முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
புறநானூறு - 363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல்
துறை: பெருங்காஞ்சி
இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம் உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித், தாமே ஆண்ட ஏமம் காவலர் இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக் காடுபதி யாகப் போகித், தத்தம் |
5 |
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே; அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை மாயமோ அன்றே; கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு. |
10 |
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், உப்பிலாஅ அவிப் புழுக்கல் கைக் கொண்டு, பிறக்கு நோக்காது, இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, நிலங்கல னாக, இலங்குபலி மிசையும் |
15 |
இன்னா வைகல் வாரா முன்னே, செய்ந்நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 361 | 362 | 363 | 364 | 365 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!, இல்லை, இலக்கியங்கள், உயிரும், நின்ற, உடம்பொடு, புறநானூறு, அதனால், உண்மை, காவலர், சென்று, சங்க, எட்டுத்தொகை, தாமே, ஆண்ட