முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.031.திருஇடையாற்றுத்தொகை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.031.திருஇடையாற்றுத்தொகை
7.031.திருஇடையாற்றுத்தொகை
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
310 |
முந்தை யூர்முது குன்றங் குரங்கணின் முட்டம் சிந்தை யூர்நன்று சென்றடை வான்திரு வாரூர் பந்தை யூர்பழை யாறு பழனம்பைஞ் ஞீலி எந்தையூ ரெய்த மானிடை யாறிடை மருதே. |
7.031.1 |
அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும், எம் தந்தையும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'பழைய ஊராகிய முதுகுன்றம், குரங்கணின்முட்டம், ஆரூர், மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
311 |
சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர் ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப் பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர் எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே. |
7.031.2 |
இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும், பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'அடியார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல், சோபுரம், அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர், ஊறல், பெண்ணையாற்றின் தௌவாகிய நீர் மோதுகின்ற இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
312 |
கடங்க ளூர்திருக் காரி கரைகயி லாயம் விடங்க ளூர்திரு வெண்ணிஅண் ணாமலை வெய்ய படங்க ளூர்கின்ற பாம்பரை யான்பரஞ் சோதி இடங்கொ ளூரெய்த மானிடை யாறிடை மருதே. |
7.031.3 |
கொடிய, படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள், 'செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை, கயிலாயம், நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி, அண்ணாமலை, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
313 |
கச்சை யூர்கா வங்கழுக் குன்றங்கா ரோம் பிச்சை யூர்திரி வான்கட வூர்வட பேறூர் கச்சி யூர்கச்சி சிக்கல்நெய்த் தானம் மிழலை இச்சை யூரெய்த மானிடை யாறிடைமருதே. |
7.031.4 |
பிச்சைக்கு ஊர்தோறும் திரிபவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும், ஆகிய இறைவன் விரும்புதல் செய்கின்ற ஊர்கள், 'கச்சையூர், பலகாக்கள், அழகிய கழுக்குன்றம், காரோணம், கடவூர், வடபேறூர், கச்சணிந்தவளாகிய காமக்கோட்டி யம்மையது ஊரெனப்படுகின்ற காஞ்சி, சிக்கல், நெய்த்தானம், வீழிமிழலை, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
314 |
நிறைய னூர்நின்றி யூர்கொடுங் குன்ற மமர்ந்த பிறைய னூர்பெரு மூர்பெரும் பற்றப் புலியூர் மறைய னூர்மறைக் காடு வலஞ்சுழி வாய்த்த இறைய னூரெய்த மானிடை யாறிடை மருதே. |
7.031.5 |
எங்கும் நிறைந்தவனும், விரும்பிச் சூடிய பிறையை உடையவனும், வேதத்தை ஓதுபவனும், வலஞ்சுழியில் பொருந்தியுள்ள கடவுளும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'நின்றியூர், கொடுங்குன்றம், பெருமூர், பெரும்பற்றப்புலியூர், மறைக்காடு, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
315 |
திங்க ளூர்திரு வாதிரை யான்பட் டினமூர் நங்க ளூர்நறை யூர்நனி நாலிசை நாலூர் தங்க ளூர்தமி ழானென்று பாவிக்க வல்ல எங்க ளூரெய்த மானிடை யாறிடை மருதே. |
7.031.6 |
இறைவனை, 'தமிழில் விளங்குபவன்' என்று கருதவல்ல யாங்கள், எம்முள் அளவளாவுங்கால், எம்மை நீக்கி, 'எம்மினும் உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர்' என்றும், யாவரையும் உளப்படுத்து, 'நங்கள் ஊர்' என்றும், பிறரொடு சொல்லாடுங்கால், முன்னிலையாரை நீக்கி, 'எங்கள் ஊர்' என்றும் சொல்லுமாறு, யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள், 'திங்களூர், திருவாதிரையான் பட்டினம் என்னும் ஊர், நறையூர், மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர், இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
316 |
கருக்க நஞ்சமு துண்டகல் லாலன்கொல் லேற்றன் தருக்க ருக்கனைச் செற்றுகந் தான்றன் முடிமேல் எருக்க நாண்மலர் இண்டையும் மத்தமுஞ் சூடி இருக்கு மூரெய்த மானிடை யாறிடை மருதே. |
7.031.7 |
தீக்கின்ற அந்த நஞ்சினை உண்டவனும், கல்லால மர நிழலில் இருப்பவனும், கொல்லும் இடபத்தை ஏறுபவனும், செருக்குற்ற சூரியனை ஒறுத்துப் பின் அருள்செய்தவனும், தனது முடியின் மேல் அன்று மலர்ந்த எருக்கம்பூவினாலாகிய இண்டை மாலையையும், ஊமத்தம் பூவினையும் சூடியவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் வீற்றிருக்கும் ஊர்கள், 'இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
317 |
தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர் பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே. |
7.031.8 |
ஒளிவடிவினும், தீவினைகள் குறைய நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், 'நள்ளாறு' என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'ஆக்கூர், நனிபள்ளி, இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
318 |
பேற னூர்பிறைச் சென்னியி னான்பெரு வேளூர் தேற னூர்திரு மாமகள் கோன்திரு மாலோர் கூற னூர்குரங் காடு துறைதிருக் கோவல் ஏற னூரெய்த மானிடை யாறிடை மருதே. |
7.031.9 |
எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும், பிறையை யணிந்த சடையை உடையவனும், தௌயப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், 'பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது' என்னும் இவைகளே.
319 |
ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன் தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக் கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே. |
7.031.10 |
சிவந்த கண்களையுடைய வெள்ளிய விடையை ஏறுகின்றவரும், யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும், இடைமருதையும், வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய், தௌயத் தகுவாரது உள்ளங்கள் தௌதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள், வினைத் துன்பம் நீங்க, உடல் குளிர்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஇடையாற்றுத்தொகை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், யாவராலும், மானிடை, அடையப்படும், ஊர்கள், இடையாறு, இவைகளே, இடைமருது, யாறிடை, பெருமானும், உடையவனும், இறைவனது, இடபத்தை, னூரெய்த, என்றும், இறைவன், ளூரெய்த, நீக்கி, இருப்பவனும், ளூர்திரு, பிறையை, யாறிடைமருதே, ஊராகிய, விரும்பிச், திருஇடையாற்றுத்தொகை, திருச்சிற்றம்பலம், மூரெய்த, திருமுறை, சென்று