முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.116.திரு நீலகண்டம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.116.திரு நீலகண்டம்
1.116.திரு நீலகண்டம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக் கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.
1249 |
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு உய்வினை நாடா திருப்பது முந்தமக் கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு |
1.116.1 |
நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம் என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1250 |
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு |
1.116.2 |
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.
1251 |
முலைத்தட மூழ்கிய போகங் களுமற் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறாதிரு |
1.116.3 |
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.
1252 |
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு |
1.116.4 |
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் புண்ணிய வடிவமானவர் என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1253 |
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு |
1.116.5 |
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம்குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவியில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1254 |
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு |
1.116.6 |
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக்கொண்டு பூசித்து உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள் எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
1255 |
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு |
1.116.8 |
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்லமலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் 'தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே! என உருகிப் போற்றுவோமாயின் சிவனடிவழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை. கழலடிக்கே - கே - ஏழன் உருபு. திருவிலித் தீவினை - சிவஞானச் செல்வத்தை இல்லதாக்கும் தீவினை.
1256 |
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் தோற்ற முடைய வடியு முடியுந் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு |
1.116.9 |
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத் தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திரு நீலகண்டத்தின்மேல் ஆணை.
1257 |
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு |
1.116.10 |
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
1258 |
பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் இறந்த பிறவியுண் டாகி லிமையவர் திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் |
1.116.11 |
மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவ பிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 114 | 115 | 116 | 117 | 118 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு நீலகண்டம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நீலகண்டம், அடியவர்கள், தீவினை, அல்லமோ, றாதிரு, தீண்டப்பெ, உடையவரே, அவ்விறைவனை, திருநீலகண்டத்தின், சிவனுக்கு, தீவினைகள், நம்மைத், நோக்கி, தீண்டமாட்டா, போற்றுவோமாயின், கொண்டு, நாமடியோம், பழவினைகள், அவ்வாறு, செய்து, திருவடிகளைப், சிவபிரானுக்கு, வந்துமை, பெருவலிமை, வற்புறுத்திப், மலர்கொடு, நிறைந்த, பறித்த, மாட்டா, தொழுது, வழிபடின், திருவிலித், அப்பெருமானை, போற்றுகின்றோம், கழலடிக்கே, மனத்தை, புண்ணிய, முதலான, வந்தெமைத், கொய்து, போற்றுவோம், செய்யின், திருநீலகண்டத்தின்மேல், போற்றுதும், புண்ணியரே, அடைந்தோம், தொழப்படும், திருமுறை, திருச்சிற்றம்பலம், வாழ்க்கை