முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.009.திருஅரிசிற்கரைப்புத்தூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.009.திருஅரிசிற்கரைப்புத்தூர்

7.009.திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தவீசுவரர்.
தேவியார் - அழகம்மை.
83 |
மலைக்கும்மக ளஞ்ச மதகரியை சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர் கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக் அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை |
7.009.1 |
மான்களின் கொம்புகளையும், யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து, தோகையையுடைய மயிலினது இறகுகளையும், கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர்; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர்; முழங்குகின்ற, கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர்; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர்.
84 |
அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர் திருமகள் கோனெடு மால்பலநாள் ஒருமலர் ஆயிரத் திற்குறைவா பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர் |
7.009.2 |
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர்; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர்; திருமட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள், அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய, அது நிறைவாகும்படி, தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து, போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர்.
85 |
தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ் சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித் முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை |
7.009.3 |
கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே, நீர், 'எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சந்திரன், சூரியன், ஆன்மா' ஆகிய எல்லாப் பொருள்களுமானீர். ஆதலின், ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட, அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று.
86 |
கொடியுடை மும்மதில் வெந்தழியக இடிபட எய்தெரித் தீர்இமைக்கும் கடிபடு பூங்கணை யான்கருப்புச் பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ |
7.009.4 |
எம்பெருமானிரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி, மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து, இமைக்கும் அளவில் எரித்தீர்; ஆதலின், உமக்கு நிகராவார் யாவர்? ஒருவரும் இல்லை; அங்ஙனமாக, மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும், கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம்பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ?
87 |
வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன் உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை |
7.009.5 |
கயலும், சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும், கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு, முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற (உண்கின்ற) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, உலகம் எல்லாவற்றையும் உடையவரே, உம்மை அடிபணிந்து, கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார், திருமாலும், பிரமனும், மற்றைய தேவரும், அசுரரும், பெரிய முனிவருமாவர்; அங்ஙனமாக. நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ? சொல்லியருளீர்.
88 |
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும் வகுத்தவ னுக்குநித் தற்படியும் புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர் |
7.009.6 |
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க்குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, 'அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க', 'உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும்' என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும்படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.
89 |
பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப் தெழிந்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ் விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை |
7.009.7 |
சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட, முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே, கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி, ஒளி வீசுகின்ற மாணிக்கம், முத்து, பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு, கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே, நீர், உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி, சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி, அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ?
90 |
பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம் கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங் பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் |
7.009.8 |
நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும், திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும், முன் கைகளிற் கங்கணமாகவும், தலையில் தலைச் சூட்டாகவும், அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே, நீர், பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும், குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும், பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய, காலங்கடந்த காடே அரங்கமாக நின்று, அடிபெயர்த்து நடனமாடுதல் என்?
91 |
91 மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர் முழைக்கொள் அரவோ டென்பணி கலனா கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங் டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை |
7.009.9 |
'கழை' என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும், வாழைப்பழங்களையும், கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே, நீர், மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர்; அதன் மேலும், வளர்கின்ற புல்லிய சடையின்மேல், 'கங்கை' என்பவளை விரும்பி வைத்தீர். அங்ஙனமாக, செல்வ வாழ்க்கை வாழ நினையாது, புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும், எலும்புமே அணிகலங்களாக, மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ?
92 |
92 கடிக்கும் அரவால் மலையால் அமரர் ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை |
7.009.10 |
இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு, முன்பு அருவியாய் ஓடி, பின்பு, ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, நீர், கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு, மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி, அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர்; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை.
93 |
காரூர்மழை பெய்து பொழிஅருவிக் போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப் ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந் சீரூர்தரு தேவர்க ணங்களொடும் |
7.009.11 |
மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய, அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும், அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு, இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை, நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும், மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும், சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட்கூடி வாழ்ந்து, பின் சிவலோகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅரிசிற்கரைப்புத்தூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நிறைந்த, திருப்புத்தூரில், அரிசிலாற்றின், பொருந்திய, அழகனீரே, தென்கரையிலுள்ள, புனிதரே, சோலைகள், எழுந்தருளியுள்ள, பொழிலார்திருப், உமக்கு, புத்தூர்ப், புனிதனீரே, அழகார்திருப், சிற்றென்கரை, புத்தூர், கைகளால், ஒலிக்கின்ற, எழுந்தருளியிருக்கின்ற, அங்ஙனமாக, செய்து, சேர்அரி, முழுவதும், கரைகளை, எழுந்தருளியிருக்கும், நாள்தோறும், பின்பு, வைத்தீர், திருப்புத்தூர், திருப்புத்தூர்ப், போலும், கடிக்கும், முன்பு, றென்கரை, அரிசிற், அழகார், கண்களையுடைய, புனல்சேர், கொண்டு, அலைகளாகிய, எரித்தீர், விரும்பி, ஒருநாள், மூன்று, பெயர்ந்து, திருமுறை, திருச்சிற்றம்பலம், மூங்கிலையும், திருஅரிசிற்கரைப்புத்தூர், ஏற்பது, வெந்து, அழியும்படி, ஆதலின், சூரியன், வாரிக்கொண்டு, எல்லாவற்றையும், மீன்கள்