புறநானூறு - 67. அன்னச் சேவலே!
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்,
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் ! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக், கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலை யாம் கையறுபு இனையக், |
5 |
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது சோழ நன்னாட்டுப் படினே, கோழி உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ, வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
10 |
பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர் ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத், தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 67. அன்னச் சேவலே!, அன்னச், இலக்கியங்கள், சேவலே, புறநானூறு, ஆயின், கோழி, அயிரை, சேவல், எட்டுத்தொகை, சங்க, மாலை