கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - பயணக் கவலை
- வசந்த் நீண்ட நெடும் பயணம் பக்கத்துணை யாருமில்லை பயணம் புறப்பட்ட எனக்கு. வழியனுப்ப வந்தவர்கள் வரும் என்று சொன்ன சங்கடங்கள் ஏராளம். வழி குழம்பிய காடு வழிப்பறிகள் பயம் சீறத்துடிக்கும் பாம்புகள் தினவெடுத்த புலிகள் கொடும் போய்களும், கோட்டான்களுமென்று. புறப்பட்ட எனக்கென்னவோ பயணம் பற்றிய கவலைகள் ஏதுமில்லை. போகிற வழியில் உதிர்ந்து கிடக்கும் புதுமலர்கள் பூட்ஸில் நசுங்கிவிடக் கூடாதென்ற புதுக்கவலை மட்டும்தான். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - பயணக் கவலை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - பயணம்