முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.025.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.025.திருவாரூர்
6.025.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2337 | உயிரா வணமிருந் துற்று நோக்கி உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால் அயிரா வணமேறா தானே றேறி அயிரா வணமேயென் னம்மா னேநின் |
6.025.1 |
அயிராவணம் என்ற யானையை இவராது காளைமீது இவர்ந்து தேவர்களுடைய நாட்டை ஆளாமல் திருவாரூரை ஆண்ட ஐயுறாத தன்மையை உடைய நுண்மணல் உருவினனாகிய உண்மைப் பொருளே! உயிர்ப்பு இயங்காது மூச்சை அடக்கித் தியானம் செய்து உள்ளமாகிய துணியில் உன்படத்தை எழுதிச் சமாதி நிலையில் இருந்து உயிரை உன்னிடம் அடிமை ஓலை எழுதி ஒப்படைத்து உன் கையில் வழங்கி உன்னால் சிறப்பு வகையில் உணரப்படும் அடியாரோடு உடனாய் இருத்தி. என் தலைவனே! நீ வழங்கிய அருளாகிய கண் கொண்டு உன்னை உணராதவர்கள் உன் இன்பத்தைப் பெறுதற்கு உரியவர் அல்லர்.
2338 | எழுது கொடியிடையார் ஏழை மென்றோள் பழுது படநினையேல் பாவி நெஞ்சே முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி அழுது திருவடிக்கே பூசை செய்ய |
6.025.2 |
தீ வினையை உடைய மனமே! உனக்கும் எனக்கும் முற்பட்ட பகை ஏதேனும் உண்டோ? கொடி போன்ற இடையையும் மெல்லிய தோள்களையும் மடப்பத்தையும் உடைய இளைய மகளிர் நம் மூப்பினை நோக்கி இகழ்வதன்முன் பயன்பட நினைவாயாக. உலகிலுள்ள தேவர்கள் எல்லோரும் எஞ்சாது கூடித் தலையால் முழுமையாக வணங்கி முன்னிடத்தை அடைந்து அழுது அவன் திருவடிக்கண் பூசனை புரியுமாறு அவன் உகந்தருளியிருக்கின்ற ஆரூரை நினையாது பிறிதொன்றனைப் பழுதுபட நினையாதே!
2339 | தேரூரார் மாவூரார் திங்க ளூரார் காரூரா நின்ற கழனிச் சாயற் ஓரூரா வுலகெலா மொப்பக் கூடி ஆரூரா ஆரூரா என்கின் றார்கள் |
6.025.3 |
தேரூர், மாவூர், திங்களூர் இவற்றில் உறைந்து திகழும் செஞ்சடை மீது பிறை சூடி,நீர் வளம் சான்ற வயல்களையும் கண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மாடங்களையும் உடைய ஒவ்வோர் ஊராக உலகிலுள்ளார் எல்லாம் உமையாள் கணவனே என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்று அழைக்கின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்காமல் நீ எங்கே உள்ளாய்?
2340 | கோவணமோ தோலோ உடை யாவது பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான் தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித் ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம் |
6.025.4 |
தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ? ஊர்வது காளையோ, யானையோ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன். அவர்திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ?
2341 | ஏந்து மழுவாளர் இன்னம் பராஅர் வாய்ந்த வளைக்கையாள் பாக மாக போந்தா ரடிகள் புறம்ப யத்தே ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார் |
6.025.5 |
மழுப்படையை ஏந்திய பெருமான் இன்னம்பரில் இருந்தார். ஒளி வீசும் பவள நிறத்தை உடைய அவர் குடமூக்கில் இருந்தார். நீண்ட சடையை உடைய அப்பெருமானார் வளையல் அணிந்த கைகளை உடைய பார்வதி பாகராக வலஞ்சுழிக்கு வந்தார். அங்கிருந்து புறம்பயத்துக்கும் அடுத்துப் புகலூருக்கும் போயினார். போரிடும் காளை மீது இவர்ந்து தம் இருப்பிடத்தை முடிவு செய்தவர் போலத் திருவாரூரிலே குடிபுகுந்துவிட்டார். அப்பெருமானார் செய்வன யாவும் கண்கட்டுவித்தை போல உள்ளன.
2342 | கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால் மருவாகி நின்னடியே மறவே னம்மான் திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய் |
6.025.6 |
கருப்பையில் துளியாய்ப்புகுந்து நெகிழ்ந்த பிண்டமாய் இருந்து தழைத்து மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஓர் உருவம் எய்தி இவ்வுலகில் பிறப்பெடுத்துத் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட உயிரும் அந்நிலையில் நிலைத்து நில்லாது எந்த நேரத்திலும் உடம்பை விடுத்து நீங்கலாம். ஆதலின் அடியேன் உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றை மறவாமல் இருக்கின்றேன். மீண்டும் அடியேனுக்கு ஒருபிறவி உண்டாகுமாயின் உன்னை மறவாதிருத்தல் கூடுங்கொல்லோ என்று ஐயுற்றுத் திருவாரூர் மணவாளா! திருத்தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே! என்று உன் திருப்பெயர்களைக் கூறியவாறு கலங்குகின்றேன்.
2343 | முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் |
6.025.7 |
முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர்கூறும் 'கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை' என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான்செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்.
2344 | ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா பாடுவார் தும்புருவும் நார தாதி தேடுவார் திருமாலும் நான்மு கனுந் கூடுமே நாயடியேன் செய்குற் றேவல் |
6.025.8 |
திருவாரூர்ப் பெருமானே! நீ கூத்தாடுவாய், வேதம் வல்லார் விதிப்படி செய்ய வேண்டும் அளவிற் குறையாமல் உன் நிவேதனத்திற்குரிய அவியைச் சமைப்பார்கள். தும்புருவும் நாரதன் முதலியோரும் உன் பெருமையைப் பாடுவர். தேவர்களும் தேவேந்திரனும் உன்னை முன் நின்று துதிப்பார்கள். திருமாலும் பிரமனும் உன்னைத் தேடுவார்கள். மலைமகளும் கங்கையும் உன்னைத் தழுவுவார்கள். இவ்வளவு செய்திகளையும் அடியேன் அறிந்துள்ளேன். ஆதலின் நாய்போலும் அடியவனாகிய நான் செய்யும் சிறுபணிகள் உனக்கு ஏற்குமோ? ஏலாவோ? அறியேன்.
2345 | நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய் ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும் தேரூரும் நெடுவீதி பற்றி நின்று தாரூரா ஆரூரா என்கின் றார்கள் |
6.025.9 |
ஆரூர்ப் பெருமானே! கங்கை தங்கும் செந்நிறச் சடையனே! நெற்றியில் கண்ணுடையவனே! நிலாத்திங்கள் துண்டம் ஆகிய பிறை சூடியே! உன்னைத்தேடி நீ இருக்கும் இடத்தை ஆராய்ந்தவாறே, ஓர் ஊர்கூட எஞ்சாமல் உலகம் முழுதும் எங்கும் திரிந்து. உன்னைக் காண்பதற்குத் தேர்கள் உலவும் பரந்த விதிகளியே காத்திருந்து, திருமாலும் பிரமனும் கூட முயன்றும் காண இயலாதவர்களாய், 'தேவர்கள் தலைவனே' ஆரூரா! ஆரூரா! என்று அழைக்கின்றார்கள்.
2346 | நல்லூரே நன்றாக நட்ட மிட்டு பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண |
6.025.10 |
நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை இவர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற்காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார்.
2347 | கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக் உரித்தெடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்த மூடி திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த் தானந் அரிப்பெருத்த வெள்ளேற்றை அடரவேறி |
6.025.11 |
கரிய படப்புள்ளிகளை உடைய, கோபிக்கும் பாம்பினைக் கையில் கொண்டு, பார்வதியை அச்சுறுத்திய பெரிய மலையைப் போன்ற மத யானை பிளிறும்படியாக அதன் தோலை உரித்துச் சிவந்ததம் மேனி மீது பொருந்தப் போர்த்து ஒளி பொருந்திய திருமேனியை உடைய செல்வராம் சிவபெருமானார் திருத்துருத்தி, திருப்பழனம், திருநெய்த்தானம், திருவையாறு என்ற திருத்தலங்களை உறைவிடமாகக் கொண்டு இந்நாளில் தசை மடிப்பால் கீற்றுக்கள் அமைந்த பிடரியை உடைய வெண்ணிறக் காளையை அது சுமக்குமாறு இவர்ந்து, இப்பொழுது திருவாரூரை உகந்தருளியிருக்கிறார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவாரூர், பெருமானே, இவர்ந்து, திருமாலும், நின்று, பெருமான், கேட்டு, கொண்டு, அவனுடைய, மணவாளா, நோக்கி, அடியேன், மீண்டும், தளிச்சாத்தங், ஆதலின், அப்பெருமானார், கருநரம்பும், வெண்ணிறக், தலையாலங், இருந்தார், உன்னைத், தும்புருவும், அளவிற், ஒழிந்தாள், திரிந்து, பிரமனும், இருக்குமிடம், தலைவனே, தேவர்கள், திங்கள், கையில், இருந்து, திருமுறை, திருச்சிற்றம்பலம், திருவாரூரை, என்கின், றார்கள்அமரர்கள்தம், புறம்பயமோ, இப்பொழுது, அறியேன், ஊர்வது, கோவணமோ, செஞ்சடை, அழைக்கின்றார்கள், போயினார்