முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.085.கோளாறு திருப்பதிகம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.085.கோளாறு திருப்பதிகம்
2.085.கோளாறு திருப்பதிகம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இப்பதிகம் பாண்டிநாட்டுக் கெழுந்தருளியபோது அருளிச்செய்தது.
2388 | வேயுறு
தோளிபங்கன் விடமுண்டகண்டன் மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 1 |
மூங்கில்போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
2389 | என்பொடு
கொம்பொடாமை யினவமார் பிலங்க பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 2 |
என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் சூடி உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத்தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.
2390 | உருவளர்
பவளமேனி யொளிநீ றணிந்து முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 3 |
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும் அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.
2391 | மதிநுதன்
மங்கையோடு வடபா லிருந்து நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 4 |
பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.
2392 | நஞ்சணி
கண்டன்எந்தை மடவாள்த னோடும் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் அஞ்சிடு நல்லநல்ல வவை நல்ல நல்ல |
2.085.5 |
நஞ்சணிந்த கண்டனும், எந்தையும், உமையம்மையாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான், இருள் செறிந்தவன்னிஇலை, கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.
2393 | வாள்வரிய
தளதாடை வரிகோ வணத்தர் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 6 |
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தேலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள், வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலியகுரங்கு, புலி., கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும்! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும்.
2394 | செப்பிள
முலைநன்மங்கை யொருபாக மாக ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 7 |
செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமைநங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவபிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத்தால், வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.
2395 | வேள்பட
விழிசெய்தன்று விடைமே லிருந்து வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 8 |
மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து, முடிமிசை ஒளிபொருந்திய பிறை, வன்னி, கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிறராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும்.
2396 | பலபல
வேடமாகும் பரனாரி பாகன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல |
2.085.9 |
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.
2397 | கொத்தலர்
குழலியோடு விசையற்கு நல்கு மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல |
2.085. 10 |
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும்.
2398 | தேனமர்
பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி நான்முகன் ஆதியாய பிரமா புரத்து தானுறு கோளுநாளும் அடியாரை வந்து ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் |
2.085. 11 |
தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 83 | 84 | 85 | 86 | 87 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோளாறு திருப்பதிகம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - செய்யும், நல்லனவே, ரவர்க்கு, புகுந்த, அதனால், காரணத்தால், வவைநல்ல, நல்லநல்ல, முடிமேல், ஆகியவற்றை, முடிமே, லணிந்தென், புகுந்துள்ள, அணிந்து, சிவபிரான், பொருந்திய, உமையம்மையாரோடு, நமக்கு, உடனாய், அடியார்களுக்கும், மிகவும், கொன்றைமாலை, வன்னிகொன்றை, எங்கள், திங்கள், பலவும், வந்தென், புகுந்து, வண்ணம், மடவாள், மிகையான, நலியாத, அலைகடல், கொலையானை, எங்கும், திருநீறு, பாம்பு, விடையேறு, முனிவன், தீமைகள், வெள்ளை, கண்டனும், அணிந்தவனாய், எருதேறி, ஞாயிறு, திருச்சிற்றம்பலம், திருப்பதிகம், திருமுறை, அடியவர்கட்கும், கோளாறு, லிருந்து, இருந்து, நல்லனவாகவே, விடைமீது, திருமகள், கொன்றை, னோடும்