புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக், களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்! கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் |
5 |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்; வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர் வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், |
10 |
கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி, நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று, இன்னும் இன்னபல செய்குவன், யாவரும் துன்னல் போகிய துணிவினோன், என, ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை |
15 |
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட கால முன்ப! நின் கண்டனென் வருவல்; அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச், சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை |
20 |
வேளை வெண்பூக் கறிக்கும் ஆளில் அத்தம் ஆகிய காடே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!, இலக்கியங்கள், நண்ணார், புறநானூறு, நாணுவர், கூளியர், நின், இன்னும், கறிக்கும், வாகை, கல்லாடனார், எட்டுத்தொகை, சங்க, கானத்து, நெடுஞ்செழியன்