சிதம்பரப்பாட்டியல்
7 |
பலவடியா யளவிலவா யொரூஉவெதுகை யிரண்டாம் பாதங்க டொறும்பெறினும் வெள்ளடிகுன் றாவாங் கலிவெண்பா நேரிசையின் னிசைபோன்மூன் றடியேற் கருதப்பேர் சிந்தியலொப் பீரடிசெந் துறையீற் றிலகடிகுன் றுதல்குறட்டா ழிசையடிமூன் றாய்ச்சிந் தீற்றடியா யிறல்வெண்டா ழிசையடிமூன் றீறேழ் குலவடியந் தங்குறையும் வெண்டுறைநான் கடியுங் கொண்டடிகடொறுந்தனிச்சொற்பரவல்வெளிவிருத்தம். |
'பலவடியாய் அளவிலவாய்'
எ-து-பலவடிகளாலும் பஃறொடைவெண்பா முதலான வெண்பாக்கள்போல அடிவரையறுத்துச் சொல்லாமல் அளவிலாத
அடிகளையுடைத்தாய்;
"ஒரூஉவெதுகை யிரண்டாம் பாதங்கடொறும் பெறினும்."
எ-து இரண்டாமடிகடோறும் தனிச்சொல்லாகிய ஒரூஉவெதுகையைப்பெற்றும்;
"பெற்றும்" என்பதனால் ஒரூஉவெதுகை பெறாமலுமாம்;
"வெள்ளடிகுன்றாவாங் கலிவெண்பா"
எ-து-வெள்ளடிக்குச்சொன்ன இலக்கணங்களிற் குறையாமல் வருவது கலிவெண்பா;
"நேரிசையின்னிசைபோன் மூன்றடியேற் கருதப்பேர்சிந்தியல்"
எ-து-நேரிசை வெண்பாப்போலத் தனிச்சொற்பெற்றும்,இன்னிசைவெண்பாப்போலத் தனிச்சொல்லின்றியும்,
மூன்றடியாய்வருமாயின் அவ்வப்பெயராலே நேரிசைச்சிந்தியல் வெண்பாவென்றும், இன்னிசைச்சிந்தியல் வெண்பா
வென்றும் கொள்க.
"பெயர் கருது" என்பதனால், அவைபோல ஒரு விகற்பமும் பல விகற்பமும் கொள்க.
"ஒப்பீரடிசெந்துறை" எ-து-இரண்டடியுந் தம்முள் ஒத்துவருவது வெண்செந்துறை;
"ஈற்றிலகடிகுன்றுதல் குறட்டாழிசை"
எ-து-பலசீரா யீற்றடிகுறைந்து வருவது குறட்டாழிசை; இவ்விரண்டுங் குறட்பாவினம்.
"அடிமூன்றாய்ச் சிந்தீற்றடியாய் இறல் வெண்டாழிசை"
எ-து--மூன்றடியாய் முடிவிலடி முச்சீராய் முடிவது வெண்டாழிசை.
"அடிமூன்றீறேழ் குலவடி அந்தங்குறையும் வெண்டுறை"
எ-து- மூன்றடி முதலாய் ஏழடியீறாய் முடிவிலடி குறைந்து வருவது வெண்டுறை.
"நான்கடியுங் கொண்டடிகடொறுந் தனிச்சொல் பரவல் வெளிவிருத்தம்"
எ-து--நான்கடியு மூன்றடியும்பெற்று அடிதோறு மிறுதியொருசொல் தனிச்சொல்லாய்வருவது வெளிவிருத்தம்.உம்மையான்
மூன்றடியுங் கொள்ளப்பெற்றது.
உதாரணம்:-
"சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடு
மணற்சிற்றில் காலிற் சிதையா வடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நா
ளன்னையும் யானு மிருந்தேமா வில்லிரே
யுண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை
யடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழா
யுண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானுந்
தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்
டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா
வன்னை யலறிப் படர்தரத் தன்னையா
னுண்ணுநீர் விக்கினா னென்றேனா வன்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்
கடைக்கணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ்
செய்தானக் கள்வன் மகன்."
என்னும் பாட்டும் மடல்போல்வனபிறவுந் தனிச்சொல்லின்றி வந்த கலிவெண்பா:-
"வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியா-முட்கா
தெதிரூனறல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி
யதுவளைத்த லாகு முழிஞை-யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார்
செருவென் றதுவாகை யாம்"
என்னும் பாட்டுமுதலாயின போல்வன பிறவுந் தனிச்சொற்பெற்று வந்த கலிவெண்பா:-
"நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே-பொற்றேரான்
பா*நல் வாயின் மகள்" எனவும்,
"அறிந்தானை யேத்தி வறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செல்வ னுரைப்பச்--சிறந்தார்
சிறந்தமை யாராய்ந்து கொண்டு" எனவும்,
இவை, மூன்றடியால் நேரிசை வெண்பாப்போல இரண்டாமடியினிறுதி தனிச்சொற் பெற்று இரு விகற்பத்தானும்
ஒருவிகற்பத்தானும் வந்தமையால் நேரிசைச்சிந்தியல் வெண்பா.
"நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
பறநாட்டுப் பெண்டி ரடி" எனவும்,
"சுரையாழ வ*மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை." எனவும்,
இவை, மூன்றடியால் இன்னிசைவெண்பாப்போற் றனிச்சொல்லின்றி ஒரு விகற்பத்தானும இருவிகற்பத்தானும்
வந்தமையால் இன்னிசைச்சிந்தியல் வெண்பா.
"முல்லை முறுவலித்துக் காட்டின மெல்லவே
சேயிதழ்க் காந்த டுடுப்பீன்ற போயினார்
திண்டேர் வரவுரைக்குங் கார்"
இதுவும் பலவிகற்பத்தான்வந்த இன்னிசைச்சிந்தியல்வெண்பா.
"ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லா
மோதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை" எனவும்,
"கொன்றை வேந்தன் செல்வ னடியிணை
யென்று மேத்தித் தொழுவோம் யாமே."
இவை,ஒழுகியவோசையும் விழுமியபொருளும் பெற்று,இரண்டடியுந்தம்
முள்ளொத்து வந்தமையால் வெண்செந்துறை.
"நண்ணுவார்வினை நையநாடொறு நற்றவர்க்கர சாயஞானநற்
கண்ணினானடியே யடைவார்கள் கற்றவரே" எனவும்,
"நீலமாகடல் நீடுவார்திரை நின்றபோற் பொங்கிப் பொன்று மாங்கவை
காலம்பல் காலஞ்சென்றபின் செல்வர் யாக்கை கழிதலுமே"எனவும்,
இவை,பலசீரா யீற்றடிகுறைந் திரண்டடியாய் வந்தமையாற் குறட்டாழிசை. உரைத்தவிரண்டுங் குறட்பாவினமே.
"நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யா
ரன்பு வேண்டு பவர்."
இது,மூன்றடியா யீற்றடிமுச்சீராய்ப் பிறதளைவிரவி வெண்பாப்போல முடிந்தமையால் வெண்டாழிசை.
"குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய
வழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோ னெஞ்சயர்ந்து கல்லருவி தூஉ
நிழல்வரை நன்னாட னீப்பனோ வல்லன்."
இது, நான்கடியா யீற்றடியிரண்டுஞ் சீர்குறைத்து வந்த ஓரொலிவெண்டுறை.
"ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டா ரொருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தா ரொருசாரார்
ஏகீர் நாகீ ரென்செய்து மென்றா ரொருசாரார்." எனவும்,
"கொண்டன் முழங்கினவாற் கோபம் பரந்தனவா லென்செய்கோயான்
வண்டுவரிபாட வார்தளவம் பூத்தனவா லென்செய்கோயான்
எண்டிசையுந் தோகை யியைந்தகவி யேங்கினவா லென்செய்கோயான்."
எனவும், இஃதடிதோறும்,நாற்சீராய் நான்கடியாலு மூன்றடியாலும் வந்து அடிதோறு மிறுதியிலே யொருசொல்லே
தனிச்சொல்லாக வந்தமையால் வெளிவிருத்தம்.
8 |
பரவகவ லகவலிசை யளவடியீற் றயலிற் பாதமுச்சீர் நேரிசையெவ் வடியுமள வொத்த லருநிலைமண் டிலமிடைச்சீர் குன்றலிணைக் குறளா மாதிநடு வந்தமுறி னடிமறிமண் டிலவா சிரியமூன் றடியொத்த றாழிசைநான் கடியாய்ச் சீரிடையிற் குறைதலிடை மடக்கலீற் றயலின் மருவடிநை வது துறைநான் கடியொத்தா றாதி வளர்சீர்கள் பலவருத லாசிரிய விருத்தம். |
என்பது:-
"பரவகவ .. .....நேரிசை" என்பது, அகவலோசையு மளவடியையு முடைத்தாய் ஈற்றயலடி முச்சீராய் வருவது நேரிசை யாசிரி
யப்பா;
"எவ்வடியு மளவொத்த லருநிலை மண்டிலம்"
எ-து,எல்லாவடி யுந்தம்முள் ளொத்துமுடிவது நிலைமண்டில வாசிரியப்பா;
"இடைச்சீர்குன்றலிணைக் குறளாம்" எ-து இடையிடையே இருசீரடியானும் முச்சீரடியானும் வருவது,
இணைகுறளாசிரியப்பா;
"ஆதி நடு வந்தமுறி னடிமறிமண்டில வாசிரியம்"
எ-து, எல்லாவடியும் முதனடு விறுதியாக உச்சரித்தாலும் பொருள் ஒத்து முடிவது அடிமறி மண்டில வாசிரியப்பாவாம்;
"மூன்றடியொத்தல் தாழிசை"
எ-து,மூன்றடியுந் தம்முள்ளொத்து வருவது ஆசிரியத்தாழிசை;
"நான்கடியாய்ச் சீரிடை குறைதலிடை மடக்கலீற்றயலின் மருவடி நைவது துறை"
எ-து,நான்கடியா யிடையிடை சீர்குறைந்து மிடைமடக்கியுமீற்றயலடிகுறைந்தும் வருவது ஆசிரியத் துறை;
"நான்கடியொத்தாறாதி வளர்சீர்கள் பலவருத லாசிரியவிருத்தம்"
எ-து, நான்கடியுந் தம்மொள்ளொத்து அடிகடோறும் அறுசீர்முதலான சீரையுடைத்தாய்வருவது ஆசிரியவிருத்தம்.
இவற்றிற்கு உதாரணம்:-
"அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி
யரிக்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி
யம்பொற் கொடிஞ்சி நெடுந் தேரகற்றி
யகன்ற வல்கு லந்நுண் மருங்கு
லரும்பிய கொங்கை யவ்வளை யமைத்தோ
ளவிர்மதி யனைய திருநுத லரிவை
யயில்வே லனுக்கி யம்பலைத் தமர்த்த
கருங்கய னெடுங்க ணோக்கமென்
றிருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே."
இஃதீற்றயலடி முச்சீரான் வந்தமையான் நேரிசை யாசிரியப்பா.
"வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ
ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே"
இஃது அளவடியாய் எல்லாவடியுந் தம்முள் ஒத்து வந்தமையால் நிலைமண்டில ஆசிரியப்பா.
"நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீருஞ்
சார னாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாவே"
*"சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
யருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
--- ------ --------
பதினொன்றாமடியும் ஆறுசீரான் வந்தன; ஏனைய நான்கு சீரான் வந்தன; இவ்வாறு வருதலின் அடிமயங்காசிரியமாயிற்று" என்றார் (தொல் செய்யுளியல். "வெண்டளை விரவியும்" என்பதனுரை.) நச்சினார்க்கினியர் "இதனுள் "நரந்த நாறுந் தன்கையால்" எனவும் "அருநிறத் தியங்கிய வேலே"எனவும் தனித்துவந்தன;"பெரியகட் பெறினே" என்பது சொற்சீரடி. இதனைக் குறளடியாக்கிக் குறளடியும் வரும் என்பர் பின்பு நூல்செய்த ஆசிரியர்"(யாப்பருங்கல விருத்திகாரர்) என்றனர்.
(தொல்,செய், "இடையும் வரையார்" என்பதனுரை.)
யிரப்போர் கையுளும் போகிப் புரப்போர்
புன்கண் பாவை சோர வஞ்சொனுண் டேர்ச்சிப்
புலவர் நாவிற் சென்று வீழ்ந்தன் றவ
னருநிறத் தியங்கிய வேலே
யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனி, பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீவு முயிர்தவப் பலவே"
இவை இடையடிக ளொருசீரு மிருசீருங் குறைந்துவந்தமையா லிணைக்குறளாசிரியப்பா.
"சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர்* மகளி ராரணங் கினரே
வார லெனிலே யானஞ் சுவலே
சார னாட னீவர லாறே"
இஃது எல்லாவடியும்,முதனடுவிறுதியாக வுச்சரித்து,அடிமறிமண்டிலமா மொ*று கண்டு கொள்க.
"கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ
னின்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ"
"பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவ
னீங்குநம் மானுள் வருமே லவன்வாயி
லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ"
"கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவ
னெல்லைநம் மானுள் வருமே லவன்வாயின்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ"
இவை மூன்றடியா யொருபொருண்மேன் மூன்றடுக்கி வந்தமையால் ஆசிரியத்தாழிசை.
"வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை
நீனிற வண்ணனின் னிறைகழ றொழுதனம்"
இது தனியேவந்த ஆசிரியத்தாழிசை.
கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழினிறக் குருதிக்
கோட்டின விருந்தாட் பெருங்கைக்
குன்றாமென வன்றாமெனக் குமுறா நின்றன
கொடுந்தொழில் வேழம்
வென்றார்ந் தமைந்த விளங்கொளி யிளம்பிறை
துளங்குவா ளிலங்கெயிற் றழலுளைப் பரூஉத்தா*
ளதிரும் வானென வெதிரும்கூற்றெனச்
சுழலா நின்றன சுழிக்கண் யாளி
சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்ளுகிர்ப்
பொறியெருத் தெறுழ்வலி புலவுநா றழல்வாய்ப்
புனலாமெனக் கனலாமெனப் புகையா நின்றன புலிமா னேற்றை
என்றாங்கிவையிவை யியங்கலினெந்திறத்
தினிவரல்வேண்டலந் தனிவரலெனத்தலை
விலக்கனிறுவரை மிசையெறிகுறும்பிடை
யிதுவென்னெனவது நோனார்கரவிர
விடைக்களவுளமது கற்றோரது கற்பன்றே.
இது நான்கடியாய் முதலடியும் மூன்றாமடியும் பதினான்கு சீராய் ஏனையடி யிரண்டும் பதினாறுசீராய் இடையிடை
குறைந்துவந்த வாசிரியத்துறை.
"இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா
வரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனி
லரங்க மணிபொழிலா வாடுமாயின்
மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்"
இது நான்கடியாய் இடையிடை குறைந் திடைமடக்காய்வந்த ஆசிரியத்துறை.
"கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயி
னரையிருள் யாமத் தடுபுலி யேறஞ்சி யகன்று போக
நரையுரு மேறுநுங் கைவேலஞ்சு நும்மை
வரையா மங்கையர் வௌவுத லஞ்சுதும் வாரலையோ"
இது நான்கடியா யீற்றயலடி குறைந்துவந்த ஆசிரியத்துறை.
"இறைக்குமஞ்சிறைப்பறவைகள்"- இஃதறுசீர்க்கழி நெடிலடியானவந்த ஆசிரிய விருத்தம்.
"கணிகொண்டலர்ந்த"இஃதெழுசீர்க் கழிநெடிலடியான் வந்த ஆசிரியவிருத்தம்.
"இடங்கைவெஞ்சிலை வலங்கைவாளியின்"- இஃது ஒன்பதின்சீர்க்
கழிநெடிலடியான் வந்த ஆசிரியவிருத்தம்.
"கொங்குதங்கு கோதையோதி மாதரோடு"-
இது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த ஆசிரியவிருத்தம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிதம்பரப்பாட்டியல், Chidambarapattiyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்