பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
இளந்திரையனது மலையின் பெருமை
கின்னர முரலு மணங்குடைச் சாரல் மஞ்ஞை யாலு மரம்பயி லுறும்பிற் |
495 |
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின் மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற் செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கு மொளிறிலங் கருவிய மலைகிழ வோனே. |
500 |
கின்னரம் என்னும் சில்லு வண்டுகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அச்சம் தரும் மலைச்சாரலில் மயில்கள் மகிழ்ந்து விளையாடும். அந்த மரமடர்ந்த காடுகளில் ஆண் குரங்குகள் பாய்ந்து விளையாடும். அப்போது மண்ணில் வீழ்ந்த மலர்களைப் பெண்குரங்குகள் சீய்த்து விளையாடும். அங்கே விலங்குகள் துஞ்சும். புறவு என்பது முல்லைநிலம். அங்குள்ள குடில் முற்றங்களில் முனிவர்கள் தீ வளர்ப்பர். களிறுகள் கொண்டு வந்து தந்த விறகுகளைக் கொண்டு தீ வளர்த்து வேள்வி செய்வர். அருகில் தெளிந்த ஓளியுடன் பளிச்சிடும் அருவிகள் பல வீழ்ந்தோடும். இப்படிப்பட்ட மலைநாட்டை ஆளும் உரிமை பெற்ற அரசன் தான் தொண்டைமான் இளந்திரையன். ஏற்காடு அல்லது சேர்வராயன் மலைப்பகுதி தொண்டைமானின் ஆட்சிக்கு அக்காலத்தில் உட்பட்டிருந்தது போலும் சவ்வாது மலைப்பகுதி என்பது டாகடர் மா, இராசமாணிக்கனார் கருத்து.
தனிப் பாடல்
கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய், மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் - வெஞ் சின வேல் கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை யான் பயந்தேன்' என்னும் செருக்கு. |
இளந்திரையன் தொண்டையரின் வழித்தோன்றல்- மங்கித் தோன்றும் மழைமேகங்கள் முகந்து செல்லும்படி நீர் வழங்கும் கடல் இரவும் பகலும் தூங்காமல் ஆரவாரம் செய்துகொண்டிருப்பதற்குக் காரணம், வெஞ்சின வேலைக் கையில் ஏந்திக் கொண்டும், காட்டில் பூத்த பூவின் கண்ணி மாலையைத் தலையில் சூடிக்கொண்டும், பாயும் குதிரைமேல் செல்லும் திரையனைப் பெற்றுத் தந்த செருக்குத்தான். கான் பயந்த கண்ணி என்பது தொண்டைக் கொடியின் கண்ணிமாலை. தொண்டை = ஆதொண்டை = பல்லவம். ஆடி அம்மாவாசை நோன்பிற்கு உகந்ததாகப் போற்றப்படுவது ஆதொண்டங்காய். ஆதொண்டங் கொடியை அக்காலத்தில் மிகுதியாகக் கொண்டிருந்த நாடு தொண்டைநாடு. பிற்காலத்தில் காஞ்சியில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்த பல்லவரும் திரையன் மரபில் வந்தவர் என்பதை வெளிப்படுத்தும் சான்று இந்த வெண்பா.
பெரும்பாணாற்றுப்படை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், கொண்டு, பொரும்பாணாற்றுப்படை, என்பது, விளையாடும், பத்துப்பாட்டு, கான், கடல், கண்ணி, பயந்த, பகலும், தந்த, சங்க, என்னும், இளந்திரையன், மலைப்பகுதி, அக்காலத்தில்