முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.030.திருக்கருப்பறியலூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.030.திருக்கருப்பறியலூர்
7.030.திருக்கருப்பறியலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தவீசுவரர்.
தேவியார் - கோல்வளைநாயகியம்மை.
299 |
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் |
7.030.1 |
யானைத் தோலைப் போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச, அதனைக் கண்டு நின்றவனும், திருக்கருப்பறியலூரில் உள்ள, தளிர் கிள்ளுதற்குரிய மாமரங்களில் இருந்து குயில்கள் பாட, கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலின்கண் எழுந்தருளியுள்ள எம்பெருமானும் ஆகிய இறைவனை, நாம் உடலை நேரே நிறுத்திக் கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி, இவ்வாறு மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
300 |
நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங் ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் |
7.030.2 |
திருநீற்றால் நிறைந்த மேனியை உடையவராய் நினைக்கின்றவரது உள்ளத்தில் நிறைந்து தோன்றுபவனும், 'காற்று' தீ, ஞாயிறு, திங்கள்' என்னும் பொருள்களாய் நிற்பவனும், அழித்தல் தொழிலையுடையவனும், கூற்றுவனை உதைத்தவனும், வரிசையாகப் பொருந்திய வளைகளையுடைய உமாதேவியோடும் திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலைத் தனக்கு உரிய இடமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
301 |
முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து கட்டார்ந்த இண்டைகொண் டடிசேர்த்தும் அந்தணர்தங் கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக் எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக் |
7.030.3 |
நாள்தோறும், 'காலை, நண்பகல், மாலை' என்னும் மூன்று பொழுதுகளிலும், தப்பாமல் நீரின்கண் மூழ்கிப் பூக்களைப் பறித்து, அவைகளை, கட்டுதல் பொருந்திய இண்டை மாலையாகச் செய்துகொண்டு, மனத்தைத் தனது திருவடிக்கண் சேர்த்துகின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில், முழவம் முதலியவற்றின் கொட்டும், அவற்றிற்கேற்ற கூத்தும், பாட்டும் ஆகியவற்றை விரும்பி இருக்கின்ற அழகனும், எட்டுருவாயவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
302 |
விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங் குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையா ளவளோடுங் இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் |
7.030.4 |
கல்வியில் வல்ல அடியார்கள் புதியனவாகிய பல சொல்மாலைகளைக் கொண்டு புகழ்ந்து வினை நீங்கப் பெறுமாறு, வேலிகள் தோறும், பசிய அடியினையுடைய செவ்வாழைகளின்மேல் செவ்விய பழங்கள் சாற்றைச் சொரிந்து நிற்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் இளையவாகிய கூரிய பற்களையும், வரிசையான வளைகளையும் உடைவளாகிய உமாதேவியோடும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நாம் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
303 |
பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக் கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங் கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங் அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக் |
7.030.5 |
நீறு மிகுந்திருக்கின்ற திருமேனியையுடைய பெருமானும், சீற்றம் மிக்க பாம்பாகிய அரைக்கச்சையை உடையவனும், நறுமணம் வீசுகின்ற பூப் பொய்கைகளில் கயல் மீனும், வாளை மீனும் குதிகொள்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள, கொடிப் பூக்களில், 'வண்டு' என்றும், 'தேன்' என்றும் சொல்லப்படுகின்ற அவற்றது கூட்டங்கள் மொய்த்து இசைபாடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், திருவடியிற் பொருந்திய கழலையுடையவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
304 |
பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப் கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங் கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங் ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் |
7.030.6 |
பொய்கூறாத வாய்மையான உள்ளத்தோடு திருநீற்றை அணிந்து, 'போற்றி' எனச் சொல்லிப் பல வகை வழிபாடுகளையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள, கொய்தல் பொருந்திய பூஞ்சோலைகளில் குயில்கள் கூவ, அவற்றோடு மயில்கள் ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனாகிய இறைவனை யான் என் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
305 |
செடிகொள்நோய உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச் கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங் கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையா ளவளோடுங் அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் |
7.030.7 |
நறுமணத்தைக் கொண்ட பூக்களையுடைய பொய்கையின் கரைகளில் கரிய எருமைகள் மிக்கு உறங்குகின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் கொடிபோலும் அழகிய நுண்ணிய இடையினையும், வரிசையான வளைகளையும் உடைய உமையம்மையுடன் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை என் மனத்தினால் நினைந்தபோது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது; ஆதலின், துன்பந் தருவனவாய் உள்ள நோய்களும், தீவினைகளும் ஒருதலையாக நீங்குதற் பொருட்டு அவனை நினையுங்கள்.
306 |
பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும் கறையார்ந்த கண்டத்தன் எண்டோளன் முக்கண்ணன் குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் |
7.030.8 |
கருமை நிறம் பொருந்திய கண்டத்தையும், எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடையவனும், திருக்கருப்பறியலூரில் உள்ள குறைவுபடாத வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை, நாம், நீங்குதற்கரிய வலிய வினைகள் நீங்குமாறு பல நாளும் பாடியும், ஆடியும் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
307 |
சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந் கங்கார்ந்த வார்சடைக ளுடையானை விடையானைக் கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்குங் எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் |
7.030.9 |
சங்கினை ஏந்துகின்ற கையினை யுடையவனாகிய திருமாலும், தாமரைமலர்மேல் இருப்பவனாகிய பிரமனும்காண இயலாத, கங்கை பொருந்திய நீண்ட சடைகளையுடையவனும், இடபத்தை ஊர்பவனும், திருக்கருப்பறியலூரில் உள்ள, தேன் நிறைந்த பொழிலாகிய சோலைகள், சுற்றிலும் கனிகள் பலவற்றை உதிர்க்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
308 |
பண்டாழின் னிசைமுரலப் பன்னாளும் பாவித்துப் கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக் குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங் எண்டோளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக் |
7.030.10 |
கண்டவரது கண்கள் குளிர்தற்கு வழியாகிய கமுகஞ் சோலைகளையும், களிப்பைத் தருகின்ற பூஞ்சோலைகளையும் உடைய திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, கீழ்மைத் தொழில்களைப் பயில்கின்ற சமணராலும், புத்தராலும் புறங்கூறப்படுகின்ற, எட்டுத் தோள்களையுடைய எம்பெருமானை, நாம், பல நாள்களும் உள்ளத்திற் கருதி, பண்பொருந்துதற்கு அடிநிலையாகிய இனிய சுருதியை, கூட்டுவார் கூட்டப் பல இசைப் பாடல்களைப் பாடியும், ஆடியும் மனத்தினால் நினைந்த போது, அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
309 |
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங் குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக் இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய் மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த |
7.030.11 |
திருக்கருப்பறியலூரில் உள்ள, குலைகள் நிறைந்த வலிய தென்னை மரங்களையும், தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய இறைவனை, 'வனப் பகை' என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும் தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து, அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே, தன்னைக் கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கருப்பறியலூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொகுடிக், மனத்தினால், திருக்கருப்பறியலூரில், றியலூர்க், கோயில், கருப்ப, நமக்கு, தவர்நமக், நினைந்தபோ, இறைவனை, இனியனாகின்ற, கோயிலில், சொல்லுதற்கரிது, நினைந்தபோது, எழுந்தருளியிருக்கின்ற, பொருந்திய, நிறைந்த, மூன்று, செய்து, நினைந்த, ளவளோடுங், கோல்வளையா, பெருமானை, திருமுறை, உடையவனும், என்றும், மீனும், பன்னாளும், எட்டுத், பூஞ்சோலைகளையும், தோள்களையுடைய, பூஞ்சோலைக், ஆடியும், வளைகளையும், பாடியும், யாடிக், திருச்சிற்றம்பலம், என்னும், திருக்கருப்பறியலூர், நிறைந்து, குயில்கள், ஆடுகின்ற, மயில்கள், உமாதேவியோடும், மலர்ச்சோலைக், உள்ளத்தில், தோறும், அந்தணர்களது, அந்தணர்தங், நாள்தோறும், வரிசையான