முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.089.திருக்கொச்சைவயம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.089.திருக்கொச்சைவயம்
2.089.திருக்கொச்சைவயம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
2432 |
அறையும் பூம்புன லோடும் பிறையுஞ் சூடுவர் மார்பிற் மறையி னொல்லொலி யோவா குறைவி லந்தணர் வாழுங் |
2.089. 1 |
வேதம் ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி நீங்காத மந்திரங்களோடு கூடிய வேள்விகள் நிகழ்வதும் குறைவற்ற அந்தணர்கள் வாழ்வதுமாய கொச்சை வயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், ஒலிக்கின்ற அழகிய கங்கையோடு ஆடும் பாம்பையும் அணிந்துள்ள சடைமேல், பிறையையும் சூடியிருப்பவர். திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர்.
2433 | சுண்ணத்தர்
தோலொடு நூல்சேர் கண்ணத்தர் வெங்கன லேந்திக் எண்ணத்தர் கேள்விநல் வேள்வி வண்ணத்த வந்தணர் வாழுங் |
2.089.2 |
வேதங்களை உணர்ந்தவர்களும், நல்லவேள்விகளைத் தவறாது செய்பவரும், மேம்பட்ட எரியோம்பும் தன்மையர் என்று சொல்லத் தக்கவருமாகிய அந்தணர் வாழும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், திருநீறு அணிந்தவர். மான்தோலோடு முப்புரிநூலை அணிந்த மாபினர். சூழ்ந்த பூதகணங்களை உடையவர். கொடிய கனலைக் கையில் ஏந்தி இரவில் நடனம் புரிபவர். குற்றமற்ற மனத்தில் உறைபவர்.
2434 | பாலை
யன்னவெண் ணீறு மாலை யாடுவர் கீத வேலை மால்கட லோதம் கோல மாமணி சிந்துங் |
2.089. 3 |
வேலை எனப்படும் பெரிய கடல் நீரின் வெள்ளமாகப் பெருகிய ஓதத்தின் அலைகள் அழகிய சிறந்தமணிகளைக் கரைமிசைச் சிந்தும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசியவர். சடைகள் பலவும் தாழ்ந்து தொங்க, மாலைக் காலத்தே நடனம் புரிபவர். வேதகீதங்கள் பாடுதலை விரும்புபவர்.
2435 | கடிகொள்
கூவிள மத்தங் பொடிகள் பூசிய மார்பிற் கடிகொ ணீடொலி சங்கி கொடிக ளோங்கிய மாடக் |
2.089. 4 |
மணவீடுகளில் நீண்டு ஒலிக்கும் சங்குகளின் ஒலியோடு, கலைகள் பலவற்றின் ஒலிகளும் சேர்ந்து ஒலிப்பதும் நீண்ட கொடிகள் விளங்கும் மாடங்களை உடையதுமான கொச்சை வயத்தில் விளங்கும் இறைவர், வில்வம், ஊமத்தை ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற சடையின்கண் நீண்ட கண்ணி சூடியவர். திருநீறு அணிந்துள்ள மார்பின்கண் கொண்டுள்ள உமையம்மைக்குத்தம் திருமேனியில் பாதியை வழங்கியவர்.
2436 | ஆடன்
மாமதி யுடையார் வாடல் வெண்டலை யேந்தி ஆடன் மாமட மஞ்ஞை கூடு தண்பொழில் சூழ்ந்த |
2.089. 5 |
ஆடும் இளமயில்கள் அழகிய தம் பெண்ணினத்தோடு மகிழ்ந்து கூடும் தண்ணிய பொழில்கள் சூழ்ந்த கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான், வானவெளியில் திரியும் சிறந்த மதியைச் சூடியவர். பொருந்திய பூதகணங்கள் சூழ ஊன்வற்றிய வெண்டலையைக் கையில் ஏந்தி உலகில் மகளிர் இடும் பிச்சைக்கு உழல்பவர்.
2437 |
மண்டு கங்கையும் அரவும் றுண்ட வெண்பிறை யணிவர் விண்ட தானவ ரரணம் கொண்ட கோலம துடையார் |
2.089. 6 |
கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான் நீர் செறிந்த கங்கையும் பாம்பும் தங்கிய நீண்ட சடைமுடியில், வெள்ளிய பிறைத் துண்டத்தை அணிந்தவர். பழமையான மேருமலையை வில்லாகக் கொண்டு பகைகொண்ட அசுரர்தம் மூவரணங்களும் கொடிய எரியில் வெந்தழியுமாறு செய்து, விடைமீது அருள் புரியும் கோலத்துடன் காட்சி தருபவர்.
2438 | அன்ற
வானிழ லமர்ந்து பொன்றி னார்தலை யோட்டில் வென்றி வேந்தனை யொல்க குன்ற மன்னபொன் மாடக் |
2.089. 8 |
வானில் தோயும் மலை போன்ற அழகிய மாட வீடுகளைக் கொண்ட கொச்சை வயத்தில் அமர்ந்துள்ள இறைவர், அக்காலத்தில் ஆல்நிழற்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் அருளியவர். இறந்த பிரமனது தலையோட்டில் உண்பவர். கடல் பொரும் இலங்கை மன்னன் இராவணனை வலியழியுமாறு ஊன்றிய கால் விரலினர்.
2439 | சீர்கொண்
மாமல ரானுஞ் ஏர்கொள் வெவ்வழ லாகி பார்கொள் விண்ணழல் கானீர்ப் கூர்கொள் வேல்வல னேந்திக் |
2.089.9 |
பால்போன்று இனிய மொழி பேசுபவளாகிய உமையம்மையாரோடு கையில் கூரிய வேலை வெற்றிபெற ஏந்தியவராய்க் கொச்சை வயத்தில் விளங்கும் பெருமானார், சிறப்பமைந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் செங்கண் மாலும் போற்றித் துதிக்க அழகிய கொடிய அழலுருவாகி நிமிர்ந்தவர். நிலம் விண்முதலான ஐம் பூத வடிவினர்.
2440 |
குண்டர் வண்டுவ ராடை மிண்டர் பேசிய பேச்சு பண்டை நம்வினை தீர்க்கும் கொண்டல் சேர்மணி மாடக் |
2.089.10 |
குண்டர்களாகிய சமணர்களும், செறிந்த துவர் ஊட்டப்பட்ட ஆடையைப் போர்த்துள்ள தனிக்கொள்கையுடைய புத்தர்களுமாகிய வலியர்கள் பேசும் பேச்சுக்கள் மெய்யல்லாதவை. அவற்றைக் கருதாதவர்க்கு அருள்புரிபவர். நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். நாம் செய்த பழவினைகளைத் தீர்த்தருளும் பண்பினர். ஒளிபொருந்திய கொடி போன்ற உமையம்மையாரோடு மேகங்கள் தவழும் மணி மாடங்களை உடைய கொச்சை வயத்தில் எழுந்தருளியிருப்பவர்.
2441 |
கொந்த ணிபொழில் சூழ்ந்த அந்த ணன்அடி யேத்தும் சந்த மார்ந்தழ காய முந்தி வானவ ரோடும் |
2.089. 11 |
கொத்தாக மலர்ந்த பூக்களுடன் கூடிய அழகிய பொழில் சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவிய அந்தணனாகிய இறைவன் திருவடிகளை ஏத்தும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்தம் பொருந்திய அழகிய இத்தமிழ் மாலையை ஓதிப் பரவ வல்லவர், வினைகள் கெட முற்படச் சென்று வானவர்களோடு அவர்கள் உலகில் புகவல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கொச்சைவயம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொச்சை, வயமமர்ந், வயத்தில், சூழ்ந்த, இறைவர், அமர்ந்துள்ள, கையில், விளங்கும், பெருமான், உமையம்மையாரோடு, கொச்சைவயத்தில், பொருந்திய, சூடியவர், உலகில், விரலினர், வெவ்வழ, பண்பினர், யோடுங், கங்கையும், மாடங்களை, செறிந்த, உடையவர், மார்பிற், வேள்வி, தன்மேற், திருச்சிற்றம்பலம், திருமுறை, வாழுங், அணிந்துள்ள, அணிந்தவர், திருக்கொச்சைவயம், திருநீறு, எழுந்தருளிய, திருமேனியில், புரிபவர்