முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.003.திருவலிதாயம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.003.திருவலிதாயம்
1.003.திருவலிதாயம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
சுவாமிபெயர் - வலிதாயநாதர்.
தேவியார் - தாயம்மை.
23 |
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை |
1.003.1 |
வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலக மக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.
24 |
படையிலங்குகர மெட்டுடையான்படி கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது அடையநின்றவடி யார்க்கடையாவினை |
1.003.2 |
படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும், பொய்யாகப் பலியேற்பது போலப் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடைய மாட்டா.
25 |
ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை |
1.003.3 |
வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன், நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிறமேனியன், நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும்வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.
26 |
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட பற்றிவாழும்மது வேசரணாவது |
1.003.4 |
அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர, புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி, உழலும் எம்பெருமான், உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.
27 |
புந்தியொன்றிநினை வார்வினையாயின அந்தியன்னதொரு பேரொளியானமர் மந்திவந்துகடு வன்னொடுங்கூடி சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் |
1.003.5 |
வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.
28 |
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் வானியன்றபிறை வைத்தவெம்மாதி தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் |
1.003.6 |
வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தௌவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக்காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும், சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான், மகிழ்ந்துறையும் திருவலி தாயத்தைத் தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.
29 |
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் |
1.003.7 |
வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுல கெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.
30 |
கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் மடலிலங்குகமு கின்பலவின்மது உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ |
1.003.8 |
உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத்துயரம் கெடும் என வினை முடிபு காண்க. திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும், மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும்.
31 |
பெரியமேருவரை யேசிலையாமலை எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி எரியதாகியுற வோங்கியவன்வலி உரியராகவுடை யார்பெரியாரென |
1.003.9 |
வலிதாயத்தை வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர அசுரர்களின் கோட்டைகள் மூன்றையும், மிகப் பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும், திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத் தொழுது ஏத்தலைத் தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.
32 |
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் வாசிதீரவடி யார்க்கருள்செய்து பேசுமார்வமுடை யாரடியாரெனப் |
1.003.10 |
வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர். மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர். குற்றம் தீர, அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே, அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர்.
33 |
வண்டுவைகும்மண மல்கியசோலை தண்டவாணனடி யுள்குதலாலருண் கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் |
1.003.11 |
வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவலிதாயம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முடிபு, பெருமான், கொண்டு, வணங்கும், வலிதாயத்தை, பலரும், நிறைந்த, திருவலிதாயம், உறையும், வலிதாயம், மக்கள், கோயிலாய், பேசும், தீர்தல், இறைவன், இசையோடு, எளிதன்று, திரியும், வளரும், புகழைப், விளங்கும், பெரியார், தொழுது, கெடும், வலிதாய, அடையலாம், வலிதாயத்தின், வாழ்வதே, வந்தடைய, மாட்டா, கள்வனும், அடியவர்கள், கையில், திருமுறை, திருச்சிற்றம்பலம், கின்றவலிதாயம், கோயிலை, உடையதும், தீர்த்து, சிறந்த, நினைந்து, கோயில், உமையம்மையோடு, அடுத்துள்ள, நினைந்தால், தீரும், அடியவர்கட்கு