புறநானூறு - 366. மாயமோ அன்றே!
பாடியவர்: கோதமனார்.
பாடப்பட்டோன்: தருமபுத்திரன்.
திணை : பொதுவியல்.
துறை: பெருங்காஞ்சி.
விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம் ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக, அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப, ஒருதா மாகிய பெருமை யோரும், தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே; |
5 |
அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்! . . . . . . . . . . உரைப்பக் கேண்மதி; நின் ஊற்றம் பிறர் அறியாது, பிறர் கூறிய மொழி தெரியா, ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, |
10 |
இரவின் எல்லை வருவது நாடி, உரை . . . . . . . . . . . உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச், செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ, அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, |
15 |
கெடல் அருந் திருவ . . . . . . . மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக், |
20 |
காவு தோறும் . . . . . . . . மடங்கல் உண்மை மாயமோ அன்றே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 364 | 365 | 366 | 367 | 368 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 366. மாயமோ அன்றே!, மாயமோ, கொடு, அன்றே, இலக்கியங்கள், பிறர், புறநானூறு, அவிழ், மாடு, வேண்டுநர்க்கு, சோறு, தேறல், ஊற்றம், எட்டுத்தொகை, எல்லை, உதவி, சங்க