முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 258. தொடுதல் ஓம்புமதி!
புறநானூறு - 258. தொடுதல் ஓம்புமதி!
பாடியவர்: உலோச்சனார்
திணை: வெட்சி
துறை: உண்டாட்டு
முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம் நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு, பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப், |
5 |
புலம்புக் கனனே, புல்அணற் காளை, ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும் தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி; ஆதரக் கழுமிய துகளன், |
10 |
காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 256 | 257 | 258 | 259 | 260 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 258. தொடுதல் ஓம்புமதி!, தொடுதல், ஓம்புமதி, இலக்கியங்கள், கள்ளை, உண்டு, புறநானூறு, வீரன், முதிர்ந்த, அவன், ஒருமுறை, காளை, விளைந்த, எட்டுத்தொகை, எச்சில், சங்க