முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 25. கூந்தலும் வேலும்!
புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு, நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு, உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை |
5 |
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப், பிணியுறு முரசம் கொண்ட காலை, நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய! முலைபொலி அகம் உருப்ப நூறி, |
10 |
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, அவிர் அறல் கடுக்கும் அம் மென் குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!, இலக்கியங்கள், கூந்தலும், புறநானூறு, வேலும், கூந்தல், கல்லாடனார், எட்டுத்தொகை, சங்க