முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.070.திருமயிலாடுதுறை
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.070.திருமயிலாடுதுறை
3.070.திருமயிலாடுதுறை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர்.
தேவியார் - அஞ்சநாயகியம்மை.
3548 | ஏனவெயி றாடரவொ டென்புவரி கானவரி நீடுழுவை யதளுடைய ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின் வானமுறு சோலைமிசை மாசுபட |
3.070.1 |
சிவபெருமான் பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும், வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர், படர்ந்து விரிந்த சடையுடைய அச்சிவ பெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், புகழ்மிக்க அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படியும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.
3549 | அந்தண்மதி
செஞ்சடைய ரங்கணெழில் எந்தமடி கட்கினிய தானமது கந்தமலி சந்தினொடு காரகிலும் வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் |
3.070.2 |
சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடையவர். அச்சடையிலே அழகிய கொன்றை மாலையை அணிந்த அழகரான எம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இனிய இடம் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். அத்திருத்தலமானது மணம் கமழும் சந்தனமரங்களோடு, கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால், அதனைக் கோபித்து அதற்கு எதிராக, கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் மலர்களை வீசுகின்ற தன்மையுடன் திகழ்வதாகும்.
3550 | தோளின்மிசை வரியரவ நஞ்சழல மூளைபடு வெண்டலையி லுண்டுமுது பாளைபடு பைங்கமுகு செங்கனி வாளைகுதி கொள்ளமடல் விரியமண |
3.070.3 |
சிவபெருமான், தோளின்மீது வரிகளையுடைய பாம்புநஞ்சை உமிழுமாறு, அதனை இறுக அணிந்தவர். எண்ணுதற்கு அரியவராய் விளங்குபவர். மூளை நீங்கிய பிரமகபாலத்தில் பலியேற்று உண்டு சுடுகாட்டில் வசிப்பவர். எப்பொருட்கும் முதல்வரான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், காவிரியிலுள்ள வாளைமீன்கள் கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய, அவை சிவந்த பழங்களை உதிர்க்க, அதனால் பூ இதழ்கள் விரிய நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
3551 | ஏதமில ரரியமறை மலையர்மக பேதைதட மார்பதிட மாகவுறை காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை மாதர்மறி திரைகள்புக வெறியவெறி |
3.070.4 |
சிவபெருமான் எவ்விதக் குற்றமுமில்லாதவர். அரிய வேதங்களை அருளிச் செய்து அவற்றின் பொருளாகவும் விளங்குபவர். மலையரசன் மகளான. ஒளி பொருந்திய வளைந்த நெற்றியையுடைய உமாதேவியின் அகன்ற மார்பு தன் இடப் பகுதியாக உறைகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது. ஆரவாரித்து வரும் அலைகள் மூலம் மல்லிகை முதலிய நறுமணமலர்கள் கூடிவரும் காவிரியில் நீராட மாதர்கள் புக, மணமற்ற பொருள்களும் மணம் கமழப்பெறும் திருமாயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
3552 | பூவிரி கதுப்பின்மட மங்கையர பாவிரி யிசைக்குரிய பாடல்பயி காவிரி நுரைத்திரு கரைக்குமணி மாவிரி மதுக்கிழிய மந்திகுதி |
3.070.5 |
மலர்ந்த பூக்களைக் கூந்தலில் சூடியுள்ள, தாருகாவனத்து முனிபத்தினிகளின் இல்லங்கள்தோறும் சென்று பிச்சையெடுத்துப் பண்ணோடு கூடிய பாடல்களை இசைக்கும் சிவபெருமான் மிகப் பழமையானவர். காவிரியின் அலைகள் இரு கரைகளிலுமுள்ள சோலைகளில் இரத்தினங்களைச் சிதற, அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க, மரக்கிளைகளில் மோதி, மாமரத்தில் கட்டப்பட்ட தேன்கூடுகள் கிழியத் தேன் சிந்த, அதனை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளமிக்க திருமயிலாடுதுறையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
3553 | கடந்திகழ் கருங்களி றுரித்துமையு விடந்திகழு மூவிலைநல் வேலுடைய தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக |
3.070.6 |
சிவபெருமான் மதம் பொருந்திய கரிய யானையின் தோலை உரித்து உமாதேவி அஞ்சுமாறு போர்த்திக் கொண்டவர். மனத்தால் எண்ணுதற்கு அரியவர். பகைவர்கட்குக் கேடு விளைவிக்கும் மூவிலைச் சூலம் கொண்டவர். வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர். அப்பெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடமாவது ஒளிர்கின்ற மேனியும், கொவ்வைப் பழம் போல் அழகிய சிவந்த வாயும் கொண்ட தேவமகளிர் நீரைக் குடைந்து ஆடுவதால் நீர் நறுமணம் கமழும் சிறப்புடைய திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.
3554 | அவ்வதிசை யாருமடி யாருமுள எவ்வமற வைகலு மிரங்கியெரி கவ்வையொடு காவிரி கலந்துவரு மவ்வலொடு மாதவி மயங்கிமண |
3.070.7 |
அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா அடியவர்களும் நல்ல வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து, அவர்களுடைய வினைகள். நீங்க நாள்தோறும் இரங்கித் தீயேந்தி ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஆரவாரத் தோடு வரும் காவிரி - மணமிக்க மல்லிகை, மாரவி முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன் தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
3555 | இலங்கையநகர் மன்னன்முடி யொருபதினொ விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய மலங்கிவரு காவிரி நிரந்துபொழி |
3.070.8 |
இலங்கை மன்னனான இராவணனின் பத்து மடிகளையும், இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற் பெருவிரலைக் கயிலைமலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், கலங்களோடு நுரையைத் தள்ளி, எதிரேயுள்ள குளத்தில் பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு களிப்புடன் சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க திரும்யிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
3556 | ஒண்டிறலி னான்முகனு மாலுமிக அண்டமுற வங்கியுரு வாகிமிக கொண்டையிரை கொண்டுகௌ றாருட வண்டன்மணல் கெண்டிமட நாரையிளை |
3.070.9 |
மிகுந்த வலிமையுடைய பிரனும், திருமாலும் தேடியும் உணரமடியபவண்ணம், அகாயம்வரை அளாவி நெருப்புப் பிழம்பாய் நீண்டு நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, கொண்டைமீனை இரையாக உண்டு, கௌறு, ஆரல் முதலிய மீன்கள் விளங்குகின்ற ஆற்றின் கரையிலுள்ள நாரை, தண்ணீர் அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக் கிளறி விளையாடும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.
3557 | மிண்டுதிற லமணரொடு சாக்கியரு இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு தெண்டிரை பரந்தொழுகு காவிரிய வண்டவை திளைக்கமது வந்தொழுகு |
3.070.10 |
துடுக்காகப் பேசுகின்ற சமணர்களும், புத்தர்களும் பழித்துக்கூற, அவர்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவனும், இண்டைமாலை சூடிய சடைமுடி உடைய வனுமான எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, தௌளிய அலைகள் உடன் பாயும் காவிரியாற்றின் தென்கரையில் மணமிக்க பூக்களில் வண்டுகள் மூழ்கியுண்ண, தேன் வெளிப்பட்டு ஒழுகுகின்ற சோலைகளையுடைய அழகிய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
3558 | நிணந்தரு மயானநில வானமதி கணந்தொழு கபாலிகழ லேத்திமிக மணந்தண்மலி காழிமறை ஞானசம் புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் |
3.070.11 |
இறந்தார் உடலின் கொழுப்புப் பொருந்திய சுடுகாட்டில், பூவுலகிலும், வானுலகிலும் உள்ள வீரர் எவரையும் பொருட்படுத்தாத சிறப்புடைய சூலப்படையோடு, பேய்க்கூட்டங்கள் தொழ, பிரமகபாலத்தை ஏந்தியுள்ள சிவபெருமானின் திருவடிகளை வணங்கி மிக்க அன்புடன், நறுமணமும், குளிர்ச்சியும் பொருந்திய சீகாழியில் அவதரித்த வேதங்களின் உட்பொருளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன், திருமயிலாடுதுறையைப் போற்றிப்ப பாடிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் இசையோடு பாடுகிறவர்கள் சொர்க்கலோகம் அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமயிலாடுதுறை - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிவபெருமான், திருத்தலமாகும், என்னும், லாடுதுறையே, வீற்றிருந்தருளும், திருமயிலாடுதுறை, அலைகள், இடமாவது, காவிரி, பொருந்திய, கமழும், நறுமணம், மணமிக்க, விளங்குபவர், நாறுமயி, நிரந்துகமழ்பூ, திருமயிலாடு, சிவந்த, வரிகளையுடைய, திருச்சிற்றம்பலம், முதலிய, வாழும், மல்லிகை, வண்டுகள், வளமிக்க, தென்கரை, திருமுறை, சிறப்புடைய, அப்பெருமான், கொண்டவர், செய்து, வேதங்களை, அணிந்த, யுந்தியெதிர், நோக்கரியராய், மலர்களை, காவிரியின், எண்ணுதற்கு, காவிரியுளால், கொண்டு, கவ்வையொடு, அதனால், சுடுகாட்டில், அருளிச்