புறநானூறு - 183. கற்கை நன்றே!
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே! பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும், |
5 |
மூத்தோன் வருக என்னாது, அவருள் அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே, |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 181 | 182 | 183 | 184 | 185 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 183. கற்கை நன்றே!, இலக்கியங்கள், நன்றே, பிறந்த, புறநானூறு, கற்கை, செல்லும், ஒருவன், பலரில், வருக, கல்வி, எட்டுத்தொகை, சங்க, உள்ளும்