முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 68. மறவரும் மறக்களிரும்!
புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!
பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண்.
துறை: பாணாற்றுப்படை.
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது, சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து, அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து |
5 |
மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை, புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச் சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன், |
10 |
உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு ஏவான் ஆகலின், சாவோம் யாம் என, நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத், தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக் கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த |
15 |
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும் உறந்தை யோனே குருசில்; பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!, இலக்கியங்கள், மறவரும், அரசன், மறக்களிரும், புறநானூறு, மறவர், காவிரி, யானை, கொண்டவன், கேள்வி, எட்டுத்தொகை, சங்க, உடும்பு, நொந்து, நெடுந்தகை