புறநானூறு - 65. நாணமும் பாசமும்!
பாடியவர்: கழாஅத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.
திணை: பொதுவியல்.
துறை : கையறுநிலை.
சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.
மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச், சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஓதை மறப்ப, விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, |
5 |
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத், தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் |
10 |
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு, நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 65. நாணமும் பாசமும்!, இலக்கியங்கள், மறப்ப, புறநானூறு, சுடர், நாணமும், மறந்தது, பாசமும், மறந்தனர், அரசன், வடக்கு, துயரம், நோக்கி, கவிழ்ந்து, சங்க, எட்டுத்தொகை, பெருஞ்சேரலாதன், நாணி, தேறல், யாழ், உழவர்