முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 21. புகழ்சால் தோன்றல்!
புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை: வாகை.
துறை:அரசவாகை.
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்! நிலவரை இறந்த குண்டுகண் அகழி, வான்தோய் வன்ன புரிசை, விசும்பின் மீன்பூத் தன்ன உருவ ஞாயில், கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, |
5 |
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, வேங்கை மார்பின் இரங்க வைகலும் ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர் |
10 |
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே! இகழுநர் இசையொடு மாயப், புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!, இலக்கியங்கள், தோன்றல், புகழ்சால், புறநானூறு, வேந்தே, வேங்கை, மதில், கோட்டையை, கானப்பேர், அகழி, எட்டுத்தொகை, சங்க, இறந்த, ஞாயில், குறும்பு