முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
5. கைம்மாறு கொடுத்தல் (கலிவிருத்தம்)
இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. | 45 |
உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. | 46 |
மேலை வானவ ரும்மறி யாததோர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் கால மேயுளை யென்றுகொல் காண்பதே. | 47 |
காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப் பொரு ளேயிங்கொர் பார்ப்பெனப் பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. | 48 |
போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று ஆற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே. | 49 |
கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. | 50 |
எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. | 51 |
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள் எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. | 52 |
கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு இட்ட அன்பரொ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண் டும் அறி யேனையே. | 53 |
அறிவ னேயமு தேஅடி நாயினேன் அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிவ னோவல்ல னோஅரு ளீசனே. | 54 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஏற்றினை