முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.079.திருக்கோகரணம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.079.திருக்கோகரணம்
3.079.திருக்கோகரணம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் துளுவதேசத்திலிருப்பது. அந்தத்தேயத்தில் இது ஒரேதலம்.
சுவாமிபெயர் - மாபலநாதர்.
தேவியார் - கோகரணநாயகியம்மை.
3646 | என்றுமரி
யானயல வர்க்கிய நன்றுமொளி யானொளிசி றந்தபொன் ஒன்றியம னத்தடியர் கூடியிமை குன்றுகணெ ருங்கிவிரி தண்டலை |
3.079.1 |
சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப்பொழுதும் காண்டற்கு அரியவன். இயற்றமிழும், இசைத்தமிழும் ஆகி எனது உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன். பொன் போன்று ஒளிரும் சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது, ஒன்றிய மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற குன்றுகளும், சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும்.
3647 | பேதைமட
மங்கையொரு பங்கிட வாதைபட வண்கடலெ ழுந்தவிட மாதரொடு மாடவர்கள் வந்தடி கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் |
3.079.2 |
பேதைமைக் குணத்தையுடைய இளம் பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தின் மேலேறி, தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றியவிடத்தை உட்கொண்டு சிவபெருமான் காத்தருளினார். அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை வணங்கி, சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற, சாத்திய மாலைகளில் வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும்.
3648 | முறைத்திறமு
றப்பொருடெரிந்துமுனி மறைத்திற மறத்தொகுதி கண்டுசம துறைத்துறை மிகுத்தருவி தூமலர் குறைத்தறை யிடக்கரி புரிந்திடறு |
3.079.3 |
கல்லால நிழலின் கீழ்ச் சனகாதி முனிவர்கட்கு அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் சிவபெருமான் முறையோடு உபதேசித்தார். வேதத்தின் பொருளாகிய சரியை முதலிய நாற்பாதப் பொருட்களையும் கண்டு அறுவகைச் சமயங்களை வகுத்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துறைகள்தோறும் அருவிநீர் தூய்மையான மலர்களைச் சுமந்து கொண்டு, மூங்கில்களைத் தள்ளி, மதகுகளைச் சிதைத்து, யானை பிளிற மோதும் சாரலையுடைய திருக்கோகரணம் என்னும் தலமாகும்.
3649 | இலைத்தலை
மிகுந்தபடை யெண்கரம் அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் மலைத்தலை வகுத்தமுழை தோறுமுழை கொலைத்தலை மடப்பிடிகள் கூடிவிளை |
3.079.4 |
சிவபெருமான் இலைபோன்ற நுனியுடைய சூலப்படையை உடையவன். எட்டுக்கரங்களை உடையவன். நெருப்பைக் கையிலேந்தி எண்தோள் வீசி நடனம் ஆடுபவன். தலையிலுள்ள செஞ்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கியவன். அத்தகைய அழகான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மலைகளிலுள்ள குகைகளில் மான்களும், சிங்கங்களும், பன்றிகளும், யானைகளும், கொம்பாற் கொல்லுதலையுடைய இளம் பெண்யானைகளும் கூடி விளையாடுகின்ற திருக்கோகரணம் என்னும் தலமாகும்.
3650 | தொடைத்தலை
மலைத்திதழி துன்னிய சடைத்தலை மிலைச்சியத போதனனெ படைத்தலை பிடித்துமற வாளரொடு குடைத்தலை நதிப்படிய நின்றுபழி |
3.079.5 |
சிவபெருமான் தலைமாலை அணிந்தவர். சடையில் கொன்றை, எருக்கு, அலரி, வன்னிப்பத்திரங்களையும் அணிந்தவர். எம் முதல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமானது வெற்றி பொருந்திய வாளாயுதத்தை ஏந்திய வீரர்களுடன் வேடர்கள் நட்புக் கொண்டு கூடி அலைகளையுடைய புனித நதியில் குடைந்து மூழ்கி வணங்க அப்பெருமான் அவர்களின் பழிபாவத்தை நீக்கி அருள்புரியும் திருக்கோகரணமாகும்.
3651 | நீறுதிரு
மேனிமிசை யாடிநிறை ஏறுவிளை யாடவிசை கொண்டிடு ஆறுசம யங்களும்வி ரும்பியடி கூறுமனம் வேறிரதி வந்தடியர் |
3.079.6 |
சிவபெருமான் திருநீற்றைத் திருமேனியில் பூசியவர். திருக்கழலில் அணிந்த சிலம்பு ஒலி செய்ய இடபத்தில் ஏறி இசைபாடிப் பலி ஏற்று வருவார். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமானது சிவாகம விதிப்படி இறைவனின் திருவடிகளை விரும்பி வழிபடுகின்ற ஆறு சமயத்தவர்களும், மனத்தில் சிவானந்தம் மேலிட உடலில் நடுக்கம் வருகின்ற அடியவர்களாய் வாழ்கின்ற திருக்கோகரணமாகும்.
3652 | கல்லவட
மொந்தைகுழ றாளமலி பல்லபட நாகம்விரி கோவணவ நல்லமட மாதரர னாமமு கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ |
3.079.7 |
ஓசைமிகுந்த கல்லவடம், மொந்தை, குழல், தாளம், வலம்புரிச்சங்கு ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்ப சிவ பெருமான் நடனமாடுவார். அக்குப்பாசி அணிந்த இடுப்பில், நச்சுப்பற்களும், படமும் உடைய பாம்பை அணிந்து கோவண ஆடை உடுத்தவர். அத்தகைய சிவபெருமான் ஆளும் நகர் நற்குண, நற்செய்கை யுடையவர்களாகிய பெண்கள் சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லித் தீர்த்தத்தில் முழுக, கொல்லும் விடநோய் போன்ற வினைகளைத் தீர்த்து, காரியம் யாவினும் வெற்றி கொடுத்தருளும் திருக்கோகரணமாகும்.
3653 | வரைத்தல
நெருக்கிய முருட்டிரு விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி குரைத்தலை கழற்பணிய வோமம்வில |
3.079.8 |
முரட்டுத்தனமும், இருண்ட நிறமுமுடைய இராவணனின் பத்து வாய்களும் அலறும்படி, தன் காற்பெருவிரலை ஊன்றி அவனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, முனிவர்களும், வேத வல்லுநர்களும் வினைதீர, ஒலிக்கின்ற கழலணிந்த சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்வி புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும்.
3654 | வில்லிமையி
னால்விற லரக்கனுயிர் இல்லையுள தென்றிகலி நேடவெரி எல்லையில் வரைத்தகடல் வட்டமு கொல்லையி லிளங்குறவர் தம்மயிர் |
3.079.9 |
வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும், வேதத்தை ஓதும் பிரமனும், தம்முள் மாறுபட்டு இல்லையென்றும், உள்ளது என்றும் அறியமுடியாதவாறு தேட, நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ பெருமான் வீற்றிருந்தருளும் ஊர், எல்லையாக அளவுபடுத்திய கடலால் சூழப்பட்ட பூவுலகத்தோரும், தேவலோகத்தவரும் வணங்க, தினைப்புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை உலர்த்தும் எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும்.
3655 | நேசமின்
மனச்சமணர் தேரர்க தாசைகொண் மனத்தையடி யாரவர் பாசம தறுத்தவனி யிற்பெயர்கள் கூசவகை கண்டுபி னவற்கருள்க |
3.079.10 |
உள்ளன்பில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் சொற்களைப் பொய்யென நீக்கி, தன்னிடத்து ஆசை கொள்ளும்படியான மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும் அழகிய கருணையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இவ்வரிய பூவுலகில் பத்துப்பெயர்களையுடைய அர்ச்சுனனின் பாசத்தைப் போக்கி, அவன் நாணும்படி போர்செய்து பின் அருள் புரிந்த திருக்கோகரணம் ஆகும்.
3656 | கோடலர
வீனும்விரி சாரன்மு ஈடமினி தாகவுறை வானடிகள் நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய் பாடவல பத்தரவ ரெத்திசையு |
3.079.11 |
காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, ஆராய்ந்து தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகிய எல்லாத் திசையும் ஆள்வர். பின் சிவலோகமும் எளிதில் அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 77 | 78 | 79 | 80 | 81 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோகரணம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபெருமான், கோகரணமே, திருக்கோகரணம், வீற்றிருந்தருளும், என்னும், இடமாவது, கொண்டு, அப்பெருமான், திருக்கோகரணமாகும், இடமானது, நீக்கி, வெற்றி, அணிந்த, நெருக்கிய, திருவடிகளைப், சிவபெருமானின், இராவணனின், அணிந்தவர், பெருமான், செஞ்சடையில், திருத்தலமாகும், பரவுகின்ற, திருச்சிற்றம்பலம், திருமுறை, இறைவனின், திருவடிகளை, அத்தகைய, அலைகளையுடைய, உடையவன், தலமாகும், வேடர்கள்