கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - தலைகீழ்ப் பூக்கள்
- வசந்த் விளையாட்டாய் வீசிக்கொண்டிருந்தது காற்று. பெருங்காற்றிலிருந்து தப்ப முடியாமல் உதிர்தலுக்கு அஞ்சி உதிர்ந்து கொண்டிருந்தன ஒவ்வொன்றாய். இலைகளாய் பூக்களாய் இருந்த மரம் சதைப்பற்றெல்லாம் உரிய எலும்புக்கூடாய் மாறிற்று. சட்டென்று ஒரு கணம்தான்.... தன் கிளைவேர்களைக் காற்று மண்ணில் ஆழ்பரப்பி, பூமிக்கடியிலிருந்த வேர்க்கிளைகளில் பூக்களாய், இலைகளாய் பூத்துக்கொண்டது மரம். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - தலைகீழ்ப் பூக்கள் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -