முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.071.திருமறைக்காடு
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.071.திருமறைக்காடு
7.071.திருமறைக்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மறைக்காட்டீசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தநாயகி.
719 |
யாழைப்பழித் தன்னமொழி பேழைச்சடை முடிமேற்பிறை தாழைப்பொழி லூடேசென்று வாழைக்கனி கூழைக்குரங் |
7.071.1 |
யாழின் இசையைப் பழித்த அத்தன்மையையுடைய சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போலும் சடைமுடியில் பிறையைச் சூடினவனும் ஆகிய இறைவனது இடத்தை அறிந்து வழிபடவேண்டின், அது, எளிய குரங்குகள் தாழம் புதரூடே புகுந்து, சிறிய புழைகளில் நுழைந்து, வாழைப்பழத்தைப் பறித்து உண்கின்ற திருமறைக்காடேயாகும்.
720 |
சிகரத்திடை இளவெண்பிறை முகரத்திடை முத்தின்னொளி தகரத்திடை தாழைத்திரள் மகரத்தொடு சுறவங்கொணர்ந் |
7.071.2 |
தலையில் இளமையான பிறையைச் சூடின இறைவனது இடத்தை அறிய வேண்டின், சங்கினிடத்தில் தோன்றிய முத்துக்களினிடையே மறைகின்ற பவளக்கூட்டத்தை உடைய அலைகள், தகர மரங்களின் அடியிலும், தாழைமரம், குங்கும மரம் இவைகளின் நிழலிலும் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காடேயாகும்.
721 |
அங்கங்களும் மறைநான்குடன் தெங்கங்களும் நெடும்பெண்ணையும் வங்கங்களும் உயர்கூம்பொடு |
7.071.3 |
வேதங்கள் நான்கினோடு, அவற்றின் அங்கங்களையும் விரித்தவனாகிய இறைவனது இடத்தை யாம் அறிந்தோம்; அஃது எதுவெனின், தென்னை மரங்களும், நீண்ட பனை மரங்களும் தம் தம் பழங்கள் விழநிற்கின்ற மணலையுடைய தோட்டத்தில், சங்குகளும், விளங்குகின்ற இப்பிகளும், வலம்புரிச் சங்குகளும் அலைகளால் எறியப் பட, மரக்கலங்களும் உயர்ந்த பாய்மரங்களாகிய கூப்பிய கைகளுடன் வந்து வணங்குகின்ற திருமறைக்காடேயாகும்.
722 |
நரைவிரவிய மயிர்தன்னொடு உரைவிரவிய உத்தமன்னிடம் குரைவிரவிய குலைசேகரக் வரைபுரைவன திரைபொருதிழிந் |
7.071.4 |
நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவனும், அதனால், புகழ் பொருந்திய மேலானவனும் ஆகிய சிவபெருமானது இடம் யாது என்று உணரப் புக்க மனமே, அது, ஒலி பொருந்திய கரைக்கண் உள்ள மாமரத்தினது, மேகங்கள் தவழ்கின்ற தலையில், உடைந்த மலைபோல்வனவாகிய அலைகள்மோதி மீள்கின்ற திருமறைக் காடேயாகும்.
723 |
சங்கைப்பட நினையாதெழு கங்கைச்சடை முடியுடையவற் அங்கைக்கடல் அருமாமணி வங்கத்தொடு சுறவங்கொணர்ந் |
7.071.5 |
மனமே, 'கங்கையைத் தாங்கிய சடைமுடியையுடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாவது, கடலினது கைகள் ஆகிய அலைகள் அக்கடலின்கண் உள்ள அரிய, சிறந்த மணிகளைத் தள்ளிக்கொண்டு, கரைக்கு ஏற்புடைய மரக்கலத்தோடு சுறா மீனையும் கொணர்ந்து சேர்க்கின்ற திருமறைக்காடேயாகும்' அது பற்றி ஐயமாக நினையாது, அங்குச் சென்று அவனை வணங்கித் துதித்தற்கு ஒருப்படு.
724 |
அடல்விடை யினன்மழுவா படருஞ்சடை முடியுடையவற் கடலிடையிடை கழியருகினிற் மடலிடையிடை வெண்குருகெழு |
7.071.6 |
வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.
725 |
முளைவளரிள மதியுடையவன் களைகளைந்தெனை யாளல்லுறு வளைவிளைவயற் கயல்பாய்தரு வளைவளையொடுசலஞ் சலங்கொணர்ந் |
7.071.7 |
புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களை களைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற்கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற் கரைக்கண் அக்கடல், வளைந்த சங்குகளோடு, சலஞ்சலத்தையும் கொணர்ந்து எறிவதும் ஆகிய திருமறைக் காடேயாகும்.
726 |
நலம்பெரியன சுரும்பார்ந்தன கலம்பெரியன சாருங்கடற சலம்புரிசடை முடியுடையவற் வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் |
7.071.8 |
கங்கை நீரோடு திரித்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானுக்கு இடமாய் நிற்பது, நற்பொருள்கள் மிக்கனவும், வண்டுகள் நிறைந்தனவும், பொயனவுமாகிய மரக்கலங்கள் பொருந்திய கடலினது கரையைமோதி மீள்கின்ற அலைகள், வலம்புரிச் சங்குகளையும், சலஞ்சலச் சங்குகளையும் கொணர்ந்து வீசுகின்ற திருமறைக்காடேயாகும். இதனை அறிந்தோமாகலின், நாம் நம் பெருமானது இடத்தை அறிந்தோமாயினோம்.
727 |
குண்டாடியுஞ் சமணாடியுங் கண்டார்கண்ட காரணம்மவை எண்டோளினன் முக்கண்ணினன் வண்டாடுதண் பொழில்சூழ்ந்ததெழு |
7.071.9 |
உலகீர், சிறிய உடையை உடைய சிலர்தாமும் மூர்க்கத் தன்மை பேசியும், சமண சமயக் கொள்கைகளை உரைத்தும் சில பொருள்களை, தம் குறையறிவாற் கண்டார்; எனினும், அவைகளைப் பொருளாக நினையாது, எட்டுத் தோள்களை உடையவனும், மூன்று கண்களையுடையவனும், ஏழிசைகளையுடையவனும் ஆகிய சிவபெருமானது, ஆறு கால்களையுடைய வண்டுகள் சூழ்கின்ற குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஓங்கும் நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காட்டைக் கைகூப்பித் தொழுமின்கள்.
728 |
பாரூர்பல புடைசூழ்வள வாரூர்வன முலையாள்உமை ஆருரன தமிழ்மாலைகள் நீரூர்தரு நிலனோடுயர் |
7.071.10 |
கச்சின்மேல் எழுகின்ற அழகிய தனங்களை யுடையவளாகிய உமாதேவி பங்கினனாகிய சிவபெருமானது திருமறைக்காட்டை, நிலத்தில் உள்ள ஊர்கள் பல சூழ்ந்துள்ளனவாகத் தலைமை பெற்று விளங்கும், வளவிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூரார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரனது தமிழ்ப்பாடல்களால் பாடுகின்ற, அப்பெருமானது திருவடித் தொண்டர்கள், நீர் சூழ்ந்த நிலத்தொடு உயர்ந்து விளங்கும் புகழ் மிகப்பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமறைக்காடு - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமறைக்காடேயாகும், உடையவனும், தெற்றும்மறைக், இடத்தை, பொருந்திய, கொணர்ந்து, சிவபெருமானது, மீனையும், இடமாவது, அலைகள், சிவபெருமானுக்கு, முடியுடையவற், கிடமாவது, சூழ்ந்த, இறைவனது, கடலினது, நினையாது, காடேயாகும், இடைஇடையும், வண்டுகள், சங்குகளையும், விளங்கும், நீரையுடைய, நீலமணிபோலும், திருமறைக், வீசுகின்ற, மணிநீர்மறைக், வலம்புரிச், சுறவங்கொணர்ந், தலையில், இளமையான, பிறையைச், நுழைந்து, திருமுறை, திருச்சிற்றம்பலம், தோன்றிய, அங்கங்களும், திருமறைக்காடு, அணிந்த, கரைக்கண், சங்குகளும், மணலையுடைய, மறைநான்குடன், மரங்களும், மீள்கின்ற