முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 69. காலமும் வேண்டாம்!
புறநானூறு - 69. காலமும் வேண்டாம்!
பாடியவர்: ஆலந்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண்.
துறை: பாணாற்றுப்படை.
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, புரவலர் இன்மையின் பசியே; அரையது வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர் ஓம்பி உடுத்த உயவற் பாண! பூட்கை இல்லோன் யாக்கை போலப் |
5 |
பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை; வையகம் முழுவதுடன் வளைப், பையென என்னை வினவுதி ஆயின், மன்னர் அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக், குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப். |
10 |
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே! பொருநர்க்கு ஓங்கிய வேலன், ஒரு நிலைப் பகைப் புலம் படர்தலும் உரியன் ; தகைத் தார் ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண் |
15 |
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் தேர்வீசு இருக்கை ஆர நோக்கி, நீ அவற் கண்ட பின்றைப், பூவின் ஆடுவண்டு இமிராத் தாமரை |
20 |
சூடாய் ஆதல் அதனினும் இலையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 69. காலமும் வேண்டாம்!, இலக்கியங்கள், காலமும், புறநானூறு, வேண்டாம், ஓங்கிய, செய்த, இலையே, அவன், மன்னர், கிள்ளி, எட்டுத்தொகை, சங்க, என்னை, ஆயின்