முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.088.திருவோமாம்புலியூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.088.திருவோமாம்புலியூர்
6.088.திருவோமாம்புலியூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துயர்தீர்த்தசெல்வர்.
தேவியார் - பூங்கொடியம்மை.
2954 | ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை ஊராரும் படநாகம் ஆட்டு வானை சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.1 |
கூர்மைபொருந்திய மூவிலை வேலை அங்கையிடத்துக் கொண்டவனும், அலையையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், தேவர்கள் புகழும் அழகு நிறைந்த மதியைத் தன்னுட்கொண்ட சடையனும், இனி எனக்கு எழ இருக்கும் பிறப்புக்களிலும் என்னை அடிமையாக உடையவனும், ஊரும் இயல்பினதாகிய படநாகத்தை ஆட்டுபவனும் ஆகி உயர்புகழ்சேரும் ஓமாம் புலியூரிடத்தே நிலைத்து நிற்கும் சிறப்பினை உடைய வடதளியில் விளங்கும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.
2955 | ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன் ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும் தீதில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.2 |
தன்னின்வேறு பிரித்து அரி என்றும் அயனென்றும் அறிய ஒண்ணாத ஆதியானவனும், தேவர்கள் தொழும் கழலினனும், இயல்பாகவே பாசமில்லாதவனும், ஒளியுமிழும் சந்திரனுடைய கலைகளைத் தொலையச் செய்தவனும், தக்கனையும் எச்சனையும் தக்கவாறு தண்டித்தவனும், ஒளிவீசும் இரவியுடைய கூரிய பற்களைத் தகர்த்தவனும் ஆகி, அந்தணர்கள் வேதங்களை மிக ஓதி மூன்று எரிகளையும் முறையே ஓம்புதலினால் உயர்ந்த புகழைப் பொருந்தும் ஓமாம்புலியூரில் திகழும் தீதில்லாத வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள்பல வீண் போக்கினேன்.
2956 | வருமிக்க மதயானை யுரித்தான் தன்னை தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச் உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி திருமிக்க வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.3 |
எதிர்த்துவரும் மதமிக்க யானையின் தோலை உரித்தவனும், தக்கயாகத்தில் இந்திரனுடைய தோள்களை முற்றிலும் துணித்தவனும், நறுமணத்தைத்தரும் செறிந்த குழல் உமையாளின் பாகனும், சங்கரனும், எம்பெருமானும் ஆகி, பூமியின்மேல் ஒளிமிக்க மணிகளானியன்ற மாடங்கள் நிலவுகின்ற வீதிகளை உடையதும், மேலோர்கள் வாழ்வதும் ஆகிய ஓமாம்புலியூரில் அழகுமிக்க வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.
2957 | அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும் தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.4 |
பகைத்தவர் புரமூன்றும் வெந்து பொடியாமாறு அழல் உண்டாக விழித்த கண்ணினனும், தேவர்கட்குத் தலைவனும், வெற்றியால் மிக்கு விளங்கிய காலன் உயிரிழந்து விழ விளக்கம் மிக்க தன் திருவடியால் உதைத்த விகிர்தனும் ஆகி, புகழ்பொருந்திய அந்தணாளர் நாளும் முத்தீயையும் ஓம்புதலினால் வரும் உயர் புகழையும் நான்மறை முழக்கத்தையும் உடைய ஓமாம்புலியூரில் தென்றற்காற்று மிக்குத் தவழும் வடதளிவாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.
2958 | பாங்குடைய எழில்அங்கி யருச்சனைமுன் விரும்பப் பாங்கிலா நரகதனைத் தொண்ட ரானார் ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர் தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.5 |
முன்செய்த நன்மையுடையனாகிய அழகிய அக்கினிதேவன் அருச்சனை செய்ய விரும்ப அவன் மேல் இரக்கங் கொண்டு அவன் அதனை இயற்ற அருள் செய்த பரமனும், தன் தொண்டரானார், தீங்குடைய நரகினைப் பாராதவாறு பண்ண வல்லவனும் ஆகி, நாற்புறமும் உயர்ந்தமதில் தழுவி நிற்கும் அழகுடைய ஓமாம்புலியூரில் உயர்ந்த புகழினையுடைய அந்தணர்கள் புகழுமாறு பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுவதால் உலகோர்க்கு என்றும் தீங்கின்றி நிலவும் அழகிய வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.
2959 | அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப் திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.6 |
அரிய தவமுடையோர் வணங்க வாழ்த்தும் தலைவனும், தெவிட்டாத இன்னமுதன்னவனும், அடியார்க்கு வரும் துயரங்களை விலக்குபவனும், நங்கை உமையாளின் கணவனாகிய நம்பியும், எனக்கு அமுதும் ஆகி, பயிர் வளர்ச்சிக்குப் பொருத்தமான புனலால் தழுவப்படும் வயலும், உயர்ச்சி நிலவும் பொழிலும் பொருந்தி விளங்கும் ஓமாம்புலியூரில் நாளும் நடைபெறுவன திருத்தமுற அமையும் அழகிய வட தளி வாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.
2960 | மலையானை வருமலையொன் றுரிசெய் தானை கலையானைக் கலையாருங் கையி னானைக் உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம் சிலையானை வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.7 |
கயிலை மலையவனும், யானை ஒன்றின் தோலை உரித்தவனும், வேதத்தில் உள்ளவனும், அவ்வேதத்தாலும் அறியப்படாத தன்மையனும், மான் கன்று பொருந்திய திருக்கரத்தினனும், அடியார்களுடைய துயரங்களை நீக்குபவனும், எம்மால் வணங்கப்படும் உத்தமனும், திரிபுரங்களை எரித்த வில்லினனும் ஆகி ஒழுக்கத்தில் தளராத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் வடதளி வாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.
2961 | சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச் சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத் ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர் சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.8 |
மணிகளைக் கொழித்து ஓடும் கங்கையைச் சூடியவனும், அழகிய மதியையும், படநாகத்தையும் உடன் தங்குமாறு வைத்தவனும், அடியடைந்தார்க்கு இனியனும், தன்னொப்பார் பிறரில்லாத தழல் நிறத்தவனும், எல்லார்க்கும் தலைவனும், பெருமை மிக்க நால் வேதங்களையும் ஓதி ஆராய்ந்து அவற்றிலேயே பழகுவார் வாழும் ஓமாம்புலியூர் உள்ளவனும், அடியாருடைய களவில்லா நெஞ்சில் சேர்ந்தவனும் ஆகி வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.
2962 | வார்கெழுவு முலையுமையாள் வெருவ அன்று ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப் சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் தன்னைச் |
6.088.10 |
கச்சணிந்த தனத்தினள் ஆகிய உமையாள் அஞ்சுமாறு அன்று கயிலை மலையைப் பெயர்த்த கொடிய அரக்கனுடைய இருபது தோள்களையும் இருதாள்களையும் அழகிய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அச்சினத்தினின்றும் மீண்டு அவனது இன்னிசையைக் கேட்டு உவந்தவனும், தேவர்களின் தலைவனும் ஆகி, புவிமுழுதும் பரவும் புகழினையுடைய மறையோர் மிக்கு வாழ்கின்றதும் மாடங்கள் நிறைந்ததும், பசியபொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய ஓமாம்புலியூரில், சிறப்புமிக்க வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண்போக்கினேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவோமாம்புலியூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திகைத்துநாள், செலுத்தி, அடையாது, சிவபெருமானை, தன்னைச்சேராதே, செல்வன், வடதளியெஞ், மயங்கி, ஓமாம்புலியூரில், போக்கினேன், புலியூர், செல்வனாகிய, தரும்ஓமாம், அந்தணர்கள், தலைவனும், வாழும், வடதளிவாழ், மன்னும், புரமூன்றும், நாளும், மிக்கு, நிலவும், துயரங்களை, உள்ளவனும், உமையாள், அடியார், எம்செல்வனாகிய, புகழினையுடைய, என்றும், எனக்கு, நிற்கும், தேவர்கள், திருச்சிற்றம்பலம், திருமுறை, வடதளியில், விளங்கும், உரித்தவனும், உமையாளின், உயர்ந்த, ஓம்புதலினால், திருவோமாம்புலியூர், மாடங்கள்