பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பட் பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும் வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக் |
445 |
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத் துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப் |
உரும்பில் சுற்றம் என்பது அரசனின் உரிமைச் சுற்றம். ஆட்சி உரிமை பெற்ற அலுவலர்களும் இதனுள் அடங்குவர். அவனைப் போலவே அவனது இந்த உரும்பில் சுற்றத்தாரும் கூம்பாமல் மலர்ந்திருக்கும் உள்ளம் படைத்தவர். கொடை வழங்குதலையும் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டு செயல்படுபவர்கள். அரசன் இளந்திரையன் முறை (நீதி) வேண்டுபவர்களுக்கு முறை வழங்குவான். கீழைக் கடலில் தோன்றி வெளிச்சம் தரும் பகலவன் போல நீதி வழங்குவான். தனக்கு இன்ன குறை உள்ளது, அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டி வந்தவர்களுக்கு அவர்களின் குறையைத் தீர்த்து வைப்பான். மற்றும், யார் எதை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அதனை அருளி உதவுவான். உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் செல்ல வேண்டும்.
பாணன் அரசனைப் போற்றிய வகை
பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப் புலவர் பூண்கட னாற்றிப் பகைவர். |
450 |
கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும் வென்றி யல்லது வினையுடம் படினு மொன்றல் செல்லா வுரவுவாட் டடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக மள்ளர் மள்ள மறவர் மறவ |
455 |
செல்வர் செல்வ செருமேம் படுந வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத் தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி |
460 |
வந்தேன் பெரும வாழிய நெடிதென விடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக் கடனறி மரபிற் கைதொழூஉப் பழிச்சி நின்னிலை தெரியா வளவை யந்நிலை |
உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் சென்று அவனை வாழ்த்த வேண்டும். இப்படி யெல்லாம் சொல்லி அவனை வாழ்த்தலாம். பொறிவரிப் புகர்முகம் = புள்ளிகளையும் கோடுகளையும் முகத்தில் கொண்ட யானை, வயமான் = சிங்கம். கொடுவரிக் குறளை = வளைந்த கோடுகளையுடைய புலியின் குட்டி. யானை சிங்கத்தைத் தாக்கியது. தாக்கப்பட்ட சிங்கம் புலிக்குட்டிகளைத் தாக்க விரும்பி எழுந்தது போல இளந்திரையன் பகைவர்மேல் போருக்கெழுந்தான். மக்கள் – யானை, திரையன்- சிங்கம், பகையரசர் –புலி. முறையும், குறையும், வேண்டுவனவும் வழங்கும்படி வேண்டிய வண்ணம் இளந்திரையனாகிய சிங்கத்தை மக்களாகிய யானைக்கூட்டம் தாக்கியது. இளந்திரையன் புலவர்களுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்துவிட்டுச் சிங்கம் புலிக்குட்டியின் மீது பாய்வது போல் பகைவர்கள் மீது பாய்ந்தான். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். பகைவர்களின் காவல் மதில்கள் அவனுக்கு ஒரு பொருட்டு அன்று. பகைவர்களின் தலை முடிகளைப் (கிரீடங்களைப்) பறித்து வந்தான். அவன் கையிலிருந்த அவனது வாள் கண்டது வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை. எனவே அவனது வினையுடம்பைச் சுட்டாலும் அவனது வாள் அவனுடன் ஒன்றாக வைத்துச் சுடப்படும். பகைநாட்டை வென்று பெற்ற கொண்டிப் பண்டங்களே தொண்டைநாட்டுப் படைவீரர்களின் உணவு. இப்படிப்பட்ட தொண்டையர்களின் மரபுவழித் தோன்றலே! – 1 மள்ளர் = உடல் திற வீரர். மறவர் = படைத்திற வீரர். மள்ளருக்கும் மள்ளனே! – 2, மறவருக்கும் மறவனே! – 3, செல்வர்களுக்கும் செல்வனே! – 4, போரில் மேம்பட்டவனே! – 5, துணங்கையஞ் செல்வி = பார்வதி = அம்மை = மாயவள். இவள் மாமோடாகிய ஆகாயத்தில் நடனமாடினாள். அணங்கு = மருளாட்டம். கடலிலே சூரபன்மாவைக் கொன்றவன் முருகன். அவனை உண்டாக்கித் தந்தவள் பார்வதி. (இவள் மாயவள் உருவம் கொண்டு மரக்கால் ஆட்டம் ஆடினாள். இதனைக் …காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள். மாயவள் ஆடிய மரக்கால் ஆடல் … என்று மாதவி ஆடிய பதினோர் ஆடல்களில் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. – கடலாடு காதை) அருட்தெய்வமாகிய அம்மை அணங்காட்டம் ஆடிய போது அள்ளித் தரும் கொடையால் அவளை ஆற்றுவிப்பது போல வந்தவர்க் கெல்லாம் வரையறை இல்லாமல் வாரி வழங்கும் கொடையால் திரையன் என்று பெயர் பெற்றவனே (திரை = கடல் அலை) – 6 … பெரும இப்படிப்பட்ட நின் பெரும்புகழைப் பாடிக்கொண்டு வந்துள்ளேன். நெடிது வாழிய! … என்று சொல்லிக்கொண்டே உங்களிடமுள்ள பேரியாழை முறையாக மீட்டுங்கள். (பேரியாழ் மீட்டியதால் இவன் பெரும்பாணன். இவனை ஆற்றுப் படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப் படை.) உங்கள் கடமைகளை உங்களுக்குத் தெரிந்த அளவில் செய்து அவனைக் கைகூப்பித் தொழுங்கள். உங்களது வறுமை நிலையை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. அவனே தெரிந்து கொண்டு செயல்படுவான்.
பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க | 465 |
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி யந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப் பாசி யன்ன சிதர்வை நீக்கி யாவி யன்ன அவிர்நூற் கலிங்க மிரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக |
470 |
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை யரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின் தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்க லருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும் |
475 |
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின் மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந் தானா விருப்பிற் றானின் றூட்டி மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கு |
480 |
பரிசு வழங்குதல்
மாடுவண் டிமிரா வழல்தவிர் தாமரை நீடிரும் பித்தை பொலியச் சூட்டி யுரவுக்கடல் முகந்த பருவ வானத்துப் பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப் புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின் |
485 |
றொடையமை மாலை விறலியர் மலைய நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல் வளைகண் டன்ன வாலுளைப் புரவி துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி யரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலைத |
490 |
தொன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த விசும்புசெ லிவுளியொடு பசும்படை தரீஇ யன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர்க் |
இளந்திரையன் உணவு, உடை, பரிசில் தந்து பேணும் பாங்கு இப்பகுதியில் கூறப்படுகிறது. தன்னைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டான். உலகம் ஒரு நிலையில் நிற்பதில்லை. பொருள்களும் எண்ணங்களும் மாறி மாறி உருண்டோடிக் கொண்டே இருக்கும். உலகில் நிலையானது என்பது ஒருவனது செயலால் பிறருக்கு விளைவதை எண்ணிப் பார்க்கும் புகழோ, இகழோதான். இளந்திரையன் தனக்கு நற்பெயர் உலகில் அழிவு இல்லாமல் நிற்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காகத் தன் செயல்களைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டான். புத்தாடை - கிணற்றுப் பாசி போல் அழுக்குப் படிந்து கிழிந்துள்ள உங்களது ஆடைகளை நீக்கிவிட்டு, நீராவி போல் மென்மையும் தூய்மையும் கொண்ட புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சென்ற நீங்கள் மட்டுமல்லாமல் ஊரில் வாழும் உங்களது சுற்றத்தாரும் உடுத்திக் கொள்ளுமாறு தந்து உதவுவான். புழுக்கல் (பிரியாணி) - பலவகையான புலவுகளைச் சேர்த்துப் புழுங்கச் செய்த உணவை அவனே உங்கள்முன் நின்று கொண்டு ஊட்டுவான். எவ்வளவுதான் உண்டாலும் எப்படித்தான் சுவைத்துச் சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று சொல்லிப், பின்னும் உண்ணச் செய்ய வேண்டும் என்று எண்ணும் நிறைவுறாத ஆசையோடு ஊட்டுவான். கொடிய வாளைப் பிடித்துப் பிடித்து அதன் அழுத்தத்தால் காப்புக் காய்த்துப்போன தன் வலிமை மிக்க கைகளால் ஊட்டுவான். சமையல் தொழிலில் வல்லவன் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த புழுக்கலை ஊட்டுவான். அறுத்துப் போட்ட அரியிலேயே நன்றாக முற்றி விளைந்து தெரித்திருக்கும் நெல்லிலிருந்து உண்டாக்கிய அரிசியில் சமைத்த புழுக்கல் அது. விளையாத காரரிசிப் புழுக்கல் அன்று. அமுது என்பது குழம்பு. நல்ல மணமும், இனிய சுவையும் கொண்டது அந்த அமுது. உண்டவர் மீண்டும் மீண்டும் உண்ண விரும்பும் வகையில் வழி வழியாகச் சமைத்துப் பழகிய கைப்பக்குவத்தை உள்ளடக்கிப் புழுக்கிய உணவு அது. வானத்தில் மீன்கள் பூத்துக் கிடப்பது போல் பரந்த இடத்தில் உண்கல வட்டில்களைப் பரப்பிப் புழுக்கல் இட்டு ஊட்டுவான். அணிகலன் – (தாமரை) - மேகம் மேயும் வானத்தில் நிலா ஒளிர்வது போல், கரிய கூந்தலில் போடப்பட்ட பித்தைக் கொண்டையின் மேல் தாமரை ஒளிரும். வண்டுகள் மொய்க்காத பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை அழகு தோன்றும் வகையில் தானே தன் கைகளால் சூட்டி விடுவான். ஊட்டுவான்- பெற்ற மக்களுக்கு உணவு ஊட்டுவது போல ஊட்டுவான். அணிகலன் – மாட்டல் - கொண்டைமாலை பொன்னின் தொடையமை கொண்டை மாலை என்பது மாட்டல் கடலில் நீர் முகந்து சென்ற பருவ வானம் பகலில் பெய்துகொண்டு மின்னுவது போல் ஒளி வீசும் கொண்டை-மாலையை விறலியரின் கதுப்பில் சூட்டி வீடுவான். கதுப்பு என்பது காதுப் பக்கம் உள்ள மயிர். ஊர்தி – நாலு குதிரை பூட்டிய தேர் கடலின் சிறப்பை நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன. ஆசை கொள்ள வைக்கும் அந்தக் கடலிலுள்ள சங்குகள் போல் வெள்ளை நிறமுள்ள நான்கு குதிரைகள் பூட்டிய முத்துத் தேரைப் பரிசாக நல்குவான். ஊர்தி – சவாரிக் குதிரைகள் தன் கொடையில் அத்துடன் நிறைவடையாமல் படைக் குதிரைகளையும் பரிசாக நல்குவான். போர்க்களத்தில் பகைவர்களைத் தொலைத்து வெற்றி கண்ட போது அவர்கள் விட்டுச் சென்ற குதிரைகள் அவை. வானத்தில் பறப்பது போல் தாவிச் செல்லும் நடையோட்டம் கற்றவை அவை. இப்படி உடை, உணவு, அணிமணி, ஊர்திகள் முதலானவற்றை அவனிடம் பெறக் காத்திருக்க வேண்டுவதில்லை. அவனைப் பார்த்த அன்றே பெற்றுத் திரும்பலாம். பெற்ற வளங்களைத் தம் வரவுக்காகக் காத்திருக்கும் மற்றவர்களுக்கு விரைந்து உதவி மகிழலாமல்லவா!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, போல், ஊட்டுவான், வேண்டும், என்பது, இளந்திரையன், உணவு, கொண்டு, அவனது, புழுக்கல், நீங்கள், சிங்கம், தரும், இலக்கியங்கள், உரும்பில், பெற்ற, குதிரைகள், சூட்டி, அவனிடம், மாயவள், பொரும்பாணாற்றுப்படை, தாமரை, பத்துப்பாட்டு, அவனை, ஆடிய, யானை, வானத்தில், தானே, உங்களது, சென்ற, மகமுறை, யன்ன, பருவ, இல்லாமல், கொடையால், அவனே, பாசி, மரக்கால், போது, இவள், பலவகையான, மாட்டல், அணிகலன், வகையில், கொண்டை, ஊர்தி, நல்குவான், பரிசாக, பூட்டிய, மீண்டும், அமுது, மாறி, சீர்தூக்கிப், தந்து, உலகில், உடுத்திக், சமைத்த, கைகளால், இன்னும், மாலை, பார்த்துக், உதவுவான், வேண்டி, தீர்த்து, தனக்கு, சுற்றத்தோடு, காட்சி, மறவர், மள்ளர், வயமான், கடலில், வழங்குவான், வேண்டுப, நூல்கள், சங்க, சுற்றம், அவனைப், நீதி, முறை, சுற்றத்தாரும், துணங்கையஞ், பெரும, பகைவர்களின், கொள்ள, மீது, அன்று, வாள், பார்வதி, வீரர், இப்படிப்பட்ட, செய்ய, வேண்டிய, மரபிற், பேரியாழ், வாழிய, யந்நிலை, இப்படி, திரையன், தாக்கியது, கொண்ட, அம்மை