சிந்துப்பாவியல்
17.
- இலக்கணம் இல்லன விலக்குதற் குரிய.
விளக்கம் : சிந்துப் பாடல்களின் அசைக்கென மேற் கூறப்பட்ட இலக்கண வரையறைகளுக்குப் புறம்பாக வருவனவெல்லாம் நீக்கப்பட வேண்டியவையாகும்.
- ஓரசை நீட்டம் ஈரசை அளவே - (நூ- 9)
-
ஈருயிர் அசையும் இரண்டிறந் தொலிக்கும்
எவ்வகை அசையும் வழுவசை யாகும் - (நூ - 14)
காட்டு : ஈருயிர் அசை
- நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை - வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (பாபம்)(சித்.பா.224)
-
முடுகியல் நடையுடை இடமொழித் தெங்கும்
ஈருயிர் ஏற்றல் ஓரசைக் கில்லை. (நூ - 15)
-
ஏனைய இடங்களில் இரண்டிறந் திசைப்பவும்
ஈருயிர் ஏற்பவும் வழுவசை யாகும். (நூ - 16)
காட்டு :
- நெஞ்சுபோ றுக்குதில்லை யே . . . . . . இந்த
-
தில் லைச் சி தம்ப ரம் தன்னி லொ ரு நாள் .
திரு நட்ட மாடும்சி வனுட னே . .
தே வி சி வ கா மி நாயகி அந் தத் .
திருநீ ல பத் தன் நெ றி உ ரைக் கச் . .
இவ்வாறு சிந்துப் பாடல்களுக்குக் கூறப்பட்ட பிற இலக்கணங்களுக்கு மாறாக வருவனவும் விலக்குதற்குரியன என்பதையும் இந்நூற்பாவின் கருத்தாகக் கொள்ளலாம்.
18. சீர்
- சீர்வகை செப்பின் நான்கா கும்மே.
விளக்கம் : இதற்கு முன் சிந்துப் பாடல்களில் அமையும் அசை என்பது யாது? என்று கூறி, அவ்வசைகளின் வகைகளாகிய குறிலசை, நெடிலசைகளைக் கூறினார். பின்னர் அசை நீட்டங்களைக் கூறினார். அசைகளில் சிறப்பசைகளையும், சிறப்பிலசைகளையும், வழுவசைகளையும் கூறி, அசைகளாகும் சீர் வகைகளை இங்கு எடுத்துக் கூறுகிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்