முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 182. பிறர்க்கென முயலுநர்!
புறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர்!
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின், |
5 |
உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித், தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 180 | 181 | 182 | 183 | 184 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 182. பிறர்க்கென முயலுநர்!, பிறர்க்கென, இலக்கியங்கள், முயலுநர், புறநானூறு, வாழ்வதால்தான், வரும், என்றால், உலகில், பிறர், எட்டுத்தொகை, சங்க, உலகம்