முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.053.திருக்கடவூர் மயானம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.053.திருக்கடவூர் மயானம்
7.053.திருக்கடவூர் மயானம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர்.
தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
540 |
மருவார் கொன்றை மதிசூடி வருவார் விடைமேல் மாதோடு திருமால் பிரமன் இந்திரற்குந் பெருமான் கடவூர் மயானத்துப் |
7.053.1 |
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும், திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின் மேல் ஒரு மாணிக்கமலை வருவதுபோல விடையின்மேல் வருவார்; 'திருமால், பிரமன், இந்திரன்' என்ற பெருந்தேவர்கட்கும், 'மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்' என்பவர்கட்கும் அவரே தலைவர்.
541 |
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் கண்ணார் நுதலர் நகுதலையர் எண்ணார் புரமூன் றெரிசெய்த பெண்ணா ணாவர் மயானத்துப் |
7.053.2 |
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை உடையவரும், வேதத்தை உடைய இசையைப் பாடுகின்றவரும், கண் பொருந்திய நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத் தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகப் கொண்டவரும, தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும், உமை ஒருபாகமும் தாம் ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர்.
542 |
காயும் புலியி னதளுடையர் தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் பாயும் விடையொன் றதுவேறிப் பேய்கள் வாழும் மயானத்துப் |
7.053.3 |
பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், சினங் கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவா; நீல கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை யுடையவர்; திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும் தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர்.
543 |
நறைசேர் மலர்ஐங் கணையானை இறையா ராவர் எல்லார்க்கும் பறையார் முழவம் பாட்டோடு பிறையார் சடையார் மயானத்துப் |
7.053.4 |
ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன் பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்புகளையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற் சாம்பலாக்கிய இறைவராவர்; 'இல்லை' என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை யுடையவர்.
544 |
கொத்தார் கொன்றை மதிசூடிக் மத்த யானை யுரிபோர்த்து பத்தி செய்து பாரிடங்கள் பித்தர் கடவூர் மயானத்துப் |
7.053.5 |
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும் பிறையையும் திருமுடியிற்சூடி, சொல்லுந் தன்மையுடைய பாம்புகள் அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத் தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பையும், ஆமையின் ஓட்டையும் உடைய தாலியையுடையவராய், பூதகணங்கள் அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர்.
545 |
துணிவார் கீளுங் கோவணமுந் பணிமே லிட்ட பாசுபதா திணிவார் குழையார் புரமூன்றுந் பிணிவார் சடையார் மயானத்துப் |
7.053.6 |
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்; பஞ்ச வடியை அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்; கட்டிய நீண்ட சடையையுடையவர்.
546 |
காரார் கடலின் நஞ்சுண்ட தேரார் அரக்கன் போய்வீழ்ந்து ஊர்தா னாவ துலகேழும் பேரா யிரவர் மயானத்துப் |
7.053.7 |
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்; திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக் கீழேபோய் வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர்.
547 |
வாடா முலையாள் தன்னோடும் கோடார் கேழற் பின்சென்று நாடா வண்ணஞ் செருச்செய்து பீடார் சடையார் மயானத்துப் |
7.053.8 |
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களை யுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர்புரிந்து, பின்பு அவனுக்கு அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர்.
548 |
வேழ முரிப்பர் மழுவாளர் ஆழி யளிப்பர் அரிதனக்கு ஏழை தலைவர் கடவூரில் பேழைச் சடையர் மயானத்துப் |
7.053.9 |
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்டு அறம் உரைப்பர்; மங்கை யொருத்திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர்.
549 |
மாட மல்கு கடவூரின் பீடைதீர அடியாருக் நாடி நாவ லாரூரன் பாடு மடியார் கேட்பார்மேற் |
7.053.10 |
மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது புகழை, திருநாவலூரில் தோன்றிய, 'ஆரூரன்' என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்டிகின்ற அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடவூர் மயானம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருக்கடவூர், மயானத்துப், பெருமா, மயானத்தில், பெருமானடிகளாகிய, சிவபெருமானார், னடிகளே, எழுந்தருளியிருக்கின்ற, யுடையவர், பொருந்திய, நிறைந்த, திருக்கடவூரில், அணிந்த, சடையார், தலைவர், கொன்றை, பிச்சை, திருச்சிற்றம்பலம், உடையவர், சென்று, கண்டத்தை, யாவர்க்கும், மயானம், அடியார், தோன்றிய, பித்தர், திருமுறை, பேய்கள், திருக்கடவூரைத், பிறையையும், திருமால், மாலையையும், பிரமன், கடவூர், கடவூரர், இறைவர், எழுந்தருளியிருக்கும், உடையவரும், வருவார், மகிழ்ந்து, கண்டர்