முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.027.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.027.திருவாரூர்
6.027.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2354 | பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன் |
6.027.1 |
நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர். இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச்சிறிது, சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய், எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரியகடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். அழிந்து போகக் கூடியவர்களே! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள்.
2355 | ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க் உம்பருமா யூழியுமா யுலகே ழாகி தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன் |
6.027.2 |
ஐம்பெரும் பூதங்களே! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர். உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்றுமில்லை. ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி, வள்ளலாய்த் தேவர் தலைவனாய், ஒளிபொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன். உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள்.
2356 | சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச் பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப் சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த் நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால் |
6.027.3 |
பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர்! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது. இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா?யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய், அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய், அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு, இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன். உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன். உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள்.
2357 | உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப் தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத் |
6.027.4 |
விரும்பி நினைக்கப்படும் உடலிலே, வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாக நின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா? யானோ தேவர்களுக்கு அழகிய உருவினைத் தந்தவனாய், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய், இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய், என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள்.
2358 | துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம் வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல் அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும் |
6.027.5 |
நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று. ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய், வைகல் என்ற தலத்தில் மணவாளனாய், எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன். ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன். ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள்.
2359 | பொங்குமத மானே ஆர்வச் செற்றக் உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம் அங்கமலத் தயனொடுமா லாகி மற்று செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச் |
6.027.6 |
பெருமிதம் கொண்ட செருக்கே! மாண்பு இழந்த மானமே! காமமே! பகையே! கோபமே! கஞ்சத்தனமே! துன்பச் சுமைகளே! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித்திரிவது உங்களுக்கு அரிது அன்று. ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி, எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன். உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன்.
2360 | இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள் அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா |
6.027.7 |
துன்பங்களே! பாவங்களே! மிக்க துயரம் தரும் வேட்கையே! வெறுப்பே! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன். உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்திநும் வசப்படுத்த முயலாதீர்கள்.
2361 | விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க் கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற் |
6.027.8 |
விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே! செல்வமே! கொடிய கோபமே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள். உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய், உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன். உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன். விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள்.
2362 | மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச நாள்வாயு நும்முடைய மம்ம ராணை நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா |
6.027.9 |
தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன். உங்களால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள்.
2363 | சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித் செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல் தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந் இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத் |
6.027.10 |
சுருக்கமே! பெருக்கமே! காலநிலையே! செல்வமே! வறுமையே! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன். அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நீங்கள், மின்னே, யானேல், உங்களுக்கு, முயலாதீர்கள், ஆரூரில், பெருமானை, அல்லேன், இவ்வுலகம், உங்கள், உம்மால், உங்களுடைய, என்னைத், கலையேன், இடையீடு, னோட்டந்தீங், வெறுப்பே, போதாதா, கொண்டு, விரைந்து, சென்று, தேவர்கள், உமக்கு, உங்களால், குறைமுடிப்பீர்க், கருதிய, என்பக்கல், கடுகச்சென், வறுமையே, செல்வமே, கமையாதே, தாங்கி, மகிழ்ச்சியே, செயற்படுத்தப்படுவேன், பெருமிதம், றடைவேன், நும்மாலாட்டுணே, வசப்படுத்த, வருத்த, உருவம், ஏனெனில், பொருள், தலைவனாய், எனக்கும், குளிர்ந்த, இடறேன், கெடுவீர்காள், திருமுறை, திருச்சிற்றம்பலம், யரித்துத், வானோர், எம்பெருமானுடைய, தொடர்ந்து, திருவாரூர், நித்தல், திரிந்து, நாடோறும், அவற்றை, எப்பொழுதும், இன்பம், அழிந்து, நுகர்போகம், தருக்கேன், நுகரத்தக்க, முழுதும்