முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்)
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம் புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. | 75 |
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும் ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. | 76 |
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான் மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. | 77 |
வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. | 78 |
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. | 79 |
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால் தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. | 80 |
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. | 81 |
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. | 82 |
சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால் முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. | 83 |
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள் கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. | 84 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நின்னை, புணர்ப்பது, எய்தல், அல்லது, எம்பிரான், சிந்தை, நின்கண், எனைத்து, என்றும், கொண்டு, போற்றி, மாண்டு