முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.097.திருச்சிறுகுடி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.097.திருச்சிறுகுடி
3.097.திருச்சிறுகுடி
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மங்களேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
3842 | 3482.
திடமலி
மதிளணி சிறுகுடி மேவிய படமலி யரவுடை யீரே படமலி யரவுடை யீருமைப் பணிபவர் அடைவது மமருல கதுவே |
3.097.1 |
வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர்.
3843 |
சிற்றிடை
யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல் உற்றவ ருறுபிணி யிலரே |
3.097.2 |
குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை.
3844 | தௌளிய
புனலணி சிறுகுடி மேவிய துள்ளிய மானுடை யீரே துள்ளிய மானுடை யீரும தொழுகழல் உள்ளுதல் செயநல முறுமே |
3.097.3 |
தௌந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர்.
3845 | செந்நெல
வயலணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரமெரித் தீரே ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார் சொன்னல முடையவர் தொண்டே |
3.097.4 |
செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச் சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர். (உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு பதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர்).
3846 | செற்றினின்
மலிபுனற் சிறுகுடி மேவிய பெற்றிகொள் பிறைமுடி யீரே பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ் சற்றவ ரருவினை யிலரே |
3.097.5 |
பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே! பேறு பெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள். அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர்.
3847 | செங்கயல்
புனலணி சிறுகுடி மேவிய மங்கையை யிடமுடை யீரே மங்கையை யிடமுடை யீருமை வாழ்த்துவார் சங்கைய திலர்நலர் தவமே |
3.097.6 |
செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, உமாதேவி யைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளம்கும் சிவபெருமானே! உமா தேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர். நலமிக்கவரும், தவப்பேறு உடைய வரும் ஆவர்.
3848 | செறிபொழி
றழுவிய சிறுகுடி மேவிய வெறிகமழ் சடைமுடி யீரே வெறிகமழ் சடைமுடி யீரு விரும்பிமெய்ந் நெறியுணர் வோருயர்ந்தோரே |
3.097.7 |
அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தல் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி, அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர்.
3849 | திரைசயவர்
தொழுதெழு சிறுகுடி மேவிய தசமுகு னுரநெரித் தீரே தசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர் வசையறு மதுவழி பாடே |
3.097.8 |
எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும். அது உம்மை வழிபட்டதன் பலனாகும்.
3850 | செருவரை
வயலமர் சிறுகுடி மேவிய இருவர யசைவுசெய் தீரே இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார் அருவிணை யொடுதுய ரிலரே |
3.097.9 |
வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், மாறுபாடு கொண்ட திருமால், பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும், அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர்.
3851 | செய்த்தலை
புனலணி சிறுகுடி மேவிய புத்தரோ டமண்புறத் தீரே புத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல் பத்தர்கள் தம்முடியப் பரிசே |
3.097.10 |
வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப்போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர்.
3852 | தேனமர்
பொழிலணி சிறுகுடி மேவிய மானமர் கரமுடை யீரே மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய ஞானசம் பந்தன தமிழே |
3.097.11 |
வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றி ஞானசம்பந்தனின் இத்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை, மறுமைப் பலன்களைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சிறுகுடி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிறுகுடி, சிவபெருமானே, என்னும், விரும்பி, திருச்சிறுகுடி, திருத்தலத்தில், வீற்றிருந்தருளுகின்ற, சடைமுடி, சடைமுடியுடைய, சுற்றிய, கொண்டு, புனலணி, விளங்கும், இடப்பாகமாகக், வெறிகமழ், நறுமணம், கரமுடைய, யீருமை, வழிபடுபவர்கள், அணிந்த, இல்லாதவராவர், மங்கையை, யிடமுடை, கமழும், வீற்றிருந்தருளுகின்றவரும், மானமர், கரமுடை, போற்றி, சமணர்கட்குப், டமண்புறத், யசைவுசெய், பிறைச்சந்திரனை, புத்தர், இராவணனின், உம்மைப், ஏந்திய, னுரநெரித், புரமெரித், அவ்வாறு, அணிந்துள்ள, தொழுகழல், தொழுது, துள்ளிய, பாம்பை, படமெடுக்கும், திருமுறை, திருச்சிற்றம்பலம், யரவுடை, யீருமைப், மானுடை, நீர்வளமுடைய, வயல்வளமிக்க, எரித்த, போற்றும், பெற்றிகொள், தீருமை, ஒன்னலர், துள்ளிக், குதிக்கும், அடியவர்கள், பெறுவர், பிறைமுடி