முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.039.திருஆலவாய்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.039.திருஆலவாய்
3.039.திருஆலவாய்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்தசுவாமிகள் எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு சுவாமிகளுடைய திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது; சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக் குறிப்பினைத் திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.
3211 | மானினேர்விழி மாதராய்வழு பானல்வாயொரு பாலனீங்கிவ ஆனைமாமலை யாதியாய ஈனர்கட்கௌ யேனலேன்திரு |
3.039.1 |
மான்போன்ற மருண்ட பார்வையுடைய மாதரசியே! பாண்டிய மன்னனின் மனைவியான பெருந்தேவியே! கேள். "பால்வடியும் நல்ல வாயையுடைய பாலன்" என்று நீ இரக்கமடைய வேண்டா. திருஆலவாயரன் துணைநிற்பதால் ஆனைமலை முதலான இடங்களிலிருந்து வந்துள்ளவர்களும், பல துன்பங்களைப் பிறர்க்கு விளைவிக்கின்றவர்களுமாகிய இழிந்த இச்சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன்.
3212 | ஆகமத்தொடு மந்திரங்க பாகதத்தொ டிரைத்துரைத்த மாகதக்கரி போற்றிரிந்து ஆகதர்க்கௌ யேனலேன்திரு |
3.039.2 |
வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்குமேனியுடைய சமணர்கட்கு நான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன்துணை நிற்பதால் .
3213 | அத்தகுபொரு ளுண்டுமில்லையு ஒத்தொவ்வாமை மொழிந்துவாதி சத்திரத்தின் மடிந்தொடிந்து சித்திரர்க்கௌ யேனலேன்றிரு |
3.039.3 |
கடவுள் உண்டு என்றும் சொல்லமுடியாது, இல்லை என்றும் சொல்லமுடியாது என்னும் பொருள்பட அத்திநாத்தி என்று ஒத்தும், ஒவ்வாமலும் கூறும் சமணர்கள் வாதில் அழிந்து தோற்று, எனது கவிதையாகிய வாளால் மடிந்து ஒடிவர். பார்ப்பவர் வெட்கப்படும்படி ஆடையின்றி உலவும் தங்கள் நெறியே மேலானது என சித்திரவார்த்தை பேசுபவர்கட்கு, நான் ஆலவாயரன் துணைநிற்றலால் எளியேன் அல்லேன்.
3214 | சந்துசேனனு மிந்துசேனனுந் கந்துசேனனுங் கனகசேனனு மந்திபோற்றிரிந் தாரியத்தொடு அந்தகர்க்கௌ யேனலேன்றிரு |
3.039.4 |
சந்தசேனன், இந்து சேனன், தருமசேனன், மாசுடைய கந்தசேனன், கனகசேனன் முதலான பெயர்களைக் கொண்டு மந்திபோல் திரிந்து, வடமொழி, தென்மொழிகளைக் கற்றதன் பயனாகிய சிவனே முழுமுதற்கடவுள் எனவும், சைவமே சீரிய சமயநெறி என்னும் உணர்வினைப் பெறாது அகக்கண்ணிழந்து திரியும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்னுள்ளிருந்து அருள்புரிவார்.
3215 | கூட்டினார்கி ளியின்விருத்த பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு காட்டியேவரு மாடெலாங்கவர் சேட்டைகட்கௌ யேனலேன்றிரு |
3.039.5 |
கூண்டிலிருக்கும் கிளியின் ஒலித்தன்மைக்கு ஏற்ப, கிளிவிருத்தம் முதலிய சுவடிகளின் பொருள்களை மெய்யென்று சொல்லி ஏமாற்றுகிறவர்கட்கும், பல தருமங்களைச் செய்தவர்களாக வெளியில் காட்டி அவற்றால் வரும் செல்வங்களைக்கவரும் கீழோர்கட்கும் இரக்கமில்லாத குறும்பர் கட்கும் யான் எளியேனல்லேன். திருவாலவாயரன் என்றும் நின்று அருள்புரிவார்.
3216 | கனகநந்தியும் புட்பநந்தியும் சுனகநந்தியுங் குனகநந்தியுந் அனகநந்தியர் மதுவொழிந்தவ சினகருக்கௌ யேனலேன்றிரு |
3.039.6 |
கனகநந்தி, புட்நந்தி, பவணநந்தி, குமண மாசுனகநந்தி, குனகநந்தி, திவணநந்தி என எண்ணற்ற பலவகை நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை ஒழித்து, அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு யான் எளியேனல்லேன், திருவாலவாயரன் என்னுள் நிற்பதால்.
3217 | பந்தணம்மவை யொன்றிலம்பரி மந்தணம்பல பேசிமாசறு அந்தணம்மரு கந்தணம்மது சிந்தணர்க்கௌ யேனலேன்றிரு |
3.039.7 |
சுற்றமும், பற்றும் இல்லை என்று கூறியும், இரகசியமான வாசகங்களைப் பேசியும், குற்றமற்ற ஒழுங்கு நெறியின்றியும், நியாயமற்ற நெறிநின்று, ஆருகதசமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் சமணர்கட்கும், புத்த சமயத்தின் கொள்கை இத்தகையது என்று கூறித்திரியும் புத்தர்கட்கும், அச்சமயங்களில் சித்தி பெற்றோர்கட்கும் ஆலவாயரன் என்றும் துணை நிற்றலால், யான் எளியவன் அல்லேன்.
3218 | மேலெனக்கெதி ரில்லையென்ற போலியைப்பணி யக்கிலாதொரு பீலிகைக்கொடு பாயிடுக்கி சீலிகட்கௌ யேனலேன்றிரு |
3.039.8 |
தனக்கு மேலானவரும், எதிரானவரும் இல்லை என்று கருதிய இராவணனது செருக்கை அழித்த, தீயைப்போன்று செந்நிற மேனியுடைய சிவபெருமானைப் பணிந்து ஏத்தாது, பொய்த்தவம் பூண்டு, குண்டிகை, மயிற்பீலி ஆகியவற்றைக் கொண்டு, பாயை அக்குளில் இடுக்கி நடந்து செல்லுங்கால் சிற்றுயிர்க்கு ஊறுநேருமோ என அஞ்சி நடுக்கத்துடன் ஒருவன்பின் ஒருவராய்ச் செல்வதைச் சீலம் எனக்கொள்ளும் சமணர்கட்கு, யான், திருவாலவாயரன் என்னுள்துணை நிற்றலால் எளியவனல்லேன்.
3219 | பூமகற்கு மரிக்குமோர்வரு சாமவத்தையி னார்கள்போறலை வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி ஆமவர்க்கௌ யேனலேன்றிரு |
3.039.9 |
பிரமனும், திருமாலும் அறியவொண்ணாத புண்ணியனான சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்காது, இறந்தோர்க்கு நீர்க்கடன் செய்பவர்போல் தலைமுடியைக் களைந்து, பொய்த்தவத்தால் துன்புறும் நிலையடையும்படி உடம்பை வாட்டி, பொருளற்ற உரைகளைக் கூறுகின்ற சமணர்கட்கு யான் எளியேன் அல்லேன், திருவாலவாயரன் என்னுள் துணை நிற்றலால்.
3220 | தங்களுக்குமச் சாக்கியர்க்குந் எங்கணாயக னேத்தொழிந்திடுக் பொங்குநூல்வழி யன்றியேபுல அங்கதர்க்கௌ யேனலேன்றிரு |
3.039.10 |
சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய, நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய சிவபெருமானை வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப் பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருவாலவாயரன் என்னுள் நிற்பதால் எளியேன் அல்லேன்.
3221 | எக்கராமமண் கையருக்கௌ சொக்கனென்னு ளிருக்கவேதுளங் தக்கசீர்ப்புக லிக்குமன்றமிழ் ஒக்கவேயுரை செய்தபத்து |
3.039.11 |
திருஆலவாய் இறைவன் சொக்கநாதன் என் உள்ளத்தில் இருத்தலால், செருக்குடைய சமணர்கட்கு யான் எளியவன் அல்லன் என்று பாண்டிய மன்னன் முன்னிலையில் திருப்புகலியில் அவதரித்த தமிழ் நாதனாகிய ஞானசம்பந்தன் வாய்மையோடு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குத் துன்பம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஆலவாய் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யேனலேன்றிரு, வாலவாயர, னிற்கவே, அல்லேன், சமணர்கட்கு, திருவாலவாயரன், எளியேன், திருஆலவாய், பொய்த்தவம், என்றும், எளியேனல்லேன், நிற்றலால், என்னுள், என்னும், நிற்பதால், கொண்டு, புத்தர்கட்கும், சமணர்கட்கும், கூறித்திரியும், திருச்சிற்றம்பலம், எளியவன், பூண்டு, திருமுறை, குண்டிகை, இத்தகையது, கொள்கை, பேசுபவர்கட்கு, கூறும், முதலான, ஆலவாயரன், பாண்டிய, திரிந்து, அருள்புரிவார், யேனலேன்திரு, சொல்லமுடியாது