முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.070.திருவாவடுதுறை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.070.திருவாவடுதுறை
7.070.திருவாவடுதுறை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
709 |
கங்கை வார்சடை யாய்கண நாதா பொங்கு மாகடல் விடமிடற் றானே செங்கண் மால்விடை யாய்தௌ தேனே அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.1 |
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே, பூத கணங்கட்குத் தலைவனே, காலனுக்குக் காலனே, காமன் உடலுக்கு நெருப்பாகியவனே, அலை மிகுகின்ற பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனே, உயிர்கட்கு முதல்வனே, அறவடிவினனே, தூயோனே, சிவந்த கண்களை யுடைய திருமாலாகிய இடபத்தை யுடையவனே, தௌந்த தேன் போல்பவனே, கடவுளே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற கருணையாளனே, அடியேனுக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய்.
710 |
மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை கண்ணி லேன்உடம் பில்லடு நோயாற் தெண்ணி லாஎறிக் குஞ்சடை யானே அண்ண லேஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.2 |
நிலவுலகின்கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய என்முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே, தௌவாகிய நிலவொளியை வீசுகின்ற சடையை உடையவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அண்ணலே, தேவர்களாகிய, விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, யான் கண் இல்லேனாயினேன்; அதன்மேலும், உடம்பில் வந்து பற்றி வருத்துகின்ற நோயினால் மனம் வருந்தினமையால், உனக்குத்தான் சுமையாய் விட்டேன்; எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், என்னை 'அஞ்சேல்' என்று சொல்லித்தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.
711 |
ஒப்பி லாமுலை யாள்ஒரு பாகா முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே செப்ப ஆல்நிழற் கீழ்இருந் தருளுஞ் அப்ப னேஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.3 |
நிகரற்ற தனங்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே, மேலானவனே, ஊமத்தம் பூப் பொருந்திய சடையை உடையவனே, முப்புரங்களைத் தீவளையச் செய்து, அப்பொழுதே அவற்றில் இருந்தவர்களுள் மூவருக்கு மட்டில் அருள் செய்ய வல்லவனே, அறத்தைச் சொல்லுதற்கு ஆல் நிழலில் அமர்ந்தருளிய செல்வனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் அப்பனே! தேவர்களாகிய விலங்குகளுக்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாருளர்! என்னை 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.
712 |
கொதியி னால்வரு காளிதன் கோபங் மதியி லேன்உடம் பில்லடு நோயான் விதியி னால்இமை யோர்தொழு தேத்தும் அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.4 |
சீற்றத்தொடு வந்த காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய நடனத்தை யுடையவனே, மாணிக்கம் போல்பவனே, மணவாளக் கோலத்தினனே, தேவர்கள், முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, தேவர்களாய் விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால், செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன்! எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.
713 |
வந்த வாள்அரக் கன்வலி தொலைத்து வெந்த வெண்பொடிப் பூசவல் லானே அந்த ணாஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.5 |
உலகமாகிய வழிக்கு முதலானவனே, வெந்ததனால் ஆகிய வெள்ளிய திருநீற்றைப் பூச வல்லவனே, அருச்சுனனுக்கு வேட உருவத்தில் சென்று அருள்செய்த சந்திர சேகரனே, தேவர்களுக்குப் புகழுடைய தலைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அந்தணனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண்சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறுயாவர் உளர்! அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து, பின்பு அவனுக்கு வாழ்நாள் கொடுத்து விடுத்தாய்; இன்று, என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.
714 |
குறைவி லாநிறை வேகுணக் குன்றே உறவி லேன்உனை யன்றிமற் றடியேன் சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூர்ச் அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.6 |
'குறை' எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே, இறைமைக் குணங்கள் எல்லாவற்றானும் இயன்றதொரு மலை எனத் தக்கவனே, கூத்துடையவனே, குழையணிந்த காதினை யுடையவனே, சிறையை யுடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாரூரில் உள்ள, செம்பொன் போல்பவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, அடியேனும் உன்னையன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன்; எனக்கு உறவாரும் உன்னையன்றி வேறு யாவர் உளர்! ஆதலின், யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக்கொண்டால், உனக்கு வருவதொரு தாழ்வுண்டோ! என்னை, 'அஞ்சேல்' என்றுசொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.
715 |
வெய்ய மாகரி ஈருரி யானே மெய்ய னேஅட லாழியன் றரிதான் செய்ய மேனிய னேதிக ழொளியே ஐய னேஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.7 |
கொடிய, பெரிய யானையினது உரித்த தோலையுடையவனே, புலித்தோல் ஆடையை உடுத்தவனே, விதிவிலக்குக்களுக்குத் தலைவனே, மெய்ப்பொருளானவனே, அன்று திருமால் வேண்டிக்கொள்ள, வலிமையையுடைய சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே, சிவந்த திருமேனியையுடையவனே, ஒளிகள் எலலாவற்றினும் மேம்பட்டு விளங்குகின்ற ஒளியாய் உள்ளவனே, நெருப்புக்கண்ணை உடையவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, தேவர்களாகிய விலங்கு கட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவர் உன்னையன்றி வேறுயாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள் செய்யாய்.
716 |
கோதி லாஅமு தேஅருள் பெருகு பாதி மாதொரு கூறுடை யானே தீதி லாமலை யேதிரு வருள்சேர் ஆதி யேஎனை அஞ்சல்என் றருளாய |
7.070.8 |
கோதில்லாத அமுதம் போல்பவனே, அருள் வெள்ளம் பெருகுகின்ற தோற்றத்தை உடையவனே, தேவர்கள் வணங்குகின்ற தலைவனே, உடம்பின் ஒருபாதியில் மங்கை ஒருத்தியது ஒருபங்கினை உடையவனே, உயிர்கட்குத் தலைவனே, மேலானவனே, மேலிடத்தில் இருப்பவனே, நன்மையால் இயன்ற மலைபோல்பவனே, சிறப்புடைய அருள் பொருந்திய வீரனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற முதற்பொருளானவனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார், உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி, எனக்கு அருள்செய்யாய்.
717 |
வான நாடனே வழித்துணை மருந்தே ஏன மாஎயி றாமையும் எலும்பும் தேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே ஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய் |
7.070.9 |
ஆகாயமாகிய நாட்டை உடையவனே, செல்லும் வழிக்குத் துணையாகிய அமுதம் போல்பவனே, குற்றமில்லாத மாணிக்கம் போல்பவனே, வேதத்தின் பொருளாய் உள்ளவனே, பன்றியின் பெரிய கொம்பினையும், ஆமை ஓட்டையும், எலும்பையும், இடப்பட்ட அணிகளாகத் தாங்கிய மார்பையுடையவனே, 'தேன், நெய், பால், தயிர்' இவைகளால் மூழ்குவித்தலை விரும்புகின்றவனே, இறைவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற என் யானை போல்பவனே, தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே, எனக்கு உறவாவார் உன்னையன்றி வேறு யாவர் உளர்! என்னை, 'அஞ்சேல்' என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய்.
718 |
வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும் இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை அண்ட வாணனைச் சிங்கடி யப்பன் தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள் |
7.070.10 |
வெண்டலையோடு பொருந்தும் பிறையையும், கொன்றைமலர் மாலையையும், பாம்பினையும், தேனையுடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக்கொண்ட சிறந்த இண்டை மாலையையுடைய, சிவந்த சடைமுடியையுடையவனும், முதற் கடவுளும், திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற சிவலோக வாணனும் ஆகிய இறைவனை, அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன்றொண்டனாகிய, சிங்கடிக்குத் தந்தை, மிக்க அன்போடும் பாடிய இத்தண்ணிய தமிழ்மாலைகளாகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள், இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து, எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாவடுதுறை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எனக்கு, திருவாவடுதுறையில், துறையுள், எழுந்தருளியிருக்கின்ற, உடையவனே, உள்ளவனே, அஞ்சேல், வமரர்கள், அஞ்சல்என், னக்குற, சிங்கமாய், தேவர்களாகிய, தேற்றி, உன்னையன்றி, றருளாய், னேதிரு, தலைவனே, சொல்லித், போல்பவனே, விலங்குகட்கு, செய்யாய், உறவாவார், இறைவனே, யுடையவனே, அருள்செய்யாய், தாங்கிய, சிவந்த, அவனுக்கு, யோர்தொழு, பொருந்திய, வல்லவனே, தேவர்கள், மேலானவனே, வேறுயாவர், அமுதம், மாணிக்கம், பில்லடு, திருச்சிற்றம்பலம், திருவாவடுதுறை, அறவடிவினனே, திருமுறை, லேன்உடம், வருத்துகின்ற, உடம்பில், ஆதலின்