முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.072.திருமாகறல்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.072.திருமாகறல்

3.072.திருமாகறல்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர்.
தேவியார் - புவனநாயகியம்மை.
3570 | விங்குவிளை
கழனிமிகு கடைசியர்கள் மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் |
3.072.1 |
நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத்தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும்.
3571 | கலையினொலி மங்கையர்கள் பாடலொலி மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் இலையின்மலி வேல்நுனைய சூலம்வல அலைகொள்புன லேந்துபெரு மானடியை |
3.072.2 |
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும், பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர, அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசை செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற அமைப்புடைய வேலையும், கூர்மையான நுனியுடைய சூலத்தையும், வலக்கையிலே ஏந்தி, நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும்.
3572 | காலையொடு துந்துபிகள் சங்குகுழல் மாலைவழி பாடுசெய்து மாதவர்க தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் பாலையன நீறுபுனை வானடியை |
3.072.3 |
துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து, அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி, அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான். அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும்.
3573 | இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக மங்கையரு மைந்தர்களு மன்னுபுன கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி நுங்கள்வினை தீரமிக வேத்திவழி |
3.072.4 |
ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக.
3574 | துஞ்சுநறு
நீலமிரு ணீங்கவொளி மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கண்ட வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி |
3.072.5 |
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து, இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன. நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன. அருகிலுள்ள, மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன. இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் வஞ்ச முடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான். ஒப்பற்ற மழுப்படையை உடையவன். நஞ்சை யுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன். அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா.
3575 | மன்னுமறை யோர்களொடு பல்படிம இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் |
3.072.6 |
என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும், பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர்.
3576 | வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மைகொள்விரி கானன்மது வார்கழனி கையகரி கால்வரையின் மேலதுரி ஐயனடி சேர்பவரை யஞ்சியடை |
3.072.7 |
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும், இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன். யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும்.
3577 | தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு மாசுபடு செய்கைமிக மாதவர்க பாசுபத விச்சைவரி நச்சரவு பூசுபொடி யீசனென வேத்தவினை |
3.072.8 |
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப் பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன். திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும்.
3578 | தூயவிரி தாமரைக ணெய்தல்கழு பாயவரி வண்டுபல பண்முரலு சாயவிர லூன்றியவி ராவணன ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை |
3.072.9 |
தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர், குவளை போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன். அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும்.
3579 | காலினல பைங்கழல்க ணீண்முடியின் மாலுமல ரானுமறி யாமையெரி நாலுமெரி தோலுமுரி மாமணிய ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி |
3.072.10 |
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா.
3580 | கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் அடையும்வகை யாற்பரவி யரனையடி மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் |
3.072.11 |
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும், நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமாகறல் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமாகறல், வீற்றிருந்தருளுகின்றான், என்னும், திருத்தலத்தில், சிவபெருமான், மாகறலுளான், போற்றி, அப்பெருமான், சிவந்த, கமழும், நறுமணம், நீங்கும், திருவடிகளை, வினைகள், உயர்ந்த, அப்பெருமானின், அணிந்த, அடியார்களை, யாவினைகளே, சிவபெருமானின், மேகங்கள், கூடியுடனாய், மலர்கள், உரித்துப், நினைந்து, மாசுபடு, பாசுபத, வரிகளையுடைய, தலைவனான, எளிதில், அணிந்துள்ளான், தொல்வினைகள், தொல்வினைக, அவனுடைய, கொடிகள், நெருப்புப், தாங்கிய, யேத்தவினை, இடபத்தை, தீவினைகள், திங்களணி, திருவடிகளைப், மாடமலி, திருவெண்ணீற்றைப், வினையாவும், விரும்பி, திருமுறை, மாதவர்க, திருச்சிற்றம்பலம், சந்திரனையும்