புறநானூறு - 260. கேண்மதி பாண!
பாடியவர்: வடமோதங்கிழார்
திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்)
துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;
கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம். வளரத் தொடினும், வெளவுபு திரிந்து, விளரி உறுதரும் தீந்தொடை நினையாத் தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள் உளரும் கூந்தல் நோக்கி, களர |
5 |
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக், காணலென் கொல் ? என வினவினை வரூஉம் பாண ! கேண்மதி, யாணரது நிலையே; புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து, |
10 |
எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும், கையுள போலும் கடிதுஅண் மையவே; முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர் நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தம் துடிபுணை யாக, |
15 |
வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து, வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர் கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த உரைய னாகி, |
20 |
உரிகளை அரவ மானத், தானே அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே, கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக், கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே; |
25 |
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி, இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப், படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 258 | 259 | 260 | 261 | 262 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 260. கேண்மதி பாண!, அவன், கேண்மதி, இலக்கியங்கள், பாணன், தந்து, புறநானூறு, உனக்குப், உள்ளது, ஆனிரைகளை, போல், வெள்ளத்தில், நின்றான், கேட்டுக்கொண்டு, முன்புறம், உய்ந்த, பாடாண், சங்க, எட்டுத்தொகை, விளரி, நெஞ்சம், ஆனிரை, மீளி, ஆயினும், மற்றொரு