முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.080.திருக்கடவூர்மயானம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.080.திருக்கடவூர்மயானம்
2.080.திருக்கடவூர்மயானம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர்.
தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
2335 | வரியமறையார்
பிறையார் எரியமதில்கள் எய்தார் கரியமிடறு முடையார் பெரியவிடைமேல் வருவார் |
2.080. 1 |
இசைப்பாடல்களாக அமைந்த வேதங்களை அருளியவர். பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள் எரியுமாறு கணைதொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை ஆயுதத்தை உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பெரிய விடைமீது ஏறிவருபவர். அவர் எம்பிரானாராகிய அடிகள் ஆவார்.
2336 | மங்கைமணந்த
மார்பர் கங்கைசடையிற் கரந்தார் செங்கண்வெள்ளே றேறிச் அங்கையேறிய மறியார் |
2.080.2 |
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட மார்பினர். மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர். கங்கையைச் சடையின் மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். சிவந்த கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர். அழகிய கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
2337 | ஈடலிடப
மிசைய காடதிடமா வுடையார் பாடலிசைகொள் கருவி ஆடலரவ முடையார் |
2.080.3 |
ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி, சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார். பாடல் இசைக்கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.
2338 | இறைநின்
றிலங்கு வளையா மறைநின் றிலங்கு மொழியார் கறைநின் றிலங்கு பொழில்சூழ் பிறைநின் றிலங்கு சடையார் |
2.080. 4 |
முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் உடையவர். வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தௌந்த ஞானிகளின் மனத்தின்கண் வந்து தங்குபவர். கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர். பிறை விளங்கும் சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
2339 | வெள்ளையெருத்தின்
மிசையார் துள்ளுமிளமான் மறியார் கள்ளநகுவெண் டலையார் பிள்ளைமதிய முடையார் |
2.080. 5 |
வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர். ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில் ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க 132 அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம்பிறையைச் சூடியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர்.
2340 | பொன்றாதுதிரு
மணங்கொள் ஒன்றாவெள்ளே றுயர்த்த கன்றாவினஞ்சூழ் புறவிற் பின்றாழ்சடைய ரொருவர் |
2.080. 6 |
பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய வெள்ளேற்றினைக் கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும் கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து தொங்கும் சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
2341 | >பாசமான
களைவார் ஆசைதீரக் கொடுப்பா காசைமலர்போன் மிடற்றார் பேசவருவா ரொருவர் |
2.080. 7 |
பாசங்களைப் போக்குபவர். அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர். மாலையணிந்த விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்க வரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
2342 | செற்றவரக்க
னலறத் கற்குன்றடர்த்த பெருமான் மற்றொன்றிணையில் வலிய பெற்றொன்றேறி வருவார் |
2.080. 8 |
சினம் மிக்க இராவணன் அலறுமாறு, விளங்கும் தம் சேவடி விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற விடைமீது ஏறி வருபவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
2343 | வருமாகரியி
னுரியார் கருமானுரிதோ லுடையார் திருமாலொடுநான் முகனுந் பெருமானெனவும் வருவார் |
2.080. 9 |
தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.
2344 | தூயவிடைமேல்
வருவார் காயவேவச் செற்றார் தீயகருமஞ் சொல்லுஞ் பேய்பேயென்ன வருவார் |
2.080. 10 |
தூய விடைமீது வருபவர். பகைவர் தம் முப் புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர் மயனத்தில் எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும் சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.
2345 | ரவம்பொழில்சூழ்
கடவூர் அரவமசைத்த பெருமா பரவுமுறையே பயிலும் இரவும்பகலும் பரவி |
2.080. 11 |
குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின் பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப் பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடவூர்மயானம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கடவூர், னடிகளே, அடிகள், மமர்ந்தார், அவரெம்பெருமா, கடவூர்மயான, மயானத்தில், எழுந்தருளியிருப்பவர், உடையவர், வருவார், பெருமானாராகிய, வருபவர், விளங்கும், பெருமான், றிலங்கு, விடைமீது, முடையார், கையில், ஏந்தியவர், சொல்லும், ஒப்பற்றவர், சூழ்ந்த, பொழில், அணிந்தவர், சூடியவர், பொன்னிறமான, ரொருவர், விளங்க, ஒருபாகமாகக், றேந்திக், திருச்சிற்றம்பலம், திருமுறை, மறியார், உமையம்மையை, லுடையார், கொண்டவர், திருக்கடவூர்மயானம், மிசையார்