முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.008.திருக்கடவூர்வீரட்டம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.008.திருக்கடவூர்வீரட்டம்
3.008.திருக்கடவூர்வீரட்டம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர்.
தேவியார் - அபிராமியம்மை.
2878 | சடையுடை
யானும்நெய் யாடலா னுஞ்சரி உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர |
3.008.1 |
சடை முடியுடையவனும், பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும், சரிந்த கோவண ஆடையுடையவனும், மை தீட்டிய ஒளி பொருந்திய கண்ணை யுடைய உமாதேவியின் கணவனும், வாயில்களையுடைய நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக்கடவூரில் இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ?
2879 | எரிதரு
வார்சடை யானும்வெள் ளையெரு புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் கரிதரு காலனைச் சாடினா னுங்கட விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர |
3.008.2 |
நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும், வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும், சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழிபட, அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ?
2880 | நாதனும்
நள்ளிரு ளாடினா னும்நளிர் பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு காதலர் தண்கட வூரினா னுங்கலந் வேதம தோதியும் வீரட்டா னத்தர |
3.008.3 |
எல்லா உலகங்கட்கும் தலைவனும், மகாசங்கார காலத்தில் நடனம் புரிபவனும், அடியவர்களின் இதயத்தாமரையில் வீற்றிருப்பவனும், புலித்தோலாடை உடையவனும், இடபவாகனனும், அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் சய்த வீரட்டானத்து அரன் அல்லனோ?
2881 | மழுவமர்
செல்வனும் மாசிலாதபல முழவொலி யாழ்குழன் மொந்தைகொட்டமுது கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட விழவொலி மல்கிய வீரட்டா னத்தர |
3.008.4 |
மழுப்படையேந்திய செல்வனும், குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க, யாழும் குழலும் இசைக்க, மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட, சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ?
2882 | சுடர்மணிச்
சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் படமணி நாகம் ரைக்கசைத் தபர கடமணி மாவுரித் தோலினா னுங்கட விடமணி கண்டனும் வீரட்டா னத்தர |
3.008.5 |
சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம் அணிந்துள்ளவனும், வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள வனும், அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள கடவுளும், மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? விடமணிகண்டன்-நீலமணி மிடற்று ஒருவன் போல (அவ்வையார், புறநானூறு) நினைவுகூர்க.
2883 | பண்பொலி
நான்மறை பாடியா டிப்பல உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர |
3.008.6 |
நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும், நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை உடையவனும், வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும், திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து அரன் அல்லனோ?
2884 | செவ்வழ
லாய்நில மாகிநின் றசிவ முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தர |
3.008.7 |
செந்நிற நெருப்பாகவும், நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும், ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்ற மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும், ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும், கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும், வெப்ப முடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும், திருக் கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?
2885 | அடியிரண்
டோருடம் பைஞ்ஞான்கி ருபது முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதன் கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர |
3.008.8 |
ஓர் உடம்பில் இரண்டு கால்களும், இருபது தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும், முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?
2886 | வரைகுடை
யாமழை தாங்கினா னும்வளர் புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர |
3.008.9 |
கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்து ஆக்களையும், ஆயர்களையும் காத்த திருமாலும், குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க, பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன், திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ?
2887 | தேரரும்
மாசுகொள் மேனியா ரும்தௌ ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம காரிளங் கொன்றைவெண்டிங்களா னுங்கட வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர |
3.008.10 |
புத்தர்களும், அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் தௌந்தறிதற்கரிய சொல்லும், பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான், கார்காலத்தில்மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும், வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடியுள்ளவனும், வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய, திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ?
2888 | வெந்தவெண்
ணீரணி வீரட்டா னத்துறை அந்தணர் தங்கட வூருளா னைஅணி சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறை பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் |
3.008.11 |
விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய், அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை, அழகிய சீகாழியில்அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடவூர்வீரட்டம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வீரட்டா, னல்லனே, அல்லனோ, வூர்தனுள், திருக்கடவூரில், னுங்கட, வீரட்டானத்தில், உடையவனும், வீரட்டானத்து, இறைவன், மூர்த்தியும், திருக்கடவூரிலுள்ள, விளங்குபவனும், அணிந்துள்ளவனும், வீற்றிருந்தருளும், தேத்தவே, போன்று, பொருந்திய, நான்கு, பாடியா, சந்திரனைச், வேந்தனை, எழுந்தருளியுள்ள, திருமுறை, திருச்சிற்றம்பலம், நான்மறை, வீற்றிருக்கும், போதின்கண், திருக்கடவூர்வீரட்டம், தோலினா, செல்வனும், பாம்பை, மல்கிய, அணிந்துள்ள