பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
எயிற்றியர் குடிசை
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு கருப்பை யாடா |
85 |
தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை |
புல்லரிசி எடுத்தல்
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி யீன்பிண வொழியப் போகி நோன்கா |
90 |
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர் |
எயிற்றியர் அளிக்கும் உணவு
பார்வை யாத்த பறைதாள் விளவி | 95 |
னீழன் முன்றி னிலவுரற் பெய்து குறுங்கா ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று வல்லூற் றுவரி தோண்டித் தொல்லை முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி வாரா தட்ட வாடூன் புழுக்கல |
100 |
வாடாத் தும்பை வயவர் பெருமக னோடாத் தானை யொண்டொழிற் கழற்காற் செவ்வரை நாடன் சென்னிய மெனினே தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும் பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர் |
105 |
நீண்ட அடிமரத்தையுடைய இலவ மரத்தின் கிளைகளில் பூளாப்பூ நிறத்தில் பஞ்சு வெடித்திருக்கும் பச்சைக் காயினைப் போல் முதுகினை உடையது அணில். கருப்பை எனப்படும் வெள்ளெலியும் அப்படித்தான் இருக்கும். அணிலும் வெள்ளெலியும் அங்கே விளையாடுவதும் உண்டு. விளையாடாமல் போய் விடுவதும் உண்டு. பாலை நிலத்துப் பெண்கள் எயிற்றியர் எனப்படுவர். எயிற்றியர் குரம்பை அவர்கள் குரம்பை எனப்படும் கூரைக்குடிசை வீடுகளில் வாழ்ந்தனர். குடிசை ஈச்சமர இலைமடல்களால் வேயப்பட்டிருந்தது. எயிற்றி மான்தோலை விரித்துப் படுத்திருப்பாள். தகர் எயிற்றிக்குப் பக்கத்தில் குட்டி போட்டிருக்கும் செம்மறி ஆடு முடங்கிக் கிடக்கும். அந்தப் பெண்ணாட்டை விட்டுவிட்டு ஆண்ஆடு [தகர்] மேயச் செல்வது உண்டு. அந்தத் தகர் ஆட்டுக்கு ஆற்றின் மணல்படிவு போல் அலையலையாய்ப் படிந்த மயிர். கொழுத்த மடல்போல் காது. வேலின் தலைப்பகுதியைப் போலக் கூர்மையான கொம்புகள் – இருந்தன. எயிற்றி பணி எயிற்றியும் தன் பணியை மேற்கொள்ள வெளியே சென்றாள். இரும்பினால் செய்யப்பட்ட அம்பை நுனியில் செருகிய கோல் ஒன்றை எயிற்றி கையில் வைத்திருந்தாள். கரம்பை நிலத்தை (கரட்டு நிலத்தை) அக்கோலின் உளிவாயிலிலுள்ள கூரால் புழுதி பறக்கக் கிண்டினாள். பல் வெளுக்கும் புல் அந்தக் கரம்பை நிலத்துப் புழுதியில் முளைத்திருந்த ஒருவகைப் புல்லை எயிற்றியர் தம் வாயில் அடக்கியிருந்தனர். அது அவர்களது பல்லை வெண்மை பெறச்செய்து பாதுகாத்தது. (சுரை = சூரி, கூர்மை) எயிற்றி சமையல் பின்னர் தன் குடிசைக்கு வந்து சமைக்கத் தொடங்கினாள். முற்றத்தில் விளாமரத்து நிழல். அங்கே நிலப்பாறையில் அமைந்திருந்த உரல். அதில் நெல்லைப் போட்டு உலக்கையால் குற்றி அரிசி யாக்கினாள். அந்த மர நிழலின் ஒரு பக்கத்தில் பார்வை வலை விரிக்கப்பட்டிருந்தது. அந்த வலையில் விழுந்த பறவையையும் பக்குவம் செய்து சமைத்தாள். நீண்ட வானிக்கிணறு. அதனைத் தோண்டி முகந்த ஊற்றுநீரில் உலை வைத்தாள். முரமுரப்பான வாயையுடைய பழைய பானை. அதனை விறகடுப்பில் ஏற்றினாள். (அரிசி ஒன்று வெந்தும் ஒன்று வேகாமலும் இருந்தால் அது வாரம் பட்ட புழுக்கல். புலவு, அரிசி ஆகிய இரண்டில் ஒன்று வெந்தும் மற்றொன்று வேகாமலும் இருந்தால் அதுவும் வாரம்பட்ட புழுக்கல். எல்லாம் பக்குவமாக வெந்திருந்தால் அது வாராது அட்ட வாடூன் புழுக்கல்.) இப்படி வாராது அட்ட வாடூன் புழுக்கலை (= பிரியாணியை) எயிற்றி தேக்கு இலையில் படைத்து விருந்தூட்டினாள். அது தெய்வ மடை (அமிழ்தம்) போன்றது. அன்று அவள் எங்களுக்கு அதனை வழங்கினாள். இன்று உங்களுக்கும் அதனை வழங்குவாள். நீங்கள் செய்யவேண்டியது அரசனை வாழ்த்தல் நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அரசன் பெயரைச் சொன்னால் போதும். அவன் தும்பைப்பூ வாடாமல் போரில் முன்னேறும் வயவர் படையின் தலைவன். மற்றும் புறமுதுகிட்டு ஓடாத பெரும் படையையும் உடையவன். இத்தகைய போர்த்தொழிலில் சிறந்த கழலை அவன் காலிலே அணிந்தவன். அவன் செவ்வரை நாடன் (செந்நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன்.) நாங்கள் அவன் சென்னியம் (நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம்.) என்று சொன்னாலே போதுமானது. மேலே சொன்னவாறு விருந்தினைப் பெறுவீர்கள்.
பாலை நிலக் கானவர்களின் வேட்டை
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின் வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த வகழ்சூழ் பயம்பி னகத்தொளித் தொடுங்கிப் புகழா வாகைப் பூவி னன்ன வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்க |
110 |
மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட் |
கானவன் மதியப் பொழுது வரையில் காட்டுப் பன்றியை வேட்டையாடுவான். மான்கள் விளையாடி அடி பதிந்திருக்கும் நிலப்பகுதியில் காட்டுப்பன்றியின் அடியைப் பார்த்துக்கொண்டே செல்வான். பயம்பு நிலத்தில் இருக்கும் நீரில் புரண்டுவிட்டு பயம்புச் சேற்றுக்குள்ளே அது ஒளிந்திருக்கும். போற்றிப் புகலும் வாகைப்பூ என்பது போரின்போது நூடிக்கொள்ளும் வாகைப்பூ. புகலா வாகைப் பூ என்பது போரில் வெற்றி தந்த வாள். வாள் போல் வளைந்த வாய்பல் கொம்பினை உடையது அந்த ஏனம் என்னும் காட்டுப்பன்றி. காட்டுப்பன்றி வேட்டை கிடைக்காவிட்டால் அவன் வேறு வேட்டைக்குச் சென்றுவிடுவான்.
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித் தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக் |
115 |
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு மருஞ்சுர மிறந்த வம்பர்ப் |
எயினரது அரணில் பெறும் பொருள்கள்
பருந்துபட வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி வைந்நுதி மழுங்கிய புலவுவா யெஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட |
120 |
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின் வரைத்தேன் புரையுங் கவைக்கடைப் புதையொடு கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர்த் தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர |
125 |
வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக் கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற் கொடுவி லெயினக் குறும்பிற் சேப்பிற் களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன |
130 |
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின் வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர் |
முன்னிரவு வேட்டை வாய்க்காமல் போனால் பின்னிரவில் கானவன் முயல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். முயலின் காது தாமரை இதழ் போல இருக்கும். கானவர் வேட்டைநாயோடு முயல் வேட்டைக்குச் செல்வார்கள். இரண்டு வேலிகளுக்கு இடையே வலையைத் தொடுத்துக் கட்டுவார்கள். கருங்கண் என்பது கானவரின் கூர்மையான கண்ணைக் குறிக்கும். கடறு கூட்டுண்ணல் என்பது பலராகக் கூடி வழிமறித்துக் கொள்ளுதலைக் குறிக்கும்.முயல் தப்பிப் போக முடியாதவாறு கானவர் பலராகக் கூடி வேட்டையாடுவர். (இப்பகுதியில் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும்.) கானவரின் குடிசைப் பகுதிகளைக் கொடுவில் எயினக் குறும்பு என்று பாடல் குறிப்பிடுகின்றது. வேட்டையாடும் காட்டுப் பகுதியைத் தாண்டிச் சென்றால் வீட்டுப்பகுதி வரும். உயர்நிலை வரைப்பு அங்கே ஈட்டி, கேடயம், வில், அம்பு ஆகியவை கூரையில் சார்த்தப்பட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும். எஃகம் என்பது ஈட்டி. ஒவ்வாத பகைவர்கள் நடுங்கும்படியாக வீசியதால் கூர் மழுங்கிப்போய் புலவு வாயுடன் அந்த ஈட்டிகள் சார்த்தப்பட்டிருக்கும். இது நிகழ்ந்த போரிலும் ஈட்டிகள் சார்த்தப்பட்ட பகுதிகளிலும் பருந்துகள் வட்டமிடும். போரிடும்போது மார்புக் கவசமாக அணியப்படுவது பலகை. இதில் மணிகள் கோக்கப்பட்டிருக்கும். போர் முடிந்த பின்னர் அதுவும் வீட்டுக் கூரையில் ஈட்டியோடு சேர்த்துச் சார்த்தப்பட்டிருக்கும். உயரமாக ஊகம் புல்லால் வேயப்பட்ட குடிசைகள் அவை. அந்த வரைப்புக் குடிசைகளின் முன்புறம் பந்தல். பருத்த கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தல் அது. பந்தலில் பண்டங்களை வைத்துப் பாதுகாக்கும் புதைப்பகுதிகள் உண்டு. அப் புதைப்பகுதிக்கு முன்புறம் உடுக்கு தொங்கும். பந்தர்க்காலில் சங்கிலித் தொடரால் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட நாய் இருக்கும். வீட்டுப் பகுதிக்கு வெளியே தழைத்திருக்கும் முள்வேலியும், அதனைச் சுற்றி மிளைக் காடும் (புதர்முள் காடு), அதனை அடுத்து படப்பையும் (தோட்டம்) இருக்கும். தோட்டத்துக்கு வேலி. வேலியில் வாயில். வாயிலில் புதவு. (கதவு). புதவானது வேல்கள் பலவற்றை நிறுத்திச் செய்யப்பட்டது. குறுக்குமர நுகப் புதவுகளில் (துளைகளில்) வேல்களைச் செருகி அதனைச் செய்திருப்பர். எயினக் குறும்பில் விருந்து செந்நெல் அரிசி கொண்டு சமைத்த சோறு. முள்ளம்பன்றிக் கறிக்குழம்பு. உடும்புக்கறி வறுவல். இந்த விருந்தினை ஆங்காங்கே போகுமிடமெல்லாம் நீங்கள் பெறுவீர்கள். செந்நெல் (சிவப்பரிசி நெல்) ஒரு புன்செய்ப் பயிர். மேட்டு நிலத்தில் மழைநீரைக் கொண்டு விளையும். களர் நிலத்தில் வளர்ந்து காய்த்துப் பழுக்கும் ஈச்சம்பழம் போல இருக்கும். மனவு என்னும் முள்ளம் பன்றியும், உடும்பும் ஞமலி என்னும் வேட்டைநாய் பிடித்துத் தந்தவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, இருக்கும், எயிற்றியர், என்பது, அவன், எயிற்றி, அந்த, அரிசி, உண்டு, இலக்கியங்கள், போல், பொரும்பாணாற்றுப்படை, ஒன்று, கானவர், முயல், அங்கே, வேட்டை, கொண்டு, முன்புறம், நீங்கள், பத்துப்பாட்டு, குரம்பை, யாத்த, நிலத்தில், தகர், வாடூன், புழுக்கல், என்னும், வாகைப்பூ, கானவன், நாங்கள், பெறுவீர்கள், வாகைப், காட்டுப், ஞமலி, ஈட்டிகள், கூரையில், ஈட்டி, சார்த்தப்பட்டிருக்கும், பந்தல், செந்நெல், அதனைச், எயினக், கூடி, வேட்டைக்குச், காட்டுப்பன்றி, வாள், தலைவன், கானவரின், பலராகக், குறிக்கும், தந்த, வேகாமலும், நீண்ட, தெய்வ, நாடன், உடையது, எனப்படும், பாலை, வெள்ளெலியும், செவ்வரை, வயவர், குடிசை, சங்க, கருப்பை, வைந்நுதி, பார்வை, வேய்ந்த, நிலத்துப், பக்கத்தில், புலவு, இருந்தால், அதுவும், வாராது, போற்றிப், அட்ட, வெந்தும், பின்னர், கூர்மையான, காது, வெளியே, கரம்பை, வாயில், நிலத்தை, போரில்