முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.082.திருச்சுழியல்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.082.திருச்சுழியல்
7.082.திருச்சுழியல்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இணைத்திருமேனிநாதர்.
தேவியார் - துணைமாலைநாயகியம்மை.
832 |
ஊனாய்உயிர் புகலாய்அக வானாய்வரு மதியாய்விதி தேனாதரித் திசைவண்டினம் நானாவிதம் நினைவார்தமை |
7.082.1 |
உடம்புகளாகியும், அவைகளில் புகுதலை யுடைய உயிர்களாகியும், அகன்ற நிலமாகியும், மேகங்கள் நின்று மழையைப் பொழியும் வானமாகியும், வினைப்பயன் வருதற்கு வழியாகிய உள்ளமாகியும் நிற்பவனாகிய இறைவனது இடம், சோலைகளில் தேனை விரும்பி வண்டுக் கூட்டம் இசைபாடுகின்ற திருச்சுழியலாகும். அதனைப் பல்லாற்றானும் நினைபவர்களை, கூற்றுவன் ஏவலர்கள் துன்புறுத்தமாட்டார்கள்.
833 |
தண்டேர்மழுப் படையான்மழ சுண்டேபுரம் எரியச்சிலை திண்டேர்மிசை நின்றான்அவன் தொண்டேசெய வல்லாரவர் |
7.082.2 |
தண்டுபோல மழுப்படையை ஏந்தியவனும், இளமையான இடபத்தை யுடையவனும், தேவர்கள் பொருட்டு, கடலில் எழுந்த நஞ்சினையுண்டு, திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலிற் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும், துன்பம் இல்லாதவரும் ஆவர்.
834 |
கவ்வைக்கடல் கதறிக்கொணர் கொவ்வைத்துவர் வாயார்குடைந் தெய்வத்தினை வழிபாடுசெய் அவ்வத்திசைக் கரசாகுவர் |
7.082.3 |
ஓசையையுடைய கடல், முழக்கம்செய்து, தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க, அங்கு, கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்றவரது திருவடிகளை வணங்குவோர், தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர்; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர்களை விட்டு நீங்காள்.
835 |
மலையான்மகள் மடமாதிட கொலையானையின் உரிபோர்த்தஎம் அலையார்சடை யுடையான்அடி நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே. |
7.082.4 |
மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப் பகுதியினளாக, கொலைத் தொழிலையுடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய, திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள், மனத்தில் குற்றம் பொருந்தாதவராவர்; இவ்வுலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு நீண்ட வானுலகத்திற்கும் மேற்செல்வார்கள்.
836 |
உற்றான்நமக் குயரும்மதிச் செற்றார்திரு மேனிப்பெரு பெற்றான்இனி துறையத்திறம் கற்றாரவர் கதியுட்செல்வர் |
7.082.5 |
நமக்கு உறவாயுள்ளவனும், மேன்மை தங்கிய சந்திரனை யணிந்த சடையை யுடையவனும், ஐம்புலன்களையும் வென்று பொருந்திய திருமேனியையுடைய பெருமானும் ஆகிய இறைவனது ஊர் திருச்சுழியலே. அதன்கண் நீங்காது இனிது எழுந்தருளியிருக்கப்பெற்ற அவனது திருநாமத்தைப் பயின்றவர், உயர்கதியிற் செல்வர்; ஆதலின் உலகீர், அவனது திருப்பெயரைப் போற்றுமின்; அதுவே உங்கட்குக் கடமையாவது.
837 |
மலந்தாங்கிய பாசப்பிறப் சலந்தாங்கிய முடியான்அமர்ந் நிலந்தாங்கிய மலராற்கொழும் தலந்தாங்கிய புகழான்மிகு |
7.082.6 |
மாசினை உடைய பாசத்தால் வருகின்ற பிறப்பினை அறுக்க விரும்புகின்றவர்களே, துறைகளை உடையதாதற்கு உரிய கங்கையாகிய நீரினைத் தாங்கியுள்ள முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடமாகிய திருச்சுழியலை, நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும், செழுமையான நறும்புகைகளாலும் வழிபட்டு, நினைந்து துதிமின்கள்; உமக்கு இவ்வுலகம் சுமக்கத்தக்க புகழோடு கூடிய மிக்க தவம் உளதாகும் திறல் உளதாகும்.
838 |
சைவத்தசெவ் வுருவன்திரு கைவைத்தொரு சிலையால்அரண் தெய்வத்தவர் தொழுதேத்திய மெய்வைத்தடி நினைவார்வினை |
7.082.7 |
சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவனாய்த் திருநீற்றை யணிபவனும், இடிபோலும் குரலையுடைய இடபத்தை யுடையவனும், கையின்கண் வைத்த ஒரு வில்லாலே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தெய்வத் தன்மையையுடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து, அவனது திருவடியை நினைபவரது வினைகள் நீங்குதல் எளிது.
839 |
பூவேந்திய பீடத்தவன் கோவேந்திய வினயத்தொடு சேவேந்திய கொடியானவன் மாவேந்திய கரத்தான்எம |
7.082.8 |
எருதினை, ஏந்துகின்ற கொடியாகப் பெற்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில், மானை ஏந்திய கையை யுடையவனும், எங்கள் தலைகளின்மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை, தலைமை அமைந்த வணக்கத்தோடு அணுகச்சென்று அடைதலை, மலராகிய, உயர்ந்த இருக்கையில் உள்ளவனாகிய பிரமனும், வலிமையுடைய திருமாலும் ஆகிய இவர்தாமும் அறியமாட்டார்.
840 |
கொண்டாடுதல் புரியாவரு செண்டாடுதல் புரிந்தான்திருச் குண்டாடிய சமணாதர்கள் மிண்டாடிய அதுசெய்தது |
7.082.9 |
தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்துநின்ற தக்கனது பெருவேள்வியை, பந்தாடுதல்போலத் தகர்த்து வீசி விளையாடினவனாகிய திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, மூர்க்கத்தன்மை பேசுகின்ற சமணராகிய அறிவிலிகளும், குடையை உடையவராகிய புத்தர்களும் அறியாமல், வலிமை பொருந்திய வாதுசெய்து, அதன் வண்ணமே யாவார்களாயின், அஃது அவர் வினைப்பயனேயாகும்.
841 |
நீருர்தரு நிமலன்திரு தேரூர்தரும் அரக்கன்சிரம் பேரூரென வுறைவானடிப் ஆரூரன தமிழ்மாலைபத் |
7.082.10 |
அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக, அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும், திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும், திருநாவலூரார்க்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர், துன்பம் யாதும் இலராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சுழியல் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சுழியல், எழுந்தருளியிருக்கின்ற, இறைவனது, திருச்சுழியலில், யுடையவனும், பொருந்திய, சிவபெருமான், திருவடிகளை, வழிபட்டு, திருமுறை, திருச்சுழியலை, உளதாகும், திருச்சிற்றம்பலம், சிவந்த, உறையுந்திருச், திருச்சுழியல், பொழியும், துன்பம், இடபத்தை