கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - நீச்சல்
- வசந்த் எல்லோரும் இங்கு நீச்சல் கற்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே இங்கு நீந்த வருகிறது. சிலர் வெளியில் தெரியும்படி நீந்துகிறார்கள். சிலர் நீருக்கு அடியிலேயே நீந்துகிறார்கள். சிலர் சில நேரம் தெரிந்தபடியும் சில நேரம் தெரியாதபடியும் நீந்துகிறார்கள். என்னையும் சிலர் நீந்த அழைக்கிறார்கள். நீச்சல் அறிந்தால்தான் கரையேற முடியுமென்று கவலையூட்டுகிறார்கள். மெல்ல புன்னகைக்கிறேன். அவர்களுக்கு எப்படிச் சொல்லுவேன் நானொரு மீன்குஞ்சென்று. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - நீச்சல் - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - சிலர், நீந்துகிறார்கள்