முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.077.திருஅச்சிறுபாக்கம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.077.திருஅச்சிறுபாக்கம்
1.077.திருஅச்சிறுபாக்கம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாக்கபுரேசர்.
தேவியார் - சுந்தரமாதம்மை.
831 |
பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் குன்றிரண்டன்ன தோளுடையகலங் மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை அன்றிரண்டுருவ மாயவெம்மடிக |
1.077.1 |
அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத் தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.
832 |
தேனினுமினியர் பாலனநீற்றர் ஊனயந்துருக வுவகைகடருவா வானகமிறந்து வையகம்வணங்க ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக |
1.077.2 |
அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றி பெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.
833 |
காரிருளுருவ மால்வரைபுரையக் நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி பேரருளாளர் பிறவியிற்சேரார் ஆரிருண்மாலை யாடுமெம்மடிக |
1.077.3 |
அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத் தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.
834 |
மைம்மலர்க்கோதை மார்பினரெனவு செம்மலர்ப்பிறையுஞ் சிறைபணிபுனலுஞ் தம்மலரடியொன் றடியவர்பரவத் அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக |
1.077.4 |
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச்சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.
835 |
விண்ணுலாமதியஞ் சூடினரெனவும் பண்ணுலாமறைகள் பாடினரெனவும் எண்ணலாகாத விமையவர்நாளு அண்ணலானூர்தி யேறுமெம்மடிக |
1.077.5 |
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.
836 |
நீடிருஞ்சடைமே லிளம்பிறைதுலங்க தோடொருகாதினிற் பெய்துவெய்தாய காடரங்காகக் கங்குலும்பகலுங் ஆடரவாட வாடுமெம்மடிக |
1.077.6 |
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக்காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும் பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.
837 |
ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி கூறுமொன்றருளிக் கொன்றையந்தாருங் நாறுமல்லிகையு மெருக்கொடுமுருக்கு ஆறுமோர்சடைமே லணிந்தவெம்மடிக |
1.077.7 |
அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளைய கிளி போன்ற அழகிய பார்வதி தேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகிய இவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.
838 |
கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பச்சமும்வலியுங் கருதியவரக்கன் தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக |
1.077.8 |
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற் சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித் தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.
839 |
நோற்றலாரேனும் வேட்டலாரேனு கூற்றலாரேனு மின்னவாறென்று தோற்றலார்மாலு நான்முகமுடைய ஆற்றலாற்காணா ராயவெம்மடிக |
1.077.9 |
அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறிய முடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.
840 |
வாதுசெய்சமணுஞ்
சாக்கியப்பேய்க ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா வேதமும்வேத நெறிகளுமாகி ஆதியுமீறு மாயவெம்மடிக |
1.077.10 |
அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேத நெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.
841 |
மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப் கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக் டச்சிறுபாக்கத் தடிகளையேத்து |
1.077.11 |
பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப் பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத் தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாத கருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅச்சிறுபாக்கம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ளச்சிறுபாக்கம, தாட்சிகொண்டாரே, எனவும், இறைவர், கொண்டுள்ள, அச்சிறுபாக்கத்தில், அடிகள், உடையவர், பார்வதி, செய்யாராயினும், இடமாகக், பொருந்திய, விளங்கும், ஆட்சிபுரியும், முடியாத, அழகும், சடைமேல், திருமுறை, கொன்றை, மேனிமேல், அடியவர், ஏந்திய, மலர்கள், ரியல்பினையுடையார், அவர்தம், ஆட்சிகொண்டுள்ள, கொண்டு, இல்லாதவர், விரும்பி, அடிகளாவார், தேவியை, அணிந்து, அச்சிறுபாக்கத்தைத், தோன்றும், திருவடிகளை, விளங்குபவர், ஏறிவரும், மாயவெம்மடிக, நீறுபூசி, பேரருளாளர், திருஅச்சிறுபாக்கம், திருச்சிற்றம்பலம்