைகளை வெள்ளிதோறும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்... வந்து போகிற பூக்காரியின் கூடைப்பூக்களிலிருந்து! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - பூக்களின் கதை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -