புறநானூறு - 364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல்
துறை: பெருங்காஞ்சி
வாடா மாலை பாடினி அணியப், பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க, மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக், காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை |
5 |
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும், மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே! அரிய வாகலும் உரிய பெரும! நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் |
10 |
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும் கூகைக் கோழி ஆனாத் தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 362 | 363 | 364 | 365 | 366 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 364. மகிழகம் வம்மோ!, இலக்கியங்கள், வம்மோ, மகிழகம், புறநானூறு, பெரும, மகிழலாம், பெருங்காடு, தருவோம், இரப்போர்க்கு, வருக, பாணன், சங்க, எட்டுத்தொகை, கூகைக், பாடினி, உண்டும், தின்றும்