முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.075.திருச்சண்பைநகர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.075.திருச்சண்பைநகர்
3.075.திருச்சண்பைநகர்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
3603 | எந்தமது சிந்தைபிரி யாதபெரு வந்துதுதி செய்யவளர் தூபமொடு அந்தியமர் சந்திபல வர்ச்சனைகள் சந்தமலி குந்தளநன் மாதினொடு |
3.075.1 |
எங்கள் சிந்தையிலிருந்து நீங்காத தலைவனே! என்று தேவர்கள் தொழுது போற்ற, நறுமணம் கமழும் தூபதீபம் முதலிய உபசாரங்களோடு பூசாவிதிப்படி மாலை, முதலிய சந்தியா காலங்களில் அர்ச்சனைகள் செய்ய வீற்றிருக்கும் அழகனான சிவபெருமான், நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற தலம் திருச்சண்பைநகர் ஆகும்.
3604 | அங்கம்விரி துத்தியர வாமைவிர பங்கய முகத்தரிவை யோடுபிரி பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவ சங்குபுரி யிப்பிதர ளத்திரள் |
3.075.2 |
திருமேனியிலே பரந்த புள்ளிகளையுடைய பாம்பையும், ஆமையோட்டையும் கலந்த மாலையாக மார்பிலே விரும்பியணிந்த அழகனாகிய சிவபெருமான், தாமரை மலர்போன்ற முகத்தையுடைய உமாதேவியாரோடு பிரியாது வாழ்கின்ற தலமாவது, பொங்கியெழும் கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து குவிக்கின்ற பவளத்திரள்களின் பக்கத்திலே, வலம்புரிச் சங்குகளும், சிப்பிகளும் சொரிந்த முத்துக் குவியல்களின் மிகுதியான பிரகாசத்தைக் கொண்ட திருச்சண்பை நகராகும்.
3605 | போழுமதி தாழுநதி பொங்கரவு யாழின்மொழி மாழைவிழி யேழையிள வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனை தாழைமுகிழ் வேழமிகு தந்தமென |
3.075.3 |
வட்டவடிவைப் பிளந்தாற் போன்ற பிறைச் சந்திரனும், கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும், சீறும் பாம்புகளும் தங்குகின்ற முறுக்குண்ட செஞ்சடையுடையவன் சிவபெருமான், யாழ் போன்ற இனிய மொழியையும், மாம்பிஞ்சு போன்ற விழிகளையும் கொண்டு தன்னையே பற்றுக் கோடாகக் கொண்ட உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம், வாழை, புலிநகக் கொன்றை, மகிழ், புன்னை முதலிய மரங்கள் நிறைந்து அடர்ந்த சோலைகளின் பக்கத்தில் மடல்கள் பொருந்திய தாழையின் அரும்பை யானையின் ஒடிந்த தந்தம் என்று சூடாது அலட்சியம் செய்யும் திருச்சண்பை நகராகும்.
3606 | கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி வட்டமதி தட்டுபொழி லுட்டமது சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர் |
3.075.4 |
முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, வைத்த பாதங்கள் வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்யத் திருநடனம் செய்யும் சிவபெருமான் பட்டத்தை நெற்றியில் அணிந்து, சூடிய மலர்மாலைகளின் நறுமணம் மிகுந்த பாவை போன்ற உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, எப்போதும் உண்மையே பேசுகின்ற, அறுபத்து நான்கு கலைகளையும் பயில்கின்ற கற்றவர்கள் கூறுவனவற்றை, சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலைகளில் வளர்கின்ற கிளிகள் சொல்லும் பான்மையுடன் விளங்கும் திருச்சண்பை நகராகும்.
3607 | பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி அணங்கெழுவு பாகமுடை யாகமுடை இணங்கெழுவி யாடுகொடி மாடமதி தணங்கெழுவி யேடலர்கொ டாமரையி |
3.075.5 |
பண்ணிசையோடு கூடிய பாடலும், ஆடலும் நீங்காத பரம்பொருளும், ஐசுவரியம் முதலிய ஆறுகுணங்களை உடையவனும், உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பாகமாகக் கொண்டவனும், அன்பர்கட்கு அருள்புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, ஒன்றோடொன்று இணங்கியாடுமாறு நாட்டப்பட்ட கொடிகளையுடைய மாடங்களும், மதில்களும் உடையதும், மணம் பொருந்திய புறவிடங்களிலெல்லாம் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் விரிந்த தாமரைமலர்கள் மேல் அன்னங்கள் வளர்கின்ற இயல்பினதும் ஆகிய திருச்சண்பைநகர் ஆகும்.
3608 | பாலனுயிர் மேலணவு காலனுயிர் ஆலுமயில் போலியலி யாயிழைத ஏலமலி சோலையின வண்டுமலர் சாலிவயல் கோலமலி சேலுகள |
3.075.6 |
பாலனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமனது உயிர் நீங்கும்படி உதைத்த பரமன், ஆடுகின்ற மயில் போன்ற சாயலையுடைய ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆபரணங்களையணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலமாவது, ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் மிகுந்த சோலைகளில் வண்டுகளின் கூட்டம் மலர்களைக் கிளறி, தேனைக்குடித்து இசைபாட, அழகிய மீன்கள் துள்ளிப்பாய, நீலோற் பல மலர்கள் செழித்து வளர்கின்ற திருச்சண்பை நகர் ஆகும்.
3609 | விண்பொயத னான்மழைவி ழாதொழியி மண்பொயத னால்வளமி லாதொழியி உண்பகர வாருலகி னூழிபல சண்பைநக ரீசனடி தாழுமடி |
3.075.7 |
வானம் பொய்த்து மழை பெய்யாது ஒழிந்தாலும், மிகுந்த விளைச்சலைத்தரும் நிலம் வறண்டதால் வளம் இல்லாமல் போனாலும், அடியவர்கட்கும், மற்றும் பசித்தவர்கட்கும் உணவுதரத் தம் கொடைத்தன்மையில் தவறாதவர்கள், நெடிய உலகத்தில் பல ஊழிகளிலும் நிலையாக இருந்த தலம் திருச்சண்பைநகர் ஆகும். அங்குக் கோயில் கொண்ட சிவபெருமான் திருவடிகளைத் தொழுது வணங்குகின்ற அடியார்களின் தன்மையும் அதுவேயாகும்.
3610 | வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு அரக்கனது ரக்கரசி ரத்துற இருக்கையத ருக்கன்முத லானவிமை றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் |
3.075.8 |
கயிலைமலையைப் பெயர்த்து இமயமலையரசனின் மகளான உமாதேவிக்கு அச்சத்தை உண்டாக்கிய, அறிவற்ற ஆனால் வலிமையுடைய இராவணனின் மார்பு, கைகள், தலைகள் ஆகியவை மலையின்கீழ் நொறுங்கும் படி தன் காற்பெருவிரலை ஊன்றி, பின் அவன் தன் தவறுணர்ந்து இறைஞ்ச ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந் தருளும் தலமாவது, சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திரு விழாவில் கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி, மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்க திருச்சண்பைநகர் ஆகும்.
3611 | நீலவரை போலநிகழ்
கேழலுரு மாலுமல ரானுமறி யாமைவளர் சேலுமின வேலுமன கண்ணியொடு சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு |
3.075.9 |
நீலமலைபோன்ற பெரிய பன்றி உருவம் கொண்ட திருமாலும், பெரிய அன்னப்பறவையின் உருவம் தாங்கிய பிரமனும், அறியாத வகையில் வளர்ந்தோங்கிய நெருப்புப் பிழம்பு வடிவாகிய வணங்குவோர்க்கு வேண்டும் வரங்கள் தருகின்ற சிவபெருமான், சேல்மீனும், வேலும் ஒத்த கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலம், சுற்றியுள்ள அயலிடங்களிலெல்லாம் நெற்பயிர்கள் மலிந்ததும், சோலைகளில் குயில்களும், மற்ற பறவைகளோடு கிளிகளும் வசிக்கின்றதுமான திருச்சண்பை நகராகும்.
3612 | போதியர்கள்
பிண்டியர்கள் போதுவழு, ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை ஆதியெமை யாளுடைய வரிவையொடு சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல் |
3.075.10 |
அரசமரத்தை வணங்கும் புத்தர்களும், அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் நேரம்தோறும் தவறாது உண்டு பொய்ப்பொருளாம் நிலையற்ற உலகப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற, மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிப் போசாத அவர்கள் உரைகளை மேற்கொண்டு, செய்யத்தக்க பயனுடைய செயல்யாதுமில்லை. பயன்தரும் நெறி எது என்று அறிபவர்களே! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும், எங்களை ஆட்கொள்ளும் உமா தேவியும் பிரியாது தங்கி இருக்கும் தலமாவது, உயர்ந்த சாதி இரத்தினங்களைத் தௌந்த கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து வயல்களில் விழும்படி செய்கின்ற திருச்சண்பை நகராகும். அதனைப் புகழ்ந்து பேசி அத்தலத்து இறைவனை வழிபடுவீர்களாக.
3613 | வாரின்மலி
கொங்கையுமை நங்கையொடு மூர்சாரின்முர றென்கடல் விசும்புற பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் |
3.075.11 |
கச்சணிந்த கொங்கைகளையுடைய உமைநங்கையோடு எவ்வுயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற சங்கரன் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலமாவதும், வீதிகள் முதலிய இடங்களில் கடலோசைபோல் முழங்குகின்ற பேரொலியானது, வானுலகைச் சென்றடையுமாறு உள்ளதும் ஆகிய திருச்சண்பை நகரைப் போற்றி, இப்பூவுலகில் நிலைத்த புகழுடைய தமிழ் ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடுகிறவர்கள் சிவலோகத்தை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சண்பைநகர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபெருமான், சண்பைநகரே, முதலிய, திருச்சண்பை, தலமாவது, திருச்சண்பைநகர், வீற்றிருந்தருளும், நகராகும், பொருந்திய, உமாதேவியோடு, சோலைகளில், மிகுந்த, வளர்கின்ற, நறுமணம், பற்றிப், செய்கின்ற, சங்கரன், வணங்கும், உருவம், குளிர்ச்சி, செய்யும், பேசுகின்ற, கடலலைகள், தேவர்கள், தொழுது, நீங்காத, திருச்சிற்றம்பலம், திருமுறை, கமழும், அழகனான, பிரியாது, உமாதேவியாரோடு, ளத்திரள், கொண்டு, அடித்துக்கொண்டு