முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.008.திருவாரூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.008.திருவாரூர்

7.008.திருவாரூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
73 |
இறைகளோ டிசைந்த இன்பம் பறைகிழித் தனைய போர்வை திறைகொணர்ந் தீண்டித் தேவர் அறைகழல் இறைஞ்சும் ஆரூர் |
7.008.1 |
தேவர்கள், செம்பொன்னையும், மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து, நினது ஒலிக்கும் கழலையணிந்த திருவடிகளை, மலர் தூவி வணங்குகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பறையைக் கிழித்தாற்போன்ற உடம்பைப் பற்றிநின்று பார்த்தேனாகிய எனக்கு, அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்திவந்த இன்பத்தையும், அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சு தலுடையனாயினேன்.
74 |
ஊன்மிசை உதிரக் குப்பை மானமறித் தனைய நோக்கின் மானுடப் பிறவி வாழ்வு ஆனல்வெள் ளேற்ற ஆரூர் |
7.008.2 |
வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே, திருவாரூரில் உள்ள தந்தையே, இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு, பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள்; ஆதலின், அத்தன்மையை அறியாத, மான் மருண்டாற் போலும் பார்வையினையுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை, இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன்; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலுடையனாயினேன்.
75 |
அறுபதும் பத்தும் எட்டும் துறுபறித் தனைய நோக்கிச் நறுமலர்ப் பூவும் நீரும் கறிவினைக் கொடுக்கும் ஆரூர் |
7.008.3 |
மணம் கமழும் பூவும், நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற, திருவாரூரில் உள்ள தந்தையே, பூதங்கள் ஐந்தும், ஞானேந்திரியம் கன்மேந் திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும், தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும், தாத்துவிகங்கள் அறுபதும், 'காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்' என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும், 'சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி' என்னும் ஆகிய எல்லாம் புதராக, வேறாகக் கண்டு சொல்லின். அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார்; ஆதலின், தம்மை, யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடைய னாயினேன்.
76 |
சொல்லிடில் எல்லை யில்லை நல்லதோர் கூரை புக்கு மல்லிகை மாட நீடு அல்லிவண் டியங்கும் ஆரூர் |
7.008.4 |
மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம், வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, யான், ஓட்டைக்குடில்களுள் துச்சிலிருந்துவாழ்ந்த, பேதைக்குரித்தாய, துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின், அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை. அங்ஙனமாகவும், நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன்; அதனால், அஞ்சுதலுடையனாயினேன்.
77 |
நரம்பினோ டெலும்பு கட்டி குரம்பைவாய்க் குடியி ருந்து விரும்பிய கமழும் புன்னை அரும்புவாய் மலரும் ஆரூர் |
7.008.5 |
புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண். யாவரும் விரும்புமாறு மணங்கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய்மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, அடியேன், எலும்புகளை நரம்பாற் கட்டின, விருப்பத்தோடு சிறிதும் இசைவில்லாத (அருவருப்பைத் தருவதான) குடிசைக்கண் குடியிருத்தலால், நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாயுள்ளேன்; அதனால், அஞ்சுதலுடையனாயினேன்.
78 |
மணமென மகிழ்வர் முன்னே பிணமெனச் சுடுவர் பேர்த்தே பணையிடைச் சோலைதோறும் அணைவினைக் கொடுக்கும் ஆரூர் |
7.008.6 |
வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம், பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில், மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகில் தாய், தந்தை, சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தம் மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள். பின்பு அவர்தாமே அவர்களை, 'பிணம்' என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர்; ஆதலின், இத்தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன்: அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன்.
79 |
தாழ்வெனுந் தன்மை விட்டுத் வாழ்வதே கருதித் தொண்டர் ஆழ்குழிப் பட்ட போது யாழ்முயன் றிருக்கும் ஆரூர் |
7.008.7 |
மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு, அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி, பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு, மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர்; துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது, துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர். அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.
80 |
உதிரநீர் இறைச்சிக் குப்பை வருவதோர் மாயக் கூரை கரியமா லயனுந் தேடிக் கழலிணை அரியனாய் நின்ற ஆரூர் |
7.008.8 |
கருமை நிறத்தையுடைய திருமாலும், பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின்மேல் காணப்படுவதாகிய, விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் ரும்புகின்றிலேன். அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுதலுடையனாயினேன்.
81 |
பொய்த்தன்மைத் தாய மாயப் வித்தகத் தாய வாழ்வு முத்தினைத் தொழுது நாளும் கத்தன்மைத் தாகும் ஆரூர் |
7.008.9 |
முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது, தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மையதாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே, நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன்; அதற்கு, அஞ்சுதலுடையனாயினேன்.
82 |
தஞ்சொலார் அருள்ப யக்குந் அஞ்சொலார் பயிலும் ஆரூர் செஞ்சொலால் நயந்த பாடல் நஞ்சுலாங் கண்டத் தெங்கள் |
7.008.10 |
பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன், அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய், அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப் பாடல்களை எண்ணிப் பாடவல்லவர், நஞ்சை அணி கலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தந்தையே, திருவாரூரில், அப்பனே, அஞ்சுதலுடையனாயினேன், வாழ்வு, என்னும், அடியேன், அதனால், தருகின்ற, ஆதலின், வேண்டேன், அதற்கு, மல்லிகை, அவற்றிற்கு, தொழுது, மகளிர், வாழும், வாழ்க்கையை, மக்கட்குத், இன்புற்றிருக்கின்ற, பொருட்டு, தெங்கள், பிறவியை, தோறும், வாருக், குப்பை, வாழ்வதோர், விரும்புகின்றிலேன், இன்பம், டிசைந்த, திருமுறை, திருச்சிற்றம்பலம், அறுபதும், பத்தும், கொடுக்கும், கமழும், திருவாரூர், வணங்கு, எட்டும், பூவும், கொண்டு