முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.090.திருக்கஞ்சனூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.090.திருக்கஞ்சனூர்
6.090.திருக்கஞ்சனூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கற்பகநாயகியம்மை.
2973 | மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை நாவலனை நரைவிடையொன் றேறு வானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.1 |
மூவிலை கொண்ட நல்ல சூலத்தை வலக்கையில் ஏந்தினவனும், சூரியன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுடர்களாகிய கண்ணினனும் அழகிய தோற்றத்தினனும், நாவலனும், வெள்ளிய இடபம் ஒன்றை ஊர்பவனும், வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆயினவனும், பசு தரும் பஞ்சகவ்வியத்தை விரும்பியவனும், தேவர்களுக்குத் தலைவனும், பிரமனும் திருமாலும் ஆனவனும், அக்கினியால் போற்றப்படும் காவலனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல்வரும் பிறப்பை நீங்கினேன்.
2974 | தலையேந்து கையானை யென்பார்த் தானைச் குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் மலையானை மற்றொப்பா ரில்லா தானை கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.2 |
பிரமகபாலத்தை ஏந்திய கையினனும், எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தவனும், பிரமவிட்டுணுக்களுடைய எலும்புக்கூடுகளைத் தாங்கும் தோளினனும், வெண்ணீற்றுப் பூச்சினனும், கொத்தாய்ப் பொருந்திய நறிய கொன்றை மலர்களை முடிமேல் கொண்டவனும், கொடுமை வல்ல நாகத்தை உடை மேல் கட்டியவனும், மேன்மை மிக்க கயிலை மலையவனும், தனக்குவமை யில்லாதவனும், சந்திரனும், சூரியனும் தேவர்களும் திருமாலும் போற்றும் உருவத்திருமேனி உடையவனும், கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும்பிறப்பை நீங்கினேன்.
2975 | தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச் தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச் பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம் கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.3 |
தொண்டர்கூட்டமாய்த் திரண்டு தொழுது புகழ அவர்க்கு அருள்செய்பவனும், ஒளிரும் மழுவாயுதத்தை உடையவனும், சுழியையுடையதும், தௌந்த திரைகளால் மோதி இழிவதும் ஆகிய ஆகாய கங்கையைத் தாங்கிய சடையினனும், செவ்வானம் போன்ற ஒளியினனும், தன்னை அடையாமல் பண்டு அமரர்கள் கூடி ஆராய்ந்து மேற்கொண்டு விரும்பிச் செய்த தக்கனுடைய வேள்வி முழுதும் பாழ் செய்து தக்கனையும் எச்சனையும் தலையறுத்துச் சூரியனைப் பல்தகர்த்துப் பகனைக் கண் பறித்துக் கொண்ட கொடியவனும், கஞ்சனூரை ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
2976 | விண்ணவனை மேருவில்லா வுடையான தன்னை பெண்ணவனை ஆணவனைப் பித்தன்தன்னைப் எண்ணவனை எண்டிசையுங் கீழும் மேலும் கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.4 |
சிவலோகனாய், மேருமலையை வில்லாக உடையவனாய், ஞானியர்க்கு உண்மைப்பொருளாகி, உணர்வில்லார்க்கு இல்பொருள் ஆகி அறநெறியும் அருள்நெறியும் ஆனவனும், பெண் ஆண் ஆனவனும், பித்தனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டை இடமாகக் கொண்டவனும், மேலான தகுதியினனும், எண்ணமானவனும், எட்டுத் திசைகளும் கீழும் மேலும் பெரிய ஆகாயமும் பரந்த நிலமும் ஆகித் தோன்றுபவனும், கண்போற் சிறந்தவனும், கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
2977 | உருத்திரனை உமாபதியை உலகா னானை பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப் நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.5 |
உருத்திரனும், உமாபதியும், உலகு ஆள்பவனும், உத்தமனும், நித்திலம் அனையவனும், ஒப்பற்றவனும், மலையாய் விளங்குபவனும், மயிர்க் கயிறாகிய பஞ்சவடிப்பூணூல் திகழ் மார்பினனும், பகலும், இரவும், நீரும், ஆகாயமும், பரவிய நெருப்பும் ஆனவனும், முத்தின்கொத்து ஒக்கத் திகழும் திருநீற்றுக் கீற்றினனும், திருநீற்றைப் பூசிய மேனியை உடையவராய், இடைவிடாது நினைக்கும் அன்பர்களின் மனத்தில் உறைபவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
2978 | ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச் கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.6 |
இதழ் செறிந்த கொன்றைமலர், பாம்பு, தும்பைப்பூ, பிறைச்சந்திரன், எருக்க மலர், வானின்றிறங்கிய கங்கை ஆகியவைகளால் அழகு விளங்கிய சடையினனும், தேவர்க்குத் தலைவனும், பெரிய செம்பொன்மலை போன்றவனும், தன்னை அடைந்தார் சிந்தையில் கேடின்றி இருப்பவனும், கீழ்வேளூரிலிருந்து ஆளும் அரசனும், மடவார்கைகளில் அணிந்துள்ள வளைகளைப் பொய்பேசிக் கவர்ந்து கொள்ளும் அதிசயிக்கத்தக்க திறனுடையவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
2979 | நாரணனும் நான்முகனும் அறியா தானை பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும் வார்பொதியும் முலையாளோர் கூறன் தன்னை கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.7 |
திருமாலும், நான்முகனும், அறியாதவனும், வேதமந்திர உருவினனும், ஆடவருட்சிறந்தவனும், பூதங்கள் தான் ஏவிய பணிகளைச் செய்ய தான் பிச்சை ஏற்று உண்ணும் பால் நிறத்தவனும், தீ நிறத்தவனும், பகல் ஆனவனும், கச்சணிந்த கொங்கை யாளை உடலின் ஒரு கூற்றாகக் கொண்டவனும், மானை இடக்கையில் ஏந்தியவனும், தேவர்கள் மகிழ்ச்சி நிறைவதற்குக் காரணமானவனாய், கழுத்துக் கருநிறத்தால் மூடப்பட்டவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
2980 | வானவனை வலிவலமும் மறைக்காட் டானை ஏனவனை இமவான்றன் பேதை யோடும் தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத் கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.8 |
வானிடத்தவனும், வலிவலமும் மறைக்காடும் உறைபவனும், மதிசூடும் பெருமானும், ஆதி அந்தணனும், மற்றை வருணத்தினனும், இமவான் மகள் பார்வதி யோடும் இனிதிருந்து அருள்செய்யும் பெருமானும், தன்னை ஏத்தி வணங்குவார்க்குத் தேன் போன்று தித்திப்பவனும், தீது இல்லாமல் அவர்களைக் காத்தற் பொருட்டுக் காலம்பார்த்துக் கரந்து நிற்பவனும், தேவராற் போற்றப்படும் வேட்டுவனும் கஞ்சனூராண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
2981 | நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானைச் விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.9 |
நெருப்புநிறமுடைய அழகிய திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவனும், நினைப்பவர் நெஞ்சில் நிலைத்து நிற்பவனும், எங்கும் நிறைந்தவனும், முயலகன்மேல் காலை ஊன்றி ஆடியவனும், சலந்தரனைப் பிளந்திட்டவனும், ஞானிகள் சிந்தையில் விரும்பி வாழ்பவனும், வேதவிதியானவனும், சிவாகமவிதியாய் விளங்குபவனும், இயல்பாகவே விளங்கும் ஒளியாய், மெய்ப்பொருளாய், மேலோர்கள் போற்றும் கருத்தாய்த் திகழ்பவனும், கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
2982 | மடலாழித் தாமரைஆ யிரத்தி லொன்று சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத் அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் |
6.090.10 |
இதழுடைய வட்டமான தாமரை மலரில் ஆயிரத்தில் ஒன்றாகத் தன் தாமரை மலர்போலும் கண்ணைப் பெயர்த்து இடுதலும் நிறைந்த பெரிய அழகினையும் ஒளியையும் உடைய சக்கராயுதத்தை நெடு மாலுக்கு அருள் செய்தவனும், யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், தன் நண்பன் குபேரன் தோற்றுக் கைவிட்ட வலிய சக்கரத்தையுடைய தேரினைத் தன் உடைமை ஆக்கிக்கொண்ட இலங்கைக்கோனை எடுத்தற்கரிய கயிலை மலைக்கீழ் வைத்து நெரித்தவனும், பின் அவனுக்கு அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலானவனும், கஞ்சனூர் ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக்கண்டு, மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கஞ்சனூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கண்ணாரக், கண்டுய்ந், கோவைக்கற்பகத்தைக், கஞ்சனூ, கற்பகத்தைக், நீங்கினேன், பிறப்பை, கோவும், கஞ்சனூர், ஆனவனும், கொண்டவனும், திருமாலும், கஞ்சனூரை, சிந்தையில், உறைபவனும், விளங்குபவனும், முயலகன்மேல், நான்முகனும், கண்ணா&, வலிவலமும், ஆகாயமும், பெருமானும், நிற்பவனும், வெண்ணீற், பெருமானை, நிறத்தவனும், உடையவனும், போற்றப்படும், முடிமேல், தலைவனும், திருச்சிற்றம்பலம், திருமுறை, அணிந்தவனும், போற்றும், ஆண்டகோவும், சடையினனும், வேள்வி, திருக்கஞ்சனூர், கீழும்